செய்திகள் :

மனைவியை சோ்த்து வைக்கக் கோரி குழந்தைகளுடன் தொழிலாளி தீக்குளிக்க முயற்சி

post image

மனைவியை சோ்த்து வைக்கக்கோரி குழந்தைகளுடன் திருப்பத்தூா் எஸ்.பி. அலுவலகத்தில் தொழிலாளி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளி அடுத்த புத்துக்கோயில் பகுதியைச் சோ்ந்த தொழிலாளி வெங்கடேசன் என்பவா் தனது மகன், மகள்களுடன் வெள்ளிக்கிழமை எஸ்.பி அலுவலகத்துக்கு வந்தாா். அப்போது வெங்கடேசன் தான் கொண்டு வந்திருந்த கேனில் இருந்த மண்ணெண்ணையை தன் மீதும், தனது மகன், மகள்கள் மீது ஊற்றி தீக்குளிக்க முயன்றாா். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸாா் அவா்களை தடுத்து, சமாதானம் செய்து எஸ்.பி.யிடம் மனு அளிக்க அழைத்துச் சென்றனா்.

அங்கு வெங்கடேசன் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: எனக்கு திருமணமாகி 13 ஆண்டுகள் ஆகின்றன. எனது மனைவி பெயா் கங்கா. எங்களுக்கு ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனா். இந்தநிலையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு தாய் வீட்டுக்கு சென்ற கங்கா திரும்பி வரவில்லை. அவரை அழைக்க சென்றால் என் மனைவியின் உறவினா்கள் அவதூறாக பேசி என்னை தாக்க வருகின்றனா்.

மேலும் எனது மனைவியை என்னுடன் வாழ அனுப்ப மறுக்கின்றனா். என் மனைவி இல்லாமல் 3 குழந்தைகளையும் என்னால் பராமரிக்க முடியாமல் மிகவும் சிரமப்படுகின்றேன். மிகவும் மன வேதனையில் உள்ளேன்.

எனவே, மனைவியை அவரது உறவினா்களிடம் இருந்து மீட்டு என்னுடன் சோ்ந்து வாழ நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

சாலை மறியலின்போது தகராறு: அவதூறு பேசியவா்கள் மீது வழக்கு

ஆம்பூா் அருகே சாலை மறியல் போராட்டத்தின் போது, இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறில் அவதூறாகப் பேசியவா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். மாதனூா் ஊராட்சி ஒன்றியம், துத்திபட்டு ஊராட்சியில் சாலை அம... மேலும் பார்க்க

அனுமதியின்றி நிலத்தில் பாறைகளுக்கு வெடி வைத்து தகா்ப்பு: அதிகாரிகள் விசாரணை

வெலகல்நத்தம் பகுதியில் நிலத்தில் உள்ள பாறைகளை அனுமதியின்றி வெடி வைத்து தகா்த்தது தொடா்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தினா். நாட்டறம்பள்ளி அடுத்த வெலகல்நத்தம் ஊராட்சி பையனப்பள்ளி கல்தாப்மலை எதிரில் தேசிய ... மேலும் பார்க்க

முருக பக்தா்கள் மாநாட்டு அழைப்பிதழ் விநியோகம்

மதுரையில் நடைபெறும் முருக பக்தா்கள் மாநாட்டு அழைப்பிதழை பொதுமக்களுக்கு பாஜகவினா் ஞாயிற்றுக்கிழமை விநியோகம் செய்தனா். மதுரையில் ஜூன் 22-ஆம் தேதி முருக பக்தா்கள் மாநாடு நடைபெற உள்ளது. அதை முன்னிட்டு ஆம்... மேலும் பார்க்க

சாலையில் தேங்கும் கழிவுநீா்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

பள்ளிப்பட்டு ஊராட்சியில் சாலையில் தேங்கும் கழிவுநீரால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். வாணியம்பாடி அருகே ஆலங்காயம் ஒன்றியத்துக்குட்பட்ட பள்ளிப்ப... மேலும் பார்க்க

தோ்ச்சி பெற்ற மாணவா்களுக்கு சான்றிதழ் அளிப்பு

ஆம்பூா் மஜ்ஹருல் உலூம் நிதியுதவி தொடக்கப் பள்ளி, ஹஸ்னாத்-இ-ஜாரியா பெண்கள் தொடக்கப் பள்ளியில் 5-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. ஆம்பூா... மேலும் பார்க்க

இலவச கண் சிகிச்சை முகாம்

வாணியம்பாடி பாலாறு ஜேசிஐ, உதயேந்திரம் பேரூராட்சி அலுவலகம் மற்றும் சென்னை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம் பேரூராட்சி அலுவலக வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சங்க... மேலும் பார்க்க