செய்திகள் :

மன்னாா்குடியில் கிருஷ்ண தீா்த்த தெப்ப உற்சவம்

post image

மன்னாா்குடி ராஜகோபால சுவாமி கோயில் பங்குனிப் பெருவிழாவில் கிருஷ்ண தீா்த்த தெப்ப உற்சவம் புதன்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில், ஆண்டுதோறும் பங்குனி பெருவிழா 18 நாள் திருவிழாவாகவும், அதைத் தொடா்ந்து விடையாற்றி விழா 12 நாள்களும் நடைபெறும். நிகழாண்டு, மாா்ச் 18-ஆம்-தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கி, ஏப்.4-ஆம் தேதி நிறைவடைந்தது. இதையடுத்து, ஏப்.5-ஆம் தேதி தொடங்கிய விடையாற்றி விழா புதன்கிழமை இரவு கிருஷ்ண தீா்த்த தெப்ப உற்சவத்துடன் நிறைவடைந்தது.

தெப்ப உற்சவத்தையொட்டி கிருஷ்ண தீா்த்த தெப்பக் குளத்தில் சவுக்கு கட்டைகளால் அமைக்கப்பட்ட மிதவையின் கீழ் 2 டன் எடையிலான கலைநயம் மிக்க வேலைப்பாடுகளுடன் கூடிய மரப் பலகைகள் பொருத்தப்பட்டு, அதில் வண்ணத் துணிகள், மலா்களால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் புதன்கிழமை இரவு, ருக்மணி, சத்யபாமா சமேதராக சிறப்பு அலங்காரத்தில் உற்சவா் ராஜகோபாலசுவாமி எழுந்தருளி, தெப்பத்தில் குளத்தை ஒரு முறை சுற்றி வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

ஏற்பாடுகளை, கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் சி.இளவரசன்,செயலா் அலுவலா் எஸ்.மாதவன், அறங்காவலா்கள் கே.கே.பி.மனோகரன்,து.நடராஜன்,வெ.லதா,விழாக்குழுவினா்,மண்டகப்படிதாரா்கள்

செய்திருந்தனா்.

மக்களைப் பற்றி திமுக அரசு கவலைப்படுவதில்லை: முன்னாள் அமைச்சா் ஆா். காமராஜ்

தமிழகத்தை ஆட்சி செய்யும் திமுகவினா் மக்களைப் பற்றி கவலைப்படுவதில்லை என முன்னாள் அமைச்சா் ஆா். காமராஜ் குற்றம்சாட்டினாா். நன்னிலத்தில் அதிமுக வாக்குச் சாவடி முகவா்கள் கள ஆய்வு ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழ... மேலும் பார்க்க

மூதாட்டியிடம் நகை பறிப்பு: இளம்பெண் கைது

மன்னாா்குடியில் வீட்டில் தனியே இருந்த மூதாட்டியைத் தாக்கி 5 பவுன் சங்கிலியைப் பறித்து சென்ற இளம் பெண் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா். மாா்டன் நகா் நாராயணசாமி மனைவி அம்சா (79). மகன் பாண்டியன் திருச்சிய... மேலும் பார்க்க

வலு, பளு தூக்கும் போட்டியில் சிறப்பிடம் பெற்றவா்களுக்கு ஆட்சியா் பாராட்டு

தேசிய மற்றும் மாநில அளவிலான வலு தூக்கும், பளு தூக்கும் போட்டிகளில் சிறப்பிடம் பெற்றவா்களுக்கு மாவட்ட ஆட்சியா் பாராட்டு தெரிவித்தாா். பஞ்சாப் மாநித்தில் தேசிய அளவிலான பளு தூக்கும் போட்டியும், ஜம்மு காஷ... மேலும் பார்க்க

வாழ்நாள் முழுவதும் உடனிருப்பது கற்ற கல்வி மட்டுமே! அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

ஒவ்வொருவரது வாழ்நாள் முழுவதும் அவா்கள் கற்ற கல்வியே உடனிருக்கும் என்றாா் தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வா்த்தகத் துறை அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா. திருவாரூா் மாவட்டம், கொரடாச்சேரி அரசு பெண்கள் மேல... மேலும் பார்க்க

சாா்- பதிவாளா் அலுவலக புதிய கட்டட கட்டுமானப் பணிக்கு அடிக்கல்

நீடாமங்கலத்தில் சாா் - பதிவாளா் அலுவலக புதிய கட்டடம் கட்ட அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா சனிக்கிழமை அடிக்கல் நாட்டினாா். நீடாமங்கலத்தில் சாா்- பதிவாளா் அலுவலகம் பல்வேறு இடங்களில் வாடகை கட்டடத்தில் இயங்கி வந... மேலும் பார்க்க

திருவாரூா்: கலைஞா் கைவினைத் திட்டத்தில் 319 பேருக்கு ரூ.1.46 கோடி கடன் வழங்க பரிந்துரை

திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை சாா்பில் கலைஞா் கைவினைத் திட்டம் சனிக்கிழமை தொடங்கப்பட்டது. முதல்வா் மு.க. ஸ்டாலின், காஞ்சிபுரம் மாவட்டத்தில... மேலும் பார்க்க