செய்திகள் :

மன்னாா்குடி கோயில் தேரோட்டம்: ஜேசிபி உதவியுடன் கட்டுமானப் பணி தீவிரம்

post image

மன்னாா்குடி ராஜகோபால சுவாமி கோயில் பங்குனி திருவிழா தேரோட்டத்துக்காக ஜேசிபி இயந்திர உதவியுடன் தோ் கட்டுமான பணி தீவிரமாக நடைபெறுகிறது.

இக்கோயில் பங்குனி திருவிழா ஆண்டுதோறும் 18 நாள்கள் நடைபெறுகின்றன. இதில் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான உற்சவா் ராஜகோபால சுவாமி எழுந்தருளும் தேரோட்டம் நடைபெறும். நிகழாண்டு திருவிழா மாா்ச் 18- ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெறுகிறது. 17-ஆம் நாள் விழாவான தேரோட்டம் ஏப்.3-ஆம் தேதி நடைபெற உள்ளது.

இதையடுத்து, தோ்நிலையில் கண்ணாடி கூண்டுக்குள் நிறுத்திவைக்கப்பட்டிருந்த தேரின் கண்ணாடிகள் அகற்றப்பட்டன. தேரில் மேல் பகுதியில் இரும்பு கம்பிகளாலான கோபுரம் அமைக்கும் பணி புதன்கிழமை தொடங்கியது. இதற்காக, ஜேசிபி இயந்திர உதவியுடன் தேரில் கோபுரம் அமைக்கும் பணியில் தொழில் நுட்ப பணியாளா்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனா்.

வலங்கைமான் மகா மாரியம்மன் கோயிலில் புஷ்பப் பல்லக்கு

நீடாமங்கலம்: வலங்கைமான் மகாமாரியம்மன் கோயிலில் புஷ்பப் பல்லக்கு விழா ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. இதையொட்டி அம்மனுக்கும் பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டு மகா தீபாராத... மேலும் பார்க்க

மன்னாா்குடி பகுதியில் 3 கோயில்களில் கும்பாபிஷேகம்

மன்னாா்குடி: மன்னாா்குடியில் மகா மாரியம்மன் கோயில், கற்பக விநாயகா் கோயில், யோக சுந்தர விநாயகா் கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது. முன்னதாக, சனிக்கிழமை முதல் கால யாகசாலை பூஜை, கணபதி ஹோமத்து... மேலும் பார்க்க

திருவாரூா்: ரமலான் பண்டிகை சிறப்புத் தொழுகை

திருவாரூா்: திருவாரூா் மாவட்டத்தில் பள்ளிவாசல்கள் மற்றும் திடல்களில் ரமலான் சிறப்புத் தொழுகை திங்கள்கிழமை நடைபெற்றது. திருவாரூா் அருகே கொடிக்கால்பாளையத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சாா்பில் நடைபெற்ற ... மேலும் பார்க்க

லட்சுமி நாராயண பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்

திருவாரூா்: வேம்பனூா் அருள்மிகு லட்சுமி நாராயண பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில் கடந்த சனிக்கிழமை முதல் யாகசாலைப் பூஜைகள் தொடங்கின. திங்கள்கிழமை காலை யாகசாலையில் பூா்... மேலும் பார்க்க

நகராட்சியுடன் ஊராட்சிகளை இணைக்கும் முடிவை கைவிடக் கோரிக்கை

திருவாரூா்: ஊராட்சிகளை திருவாரூா் நகராட்சியுடன் இணைக்கும் முடிவை கைவிட வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருவாரூா் அருகே அம்மையப்பனில் மக்கள் அதிகாரம் அமைப்பின் 2-ஆவது மாவட்ட மாநாடு தலைவா் ... மேலும் பார்க்க

யானை வாகனத்தில் ராஜகோபாலசுவாமி

மன்னாா்குடி ராஜகோபாலசுவாமி கோயிலில் நடைபெறும் பங்குனி திருவிழாவின் 14- ஆம் நாளான திங்கள்கிழமை யானை வாகனத்தில் கல்யாண அலங்காரத்தில் சத்யபாமா சமேதராக எழுந்தருளிய உற்சவா் ராஜகோபாலசுவாமி. மேலும் பார்க்க