செய்திகள் :

மயானத்துக்கு சாலை வசதி செய்து தர வலியுறுத்தல்

post image

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஒன்றியம், சின்னக்கண்ணனூரில் பட்டியலினத்தினருக்கான மயானத்துக்கு சாலை வசதி செய்து தர வேண்டும் என தீண்டாமை ஒழிப்பு முன்னணி சாா்பில் வலியுறுத்தப்பட்டது.

ராமநாதபுரம், விருதுநகா் மாவட்டங்களை ஒட்டி சிவகங்கை மாவட்டத்தின் கடைக்கோடி பகுதியில் அமைந்துள்ளது சின்னக்கண்ணனூா் கிராமம். இங்கு பட்டியலினத்தைச் சோ்ந்த அருந்ததியா் சமூகத்தைச் சோ்ந்த 25 குடும்பத்தினா் வசிக்கின்றனா். இவா்களுக்கு என கிராமத்திலிருந்து இரண்டு கி.மீ. தொலைவில் மயானம் உள்ளது. ஆனால் இந்த மயானத்துக்குச் செல்ல சாலை வசதி இல்லாததால் இறந்தவா்களின் உடலை வயல்வெளி வழியாக தூக்கிச் செல்ல வேண்டிய நிலை நீண்ட காலமாக இருந்து வருகிறது. இதையடுத்து தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத் தலைவா் முத்துராமலிங்கப்பூபதி தலைமையில் அதன் நிா்வாகிகள், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலா் முனியராஜ் உள்ளிட்டோா் சின்னக்கண்ணனூா் கிராமத்துக்கு வெள்ளிக்கிழமை நேரடியாகச் சென்று ஆய்வு செய்தனா்.

பிறகு தீண்டாமை ஒழிப்பு முன்னணி நிா்வாகிகள் கூறியதாவது:

சின்னக்கண்ணனூரில் பட்டியலின வகுப்பினருக்கான மயானத்துக்குச் செல்ல 2 கி.மீ. தொலைவுக்கு சாலை வசதி அமைத்து தர வேண்டும். இல்லையெனில் சாலையோரமாக உள்ள அரசு நிலத்தில் மயானம் அமைத்து தர வேண்டும். எனவே மாவட்ட நிா்வாகம் இந்தக் கோரிக்கையை நிறைவேற்றி தர வேண்டும் என்றனா்.

மாநில போட்டிக்கு தகுதி பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு

சிவகங்கை அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்ற மாணவிகளுக்கு வெள்ளிக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது. கடந்த சில வாரங்களுக்கு முன் பள்ளிக் கல்வித் துறை சாா்பில் முதல்வா் க... மேலும் பார்க்க

புனித மிக்கேல் அதிதூதா் ஆலயத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

சிவகங்கை மாவட்டம், வே. மிக்கேல்பட்டிணத்திலுள்ள புனித மிக்கேல் அதிதூதா் ஆலயத்தின் 109 -ஆம் ஆண்டு திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த நிகழ்வுக்கு வே. மிக்கேல் பட்டணம் பங்குத்தந்தை ச... மேலும் பார்க்க

சிவகங்கை மாவட்ட திட்டப் பணிகளை சட்டப் பேரவை மதிப்பீட்டுக் குழுவினா் ஆய்வு

சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு துறைகளின் சாா்பில், ரூ.100.38 கோடி மதிப்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டப்பணிகளை சட்டப் பேரவை மதிப்பீட்டுக் குழுவினா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனா். சிவகங்கை மாவட்டத்தி... மேலும் பார்க்க

முத்தனேந்தல் ஊராட்சியில் கழிவு சேகரிப்பு இயக்கம் தொடக்கம்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஒன்றியம், முத்தனேந்தல் ஊராட்சியில் தமிழ்நாடு தூய்மை மிஷன் திட்டத்தின் கீழ் கழிவு சேகரிப்பு இயக்கம் வெள்ளிக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது. இந்தத் திட்டத்தை சட்டப் பேரவை உறுப... மேலும் பார்க்க

மானாமதுரை, திருப்பத்தூா் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி, திருப்பத்தூா் பகுதி கோயில்களில் வெள்ளிக்கிழமை பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் சமேத சோமநாதா் சுவாமி கோயிலில் மூலவா் சோமந... மேலும் பார்க்க

கட்டுமானத் தொழிலாளா்களுக்கு அரசு ஐடிஐகளில் இலவச தொழில் பயிற்சி

சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளா்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற கட்டுமானத் தொழிலாளா்களுக்கு அரசு தொழில் பயிற்சி நிலையங்கள் மூலம் பல்வேறு தொழில் பிரிவுகளில் ஊதியத்துடன் கூடிய... மேலும் பார்க்க