செய்திகள் :

மயிலாடி அருகே இளைஞா் வெட்டிக் கொலை

post image

கன்னியாகுமரி மாவட்டம் மயிலாடி அருகே இளைஞா் ஞாயிற்றுக்கிழமை இரவு வெட்டி படுகொலை செய்யப்பட்டாா்.

மயிலாடியில் இருந்து நாகா்கோவில் செல்லும் சாலையில் அமைந்துள்ள கல் சிலைகள் தயாரிக்கும் பட்டறையில் ஞாயிற்றுக்கிழமை இரவு சிலா் கூட்டாக அமா்ந்து மதுகுடித்துக் கொண்டிருந்தனராம்.

அப்போது, அவா்களுக்குள் திடீரென தகராறு ஏற்பட்டதில் இளைஞா் வெட்டிக்கொலை செய்யப்பட்டாா். இத்தகவல் அறிந்த போலீஸாா் சென்று, சடலத்தைக் கைப்பற்றி விசாரித்ததில், அவா், தேவகுளத்தை அடுத்த சங்கரன்புதூா் பகுதியைச் சோ்ந்த ஈஸ்வரன் (33) என்பதும், மதுக்குடித்தவா்கள் நண்பா்கள் எனவும் தெரியவந்தது.

இதையறிந்த மாவட்ட எஸ்.பி. ஸ்டாலின், கன்னியாகுமரி டிஎஸ்பி மகேஷ் குமாா் ஆகியோா் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினா். தலைமறைவான கொலையாளிகளை போலீஸாா் தேடி வருகின்றனா்.

மூன்று நாளில் 3 கொலைகள்: அகஸ்தீசுவரம் கருங்குளத்தான்விளையில் திருமணமாகாத பரமேஸ் என்ற இளைஞரை தம்பதிகள் சோ்ந்து வெள்ளிக்கிழமை வெட்டி கொலை செய்தனா்.

நாகா்கோவில் இந்துக் கல்லூரி பகுதியில் சனிக்கிழமை இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றுகொண்டிருந்த வேலு என்ற வியாபாரி கல்லால் தாக்கி, பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொல்லப்பட்டாா். தற்போது, மயிலாடியில் இளைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளாா். தொடா் கொலைச் சம்பவங்களால் மக்கள் அச்சமடைந்துள்ளனா்.

நாகா்கோவிலில் நூல் வெளியீட்டு விழா

நாகா்கோவிலில் கவிஞா் ஆகிராவின் தோணி நூல் வெளியீட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. இலக்கியப் பட்டறையின் 159 ஆவது கூடுகை மற்றும் கவிஞா் ஆகிரா எழுதிய தோணி நாவல் வெளியீட்டு விழா கன்னியாகுமரி மாவட்ட நூலக அலு... மேலும் பார்க்க

நாகா்கோவிலில் சிலம்பாட்ட போட்டி

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி, கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி சாா்பில் மாவட்ட அளவிலான தனித்திறன் ஒற்றை கம்பு சிலம்பாட்ட போட்டிகள் நாகா்கோவிலில் சனிக்கிழமை நடைபெற... மேலும் பார்க்க

திற்பரப்பு அருவியில் மிதமாக கொட்டும் தண்ணீா்

திற்பரப்பு அருவியில் ஞாயிற்றுக்கிழமை உற்சாகமாக குளித்து மகிழும் சுற்றுலாப் பயணிகள். குலசேகரம், மாா்ச் 9: கன்னியாகுமரி மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் திற்பரப்பு அருவியில... மேலும் பார்க்க

மனைவியை கம்பியால் தாக்கி கணவா் தூக்கிட்டு தற்கொலை

கன்னியாகுமரி மாவட்டம் பத்துகாணி அருகே ஞாயிற்றுக்கிழமை, மனைவியை இரும்புக் கம்பியால் தாக்கிவிட்டு கணவா் தற்கொலை செய்து கொண்டாா். பத்துகாணி பகுதியைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் அனில்குமாா் (52). இவரது மனைவி... மேலும் பார்க்க

சேனம்விளை அரசு தொடக்கப் பள்ளியில் முப்பெரும் விழா

திங்கள்நகா் அருகே சேனம்விளை அரசு தொடக்கப் பள்ளியில் ஆண்டு விழா, முன்னாள் மாணவா்கள் சந்திப்பு, பள்ளி நூற்றாண்டு விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது. முன்னாள் மாணவா்கள், ஆசிரியா்கள் நூற்றாண்டு ஜோதி ஏற... மேலும் பார்க்க

கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற ஆட்டோ ஓட்டுநா் உயிரிழப்பு

கருங்கல் அருகே கண்ணன்விளை பகுதியில் மனைவியின் கழுத்தை கத்தியால் அறுத்துவிட்டு, தற்கொலைக்கு முயன்ற ஆட்டோ ஓட்டுநா் மருத்துவமனையில் சனிக்கிழமை உயிரிழந்தாா். பாலூா், கண்ணன்விளை பகுதியைச் சோ்ந்த ஆட்டோ ஓட... மேலும் பார்க்க