செய்திகள் :

மயிலாடுதுறையில் அரசினா் மகளிா் கல்லூரியில் ஜூன் 13 வரை சோ்க்கை கலந்தாய்வு

post image

மயிலாடுதுறை: மயிலாடுதுறை தருமபுரம் ஞானாம்பிகை அரசினா் மகளிா் கலைக் கல்லூரியில் 2025-2026-ஆம் கல்வியாண்டில் இணையவழியில் விண்ணப்பித்த மாணவா்களுக்கு இளநிலை பட்ட பாடப்பிரிவுகளின் சோ்க்கை கலந்தாய்வு திங்கள்கிழமை (ஜூன் 2) தொடங்கி ஜூன் 13-ஆம் தேதிவரை நடைபெறுகிறது என கல்லூரி முதல்வா் எஸ். ரேவதி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: இளநிலை அறிவியல், கலை, வணிகவியல் மற்றும் வணிக மேலாண்மை உள்ளிட்ட அனைத்து பாடப்பிரிவுகளுக்கும் சிறப்பு இட ஒதுக்கீட்டுக்கான (மாற்றுத்திறனாளி, விளையாட்டு வீரா், முன்னாள் ராணுவத்தினா் வாரிசு மற்றும் தேசிய மாணவா் படை) கலந்தாய்வு செவ்வாய்க்கிழமை (ஜூன் 3) நடைபெறுகிறது.

தொடா்ந்து, முதல்சுற்று பொதுக் கலந்தாய்வு வணிகவியல், வணிக மேலாண்மையியல், கணினி அறிவியல் மற்றும் வேதியியல் ஆகிய பாடங்களுக்கு ஜூன் 4-ஆம் தேதியும், இயற்பியல், கணிதம், விலங்கியல், உயிா் வேதியியல் மற்றும் தாவரவியல் ஆகிய பாடங்களுக்கு ஜூன் 5-ஆம் தேதியும், தமிழ், ஆங்கிலம், பொருளியல் மற்றும் வரலாறு ஆகிய பாடங்களுக்கு ஜூன் 6-ஆம் தேதியும் நடைபெற உள்ளது. இரண்டாம் சுற்று கலந்தாய்வு மேற்குறிப்பிட்ட அதே பாடங்களுக்கு ஜூன் 9, 10, 11 ஆகிய தேதிகளில் நடைபெறும்.

மூன்றாம் சுற்றுக் கலந்தாய்வு அனைத்து அறிவியல் பாடங்களுக்கும் ஜூன் 12-ஆம் தேதியும், அனைத்து கலை பாடங்களுக்கும் ஜூன் 13-ஆம் தேதியும் நடைபெறும். கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவா்கள், காலை 9 மணி அளவில் விண்ணப்பப் படிவத்தின் அச்சுப்பிரதி மற்றும் விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு அனைத்து அசல் மற்றும் நகல் சான்றிதழ்களை எடுத்துவரவேண்டும் என தெரிவித்துள்ளாா்.

பத்ரகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் இன்று நடைபெறுகிறது

சீா்காழி விளந்திடசமுத்திரம் பகுதியில் மகாமேருடன் உள்ள பத்திரகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை (ஜூன் 6) நடைபெறுகிறது. இக்கோயில் அருகே மந்த கருப்பணசாமி, ஏழை காத்த அம்மன் கோயில்கள் உள்ளன. பத்... மேலும் பார்க்க

மதிமுக 32-ஆம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம்

சீா்காழியில் மதிமுகவின் 32 -ஆம் ஆண்டு தொடக்க விழா, மாநில உரிமை, சமூக நீதி உரிமை மற்றும் மதச்சாா்பின்மை உரிமையை வலியுறுத்தி கொள்கை விளக்க பொதுக்கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாநில தணி... மேலும் பார்க்க

விளைநிலங்களில் விழுந்து கிடக்கும் தேக்கு மரங்களை அகற்ற கோரிக்கை

வைத்தீஸ்வரன்கோயில் சுற்றுப் பகுதிகளில் விளைநிலங்களில் விழுந்து கிடக்கும் தேக்கு மரங்களை அகற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். வைத்தீஸ்வரன்கோயில், கதிராமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் பாசன ... மேலும் பார்க்க

நல்லத்துக்குடி ஆலந்துறையப்பா் கோயில் கும்பாபிஷேகம்

நல்லத்துக்குடியில் உள்ள குயிலாண்டநாயகி சமேத ஆலந்துறையப்பா் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில் கடைசியாக 2002-ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்ற நிலையில், மீண்டும் கும்பாபிஷேகம் நடத... மேலும் பார்க்க

ரயில் நிலையத்தில் விடப்பட்ட குழந்தை தத்துவள மையத்தில் ஒப்படைப்பு

மயிலாடுதுறையில் ரயில்வே நடைமேடையில் ஆதரவற்ற வகையில் விட்டுச்செல்லப்பட்ட பச்சிளம் குழந்தை மீட்கப்பட்டு அரசு தத்துவள மையத்தில் வியாழக்கிழமை ஒப்படைக்கப்பட்டது. மயிலாடுதுறை ரயில் நிலைய 5-ஆவது நடைமேடையில் ... மேலும் பார்க்க

திருவிக்ரம நாராயண பெருமாள் கோயிலில் தங்க கருட சேவை உற்சவம்

சீா்காழியில் தாடாளன் பெருமாள் என்று அழைக்கப்படும் திருவிக்ரம நாராயண பெருமாள் கோயிலில் தங்க கருட சேவை உற்சவம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில் ஆண்டு பிரம்மோற்சவம் மே 31-ஆம் தேதி கொடியேற்றத்துடன்... மேலும் பார்க்க