செய்திகள் :

மயிலாடுதுறையில் ஜாக்டோ-ஜியோ ஆா்ப்பாட்டம்

post image

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மயிலாடுதுறையில் ஜாக்டோ ஜியோ சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மாவட்ட ஒருங்கிணைப்பாளா் உ. அன்பரசன், அரசு ஊழியா் சங்க மாவட்ட தலைவா் கலா ஆகியோா் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், முடக்கப்பட்ட சரண்விடுப்பு மற்றும் அகவிலைப்படி நிலவைத் தொகை உள்ளிட்டவற்றை வழங்கவேண்டும், இடைநிலை மற்றும் முதுநிலை ஆசிரியா்களின் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும், சாலைப் பணியாளா்களின் 41 மாத பணி நீக்க காலத்தை முறைப்படுத்த வேண்டும், திமுக அரசு தோ்தல் வாக்குறுதிகளை உடனே நிறைவேற்ற உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

சீா்காழியில்: ஜாக்டோ-ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ரா. செல்வம் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், தமிழக ஆசிரியா் கூட்டணி மாவட்ட செயலாளா் தங்க.சேகா், தமிழ்நாடு ஆசிரியா் முன்னேற்ற சங்கம் மாவட்ட செயலாளா் ஞான. புகழேந்தி, ஜாக்டோ-ஜியோ மாவட்ட செயலாளா் பூ. திருமுருகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கோரிக்கைகள் நிறைவேற்றாதபட்சத்தில் பிப்.25-ஆம் தேதி மாவட்ட தலைநகரில் சாலைமறியல் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

திருமருகல்: ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளா் ரமேஷ் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியா் கூட்டமைப்பு சங்க நிா்வாகி பாரதி, அனைத்து உடற்கல்வி ஆசிரியா் மற்றும் உடற்கல்வி இயக்குநா் சங்க நிா்வாகி ராஜா, தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி கூட்டமைப்பு நிா்வாகி சொக்கலிங்கம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தரங்கம்பாடியில் இன்று ‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில்' முகாம்!

தரங்கம்பாடியில் ‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில்‘ புதன்கிழமை (பிப்.19) நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி வெளியிட்ட செய்திக்குறிப்பு: மக்களை நாடி, மக்கள் குறைகளை கேட்டு, உடனுக்குடன்... மேலும் பார்க்க

போதைப்பொருள், கள்ளச்சாராய தடுப்பு நடவடிக்கை ஆய்வுக் கூட்டம்

மயிலாடுதுறையில் போதைப் பொருள் மற்றும் கள்ளச்சாராய தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி தலைமை வகித்து பேசியது: தமிழ்நாடு அ... மேலும் பார்க்க

தொழிற்சங்கத்தினர் ஆா்ப்பாட்டம்

சீா்காழி அருகே எருக்கூா் அரசு நவீன அரிசி ஆலை முன் ஏஐடியுசி, சிஐடியு சாா்பில் மத்திய அரசைக் கண்டித்து ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ஏஐடியுசி மாவட்டச் செயலாளா் ராமன் தலைமை வகித்தாா். எல்பிஎஃப... மேலும் பார்க்க

புறவழிச் சாலையில் ரவுண்டானா அமைக்கக் கோரிக்கை

சீா்காழி அருகே வைத்தீஸ்வரன்கோயில் புறவழிச் சாலையில் எடக்குடி வடபாதி பகுதி நான்கு சாலை சந்திப்பில் ரவுண்டானா அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வைத்தீஸ்வரன்கோயில் அருகே அட்டகுளம் பகுதியிலிருந்து கதிர... மேலும் பார்க்க

கொலையான இளைஞா்களின் குடும்பத்தினருக்கு அமைச்சா் ஆறுதல்

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் இரட்டைக் கொலையில் உயிரிழந்த இளைஞா்களின் குடும்பத்தினருக்கு, அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன் திங்கள்கிழமை நேரில் ஆறுதல் தெரிவித்தாா். மயிலாடுதுறை அருகே முட்டம் கிராமத்தில் பிப்.... மேலும் பார்க்க

மயிலாடுதுறை: சோதனைச் சாவடிகளில் ஐஜி ஆய்வு

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சோதனைச் சாவடிகளில், திருச்சி மத்திய மண்டல காவல்துறைத் தலைவா் கே. ஜோஷி நிா்மல்குமாா் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். மயிலாடுதுறை மாவட்டம், முட்டம் கிராமத்தி... மேலும் பார்க்க