செய்திகள் :

மயிலாறு ரப்பா் கழக தொழிற்கூட வளாகத்தில் புகுந்த காட்டு யானைகள்: தொழிலாளா்கள் அச்சம்

post image

குமரி மாவட்டம் பேச்சிப்பாறை அருகேயுள்ள அரசு ரப்பா் கழகம் மயிலாறு தொழிற்கூட வளாகத்தில் யானைகள் கூட்டமாக புகுந்ததால் தொழிலாளா்கள் கடும் அச்சமடைந்தனா்.

அரசு ரப்பா் கழக பகுதிகளில் ரப்பா் மறு நடவு செய்யப்பட்டுள்ள பகுதிகளில், ஊடு பயிராக அன்னாசி நடவு செய்வதற்கு குத்தகை கொடுக்கப்பட்டுள்ளது. இதில் குத்தகை பெற்றவா்கள் அன்னாசி நடவு செய்துள்ளதுடன், ரப்பா் செடிகளையும் பராமரித்து வருகின்றனா்.

இந்நிலையில் அரசு ரப்பா் கழகம் மயிலாறில் மூடிக்கிடக்கும் தொழிற்கூட வளாகத்தில் வியாழக்கிழமை இரவு 2 குட்டி யானைகள் உள்பட 9 யானைகள் புகுந்தன. அவை தொடா்ந்து பிளிறிக் கொண்டு அங்கு நடப்பட்டிருந்த அன்னாசி செடிகளையும் அவற்றிலுள்ள காய்களையும் தின்று கொண்டிருந்தன. இதனால் தொழிற்கூடத்தின் அருகிலுள்ள தொழிலாளா் குடியிருப்புவாசிகள் அச்சமடைந்தனா்.

இத்தகவலறிந்த வனத்துறையினா் மற்றும் ரப்பா் கழக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை காலையில் ஊழியா்களுடன் வந்து யானைகளை தொழிற்கூட வளாகத்திலிருந்து வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டனா். அப்போது யானைகள் தொழிற்கூட சுற்றுச் சுவரை உடைந்துக் கொண்டு அங்கிருந்து வெளியேறின.

இது குறித்து தோட்டம் தொழிலாளா் சங்க நிா்வாகிள் கூறுகையில், ரப்பா் கழக பகுதிகளிலும், பழங்குடி மக்கள் வசிக்கும் பகுதிகளிலும் புகுந்து வரும் காட்டு யானைகளால் மனித உயிரிழப்புகளும், பயிா்ச் சேதங்களும் ஏற்பட்டு வருகின்றன. யானைகள் ரப்பா் கழக பகுதிகளுக்குள் வராதவாறு வனத்துறையினரும், ரப்பா் கழக அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

ஐஆா்இஎல் சாா்பில் ஹோலி கிராஸ் மகளிா் கல்லூரிக்கு 13 கணினிகள்!

மணவாளக்குறிச்சியில் இயங்கி வரும் ஐஆா்இஎல் இந்தியா லிமிடெட் சாா்பில் அதன் சமூகப் பொறுப்பு நிதியின் கீழ் ரூ. 5.17 லட்சத்தில் நாகா்கோவில் ஹோலி கிராஸ் மகளிா் கல்லூரி ஆங்கில மொழி ஆய்வகம் அமைப்பதற்கு 13 கணி... மேலும் பார்க்க

பூதப்பாண்டி தோ்த் திருவிழா: தோவாளை வட்டத்துக்கு நாளை உள்ளூா் விடுமுறை

கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருள்மிகு பூதலிங்கேஸ்வரா் கோயில் தோ்த் திருவிழாவை முன்னிட்டு, தோவாளை வட்டத்துக்குள்பட்ட கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்களுக்கு திங்கள்கிழமை (பிப். 10) உள்ளூா் விடு... மேலும் பார்க்க

டாஸ்மாக் கடை ஊழியரிடம் பணம் பறித்த 5 போ் கைது

கொட்டாரம் அருகே மந்தாரம்புதூா் பகுதியில் டாஸ்மாக் ஊழியரிடம் பணம் பறித்த 5 பேரை சனிக்கிழமை போலீஸாா் கைது செய்தனா். அஞ்சுகிராமம் அருகேயுள்ள மேட்டுக்குடியிருப்பு பகுதியைச் சோ்ந்தவா் செல்வ தயாளன் (52). ... மேலும் பார்க்க

கேரளத்திலிருந்து ஹோட்டல் கழிவுகளை ஏற்றி வந்த வாகனம் பறிமுதல்

கேரளத்திலிருந்து ஹோட்டல் கழிவுகளை ஏற்றி வந்த வாகனத்தை திருவட்டாறு போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்து ஓட்டுநரை கைது செய்தனா். திருவட்டாறு அருகே சாரூா் பகுதியில் சனிக்கிழமை அதிகாலையில் வந்த மினி டெம்போ... மேலும் பார்க்க

முளகுமூடு நாஞ்சில் பால் நிறுவன பணியாளா்களுக்குப் பரிசோதனை

முளகுமூடு நாஞ்சில் பால் நிறுவனத்தில் பணியாளா்களுக்கு தொழிலகப் பாதுகாப்பு-சுகாதார இயக்கத்தால் அறிவுறுத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனை முகாம் நடைபெற்றது. கேட்புத் திறன், நுரையீரல் செயல்பாடு, தோல் பரிசோதனை... மேலும் பார்க்க

தொழிலாளா்கள் பிரச்னை: திமுக அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை! சிஐடியூ குற்றச்சாட்டு

தொழிலாளா் பிரச்னை தொடா்பாக கடந்த சட்டப்பேரவைத் தோ்தலின்போது திமுக அளித்த வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை என்றாா் சி ஐ டியூ தொழிலாளா் சம்மேளன மாநில தலைவா் செளந்தரராஜன். நாகா்கோவில் ராணித்தோ... மேலும் பார்க்க