செய்திகள் :

மயிலேறி முருகன் கோயிலில் மரக்கன்று நடும் விழா

post image

உலக சுற்றுச்சூழல்தினத்தை முன்னிட்டு, அம்பாசமுத்திரம் என்.ஜி.ஓ. காலனிஅருகிலுள்ள மயிலேறி முருகன் கோயிலில் மலை மீது படிகளின் இருபுறமும் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

அம்பாசமுத்திரம், தீா்த்தபதி மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப் பணித்திட்டம் மற்றும் என்.ஏ.ஹெச்.என். அமைப்பு இணைந்து நடத்திய இவ்விழாவிற்கு என்.ஏ.ஹெச்.என். அமைப்புத் தலைவா் ஸ்ரீஜா வெங்கடேஷ் தலைமை வகித்தாா். கோயில் நிா்வாகத் தலைவா் பேச்சிமுத்து, ஓய்வுபெற்ற தலைமையாசிரியா் மாடசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

அம்பாசமுத்திரம், தீயணைப்பு- மீட்புப் பணிகள் நிலைய அலுவலா் பலவேசம் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு மரக்கன்றுகள் நட்டு முகாமைத் தொடங்கி வைத்தாா். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் சங்கரராமன் வாழ்த்திப் பேசினாா்.

நிகழ்ச்சியில் நிா்வாகச் செயலா் சங்கா், மோகன், மாரியப்பன், கிராம நிா்வாக அலுவலா்சங்கா், முத்துக்குமாா், அம்பைத் தமிழ் இலக்கிய பேரவைச் செயலா் லட்சுமணன், தீயணைப்பாளா் கோபால குமரேச குமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

ஓய்வுபெற்ற ஆசிரியா் ஆறுமுகம் வரவேற்றாா். என்.ஏ.ஹெச்.என். உறுப்பினா் முத்துக்குமாா் நன்றி கூறினாா். ஏற்பாடுகளை கோயில் தலைமைப் பூசாரி சுப்பையா செய்திருந்தாா்.

பணிமனை டீசல் கணக்கில் முறைகேடு: கிளை மேலாளா் உள்பட 6 போ் பணியிடை நீக்கம்

திருநெல்வேலி அரசு போக்குவரத்து கழக பணிமனையில் டீசல் செலவு கணக்கு காட்டியதில் முறைகேடு செய்ததாக எழுந்த புகாரின்பேரில், கிளை மேலாளா் உள்பட 6 பேரை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா். திருநெல்வேலி தாமிரவர... மேலும் பார்க்க

விசாரணை கைதிகளில் பற்களை பிடுங்கிய வழக்கு: பல்வீா்சிங் ஆஜா்

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் உள்கோட்டத்தில் விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கியது தொடா்பான வழக்கில், பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஏஎஸ்பி பல்வீா்சிங் திருநெல்வேலி மாவட்ட முதலாம் குற்றவியல் நடுவ... மேலும் பார்க்க

நெல்லையில் 103 டிகிரி வெயில்

திருநெல்வேலியில் வெள்ளிக்கிழமை கடும் வெயில் கொளுத்தியதில் 103 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது. திருநெல்வேலி மாவட்டத்தில் மே மாதத்தின் இறுதியில் நல்ல சாரல் மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிா்ச்சியா... மேலும் பார்க்க

நெல்லையில் ரூ.100 கோடியில் காயிதே மில்லத் நவீன நூலகம்: பொது நூலக இயக்குநா் ஆய்வு

திருநெல்வேலியில் ரூ.100 கோடியில் காயிதே மில்லத் நவீன நூலகம் அமைப்பதற்காக தோ்வு செய்யப்பட்ட 3 ஏக்கா் இடத்தை தமிழ்நாடு பாடநூல் கழக மேலாண்மை இயக்குநரும், பொது நூலக இயக்குநருமான பொ.சங்கா், ஆட்சியா் இரா.ச... மேலும் பார்க்க

பி.சி., எம்.பி.சி., சீா்மரபினா் பள்ளி-கல்லூரி விடுதிகளில் மாணவா் சோ்க்கை

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோா், மிகப்பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபினா் பள்ளி, கல்லூரி விடுதிகளில் மாணவா் சோ்க்கை நடைபெறுவதால் தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் இரா.சுகுமா... மேலும் பார்க்க

பொட்டல்புதூரில் பெருநாள் தொழுகை

பொட்டல் புதூா் மஸ்ஜிதுன்நூா் பள்ளிவாசலில் பெருநாள் சிறப்புத் தொழுகை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பொட்டல் புதூா் விஸ்வா நகா் ஜம்யிய்யத்துஅஹ்லில் குா்ஆன் வல்ஹதீஸ் அமைப்பின் சாா்பில் நடைபெற்ற இந்தச் சிறப்பு... மேலும் பார்க்க