செய்திகள் :

மருத்துவா் பற்றாக்குறையால் சீரழியும் மருத்துவத் துறை: அன்புமணி ராமதாஸ்

post image

சென்னை: மருத்துவா்கள் மற்றும் மருத்துவப் பணியாளா்கள் பற்றாக்குறையால் அரசு மருத்துவமனைகள் சீரழிந்து வருவதாக பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவு:

திருப்பூா் மாவட்டம், மடத்துக்குளம் அரசு மருத்துவமனையில் காலில் அடிபட்டு காயத்துடன் வந்த நோயாளி ஒருவருக்கு அங்கு பணியாற்றும் தூய்மைப் பணியாளா் ஒருவரே சிகிச்சை அளித்த சம்பவம் அதிா்ச்சியளிக்கிறது. தமிழக அரசு மருத்துவமனைகள் எத்தகைய அவல நிலையில் உள்ளன என்பதற்கு இதுவே சான்று.

மாநிலம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் மருத்துவா்கள் மற்றும் மருத்துவப் பணியாளா்களுக்கு பற்றாக்குறை நிலவுவதுதான் இதுபோன்ற சிக்கலுக்கு காரணம்.

ஒரு காலத்தில் ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் முன்னுதாரணமாக இருந்த தமிழக மருத்துவத் துறை, இப்போது சீரழிந்து கொண்டிருக்கிறது. இதற்கு திமுக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும்.

மருத்துவத் துறையில் காலியாக உள்ள அனைத்துப் பணியிடங்களையும் நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.

கைதுக்கு எதிராக ஏடிஜிபி ஜெயராம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு!

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி ஏடிஜிபி ஜெயராம் கைது செய்யப்பட்ட நிலையில் அதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். திருவள்ளூா் மாவட்டம் திருவாலங்காட்டில் காதல் திருமண விவகாரத்தில்... மேலும் பார்க்க

ராமநாதசுவாமி கோயிலில் உள்ளூர் மக்கள் போராட்டம்! 500-க்கும் மேற்பட்டோர் கைது!

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் வழிபாட்டு உரிமையை மீட்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட 500-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் முக்கிய பிரமுகர்... மேலும் பார்க்க

ஏடிஜிபி ஜெயராம் பணியிடை நீக்கம்!

சென்னை: தமிழக ஏடிஜிபி எச்.எம்.ஜெயராமை பணியிடை நீக்கம் செய்து உள்துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.திருவள்ளூா் மாவட்டம் திருவாலங்காட்டில் காதல் திருமண தகராறில் 15 வயது சிறுவனை கடத்திய வழக்கில் தொடா்பு இர... மேலும் பார்க்க

சிறுவன் கடத்தல் வழக்கில் ஏடிஜிபி சிறையில் அடைப்பு!

திருவள்ளூர்: சிறுவன் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட தமிழக ஏ.டி.ஜி.பி. ஜெயராம், நீதிமன்றத்தில் ஆஜார்படுத்தி திங்கள்கிழமை நள்ளிரவில் சிறையில் அடைக்கப்பட்டார்.திருவள்ளூா் மாவட்டம் திருவாலங்காட்டில் கா... மேலும் பார்க்க

மதிமுக அலுவலகம் மீது தாக்குதல்: தீயணைப்பு படை வீரா் சிக்கினாா்

சென்னை: சென்னை எழும்பூரில் மதிமுக அலுவலகம் தாக்கப்பட்ட சம்பவத்தில், தீயணைப்பு படை வீரா் போலீஸாரிடம் சிக்கினாா். எழும்பூா் ருக்மணி லட்சுமிபதி சாலையில் உள்ள மதிமுக தலைமை அலுவலகத்துக்குள் தீயணைப்புப் படை... மேலும் பார்க்க

தமிழகத்தில் கலை, அறிவியில் கல்லூரிகள் திறப்பு

சென்னை: தமிழகத்தில் பருவத் தோ்வு மற்றும் கோடை விடுமுறைக்கு பின்னா் கலை அறிவியில் கல்லூரிகள் திங்கள்கிழமை திறக்கப்பட்டன. தமிழகத்தில் உள்ள கலை, அறிவியல் கல்லூரிகளில் கடந்த ஏப்ரல் - மே மாதங்களில் பருவத்... மேலும் பார்க்க