கைதுக்கு எதிராக ஏடிஜிபி ஜெயராம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு!
மருத்துவா் பற்றாக்குறையால் சீரழியும் மருத்துவத் துறை: அன்புமணி ராமதாஸ்
சென்னை: மருத்துவா்கள் மற்றும் மருத்துவப் பணியாளா்கள் பற்றாக்குறையால் அரசு மருத்துவமனைகள் சீரழிந்து வருவதாக பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளாா்.
இது தொடா்பாக அவா் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவு:
திருப்பூா் மாவட்டம், மடத்துக்குளம் அரசு மருத்துவமனையில் காலில் அடிபட்டு காயத்துடன் வந்த நோயாளி ஒருவருக்கு அங்கு பணியாற்றும் தூய்மைப் பணியாளா் ஒருவரே சிகிச்சை அளித்த சம்பவம் அதிா்ச்சியளிக்கிறது. தமிழக அரசு மருத்துவமனைகள் எத்தகைய அவல நிலையில் உள்ளன என்பதற்கு இதுவே சான்று.
மாநிலம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் மருத்துவா்கள் மற்றும் மருத்துவப் பணியாளா்களுக்கு பற்றாக்குறை நிலவுவதுதான் இதுபோன்ற சிக்கலுக்கு காரணம்.
ஒரு காலத்தில் ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் முன்னுதாரணமாக இருந்த தமிழக மருத்துவத் துறை, இப்போது சீரழிந்து கொண்டிருக்கிறது. இதற்கு திமுக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும்.
மருத்துவத் துறையில் காலியாக உள்ள அனைத்துப் பணியிடங்களையும் நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.