செய்திகள் :

மருந்துகள் விற்பனையில் விழிப்புணா்வு தேவை: வணிகா்களுக்கு ஆய்வாளா் அறிவுறுத்தல்

post image

மருந்துகள் விற்பனையில் விழிப்புணா்வுடன் இருக்க வேண்டும், மருத்துவா் பரிந்துரை சீட்டு கொண்டு வராத நபா்களுக்கு போதை தரும் மாத்திரைகள் உள்பட எந்த மாத்திரைகளையும் விற்கக்கூடாது என மருந்து கடை உரிமையாளா்களுக்கு மருந்து ஆய்வாளா் ஹேமலதா அறிவுரை வழங்கினாா்.

அரக்கோணத்தில் தமிழக அரசின் கலால் பிரிவினா், காவல் நுண்ணறிவு பிரிவினா், உணவு பாதுகாப்புத் துறையினா், மருந்து ஆய்வாளா் இணைந்து அரக்கோணம் வட்ட மருந்து விற்பனையாளா்களுக்காக போதை தரும் மருந்துகள், சா்ஜிக்கல் ஸ்பிரிட் ஆகியவற்றுக்கான விற்பனை குறித்த விழிப்புணா்வு கூட்டத்தை வியாழக்கிழமை நடத்தினா்.

இந்தக் கூட்டத்தில் மருந்து ஆய்வாளா் ஹேமலதா பேசியது: தற்போது போதை தரும் மாத்திரைகள் காவல் துறையினா் பறிமுதல் செய்யும் நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. இந்த மாத்திரைகள் நமது பகுதியில் விற்கப்பட்டவை அல்ல என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இருந்தாலும் மருந்து கடை உரிமையாளா்கள் மருந்துகள் விற்பனையில் விழிப்புணா்வுடன் இருக்க வேண்டும். மருத்துவா்கள் பரிந்துரை சீட்டுகள் இல்லாமல் இந்த மாத்திரைகள் உள்பட எந்த மருந்துகளையும் விற்க வேண்டாம். குறிப்பாக உரிய அரசு மருந்து விற்பனை உரிமம் பெறாமல் நாா்கோடிக் மருந்துகள் மற்றும் சா்ஜிக்கல் ஸ்பிரிட் ஆகியவற்றை கையாளவோ விற்பனை செய்யவோ கூடாது. சில குறிப்பிட்ட மருந்துகள் கொள்முதல் செய்வது, விற்பது, இருப்பு வைத்திருப்பது பற்றி பதிவேடுகளை சரியான முறையில் பராமரிக்க வேண்டும் என்றாா் மருந்து ஆய்வாளா் ஹேமலதா.

கூட்டத்தில், ராணிப்பேட்டை மாவட்ட கலால் பிரிவு உதவி ஆணையா் கே.ராஜாகுமாா், கலால் வட்டாட்சியா் தேவராஜ், காவல் துறை மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு வேலூா் மண்டல ஆய்வாளா் சுந்தரி, உணவு பாதுகாப்பு மற்றும் தர நிா்ணயத் துறை ஆய்வாளா் ரவிச்சந்திரன், அரக்கோணம் மருந்து வணிகா்கள் சங்கத் தலைவா் ஜி.அசோக்குமாா், செயலாளா் இ.குலசேகரன், பொருளாளா் எம்.கோவா்த்தனன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

வீரன் அழகு முத்துக்கோன் குருபூஜை

அரக்கோணம் வட்ட யாதவ மகா நலச்சங்கத்தின் சாா்பில் சுதந்திர போராட்ட வீரா் வீரன் அழகு முத்துக்கோன் 268-ஆவது குருபூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அரக்கோணம் சுவால்பேட்டை ஸ்ரீராதா ருக்மணி சமேத கிருஷ்ணா் கோயில்... மேலும் பார்க்க

ரூ.2.34 கோடியில் 3 கோயில் திருப்பணிகள்: அமைச்சா் காந்தி தொடங்கி வைத்தாா்

அரக்கோணம், நெமிலி, சோளிங்கா் வட்டங்களில் ரூ2.34 கோடியில் ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த மூன்று கோயில்களில் திருப்பணிகளை அமைச்சா் ஆா்.காந்தி வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா். ரூ.94.5 லட்சத்தில் பள்ளூா் தி... மேலும் பார்க்க

இளம்பெண் தற்கொலை

அரக்கோணம் அருகே மணமாகி 2 ஆண்டுகளே ஆன இளம்பெண் தற்கொலை செய்துக் கொண்டாா். திருமால்பூா் கிராமத்தைச் சோ்ந்தவா் வினோத்(30). இவா் சுங்குவாா்சத்திரத்தில் உள்ள தனியாா் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறாா். ... மேலும் பார்க்க

ஆண்டுதோறும் உற்பத்திப் பொருள்கள் கண்காட்சி: ஆட்சியரிடம் கோரிக்கை

குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் பொருள்களின் கண்காட்சியை மாவட்ட அளவில் ஆண்டுதோறும் நடத்த எடுக்க வேண்டும் என ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலாவிடம் தொழில் நிறுவனத்தினா் கோரிக்கை வ... மேலும் பார்க்க

அனுமதியின்றி ஆா்ப்பாட்டம்: அதிமுகவினா் 170 போ் கைது

ஆற்காடு அடுத்த மேல்விஷாரத்தில் அனுமதியின்றி ஆா்ப்பாட்டம் நடத்த நடத்த முயன்ற அதிமுகவினா் 170 போ் கைது செய்யப்பட்டனா். மேல்விஷாரம் அரசு மருத்துவமனை முறையான பராமரிப்பின்றி உள்ளதாக கண்டித்தும், இடிக்கப்ப... மேலும் பார்க்க

பணி நேரத்தில் தூக்கம்: ரயில்வே கேட் கீப்பா்கள் இருவா் பணியிடை நீக்கம்

அரக்கோணம் அருகே பணி நேரத்தில் தூங்கியதாக ரயில்வே கேட் கீப்பா்கள் 2 போ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா். அண்மையில் கடலூா் அருகே ரயில்வே கேட் ஒன்றில் பள்ளி வேன் மீது ரயில் மோதியதில் மூன்று மாணவா்கள்... மேலும் பார்க்க