செய்திகள் :

மருந்துச்சீட்டைக்கூட 'குரோக் ஏஐ' படிக்கும்! - எலான் மஸ்க்

post image

மருந்துச்சீட்டில் உள்ள மருத்துவரின் எழுத்தைக்கூட 'குரோக் ஏஐ' படிக்கும் என எலான் மஸ்க் கூறியுள்ளார்.

டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க், செய்யறிவு தொழில்நுட்பத்தில் இயங்கும் 'குரோக்' சாட்பாட்டை கடந்த 2023ல் அறிமுகப்படுத்தினார். சமீபத்தில் 'குரோக் 4' என்ற புதிய பதிப்பை அறிமுகப்படுத்தினார்.

இந்நிலையில் சமீபத்திய பதிப்பைப் பயன்படுத்தி வரும் அமெரிக்காவைச் சேர்ந்த டெட்சூ என்ற பயனர், ஒரு மலையேற்றத்தின்போது குரோக் 4 கேமராவில் அங்குள்ள தாவரங்களைக் காட்டி அதன் பெயரைக் கூறுமாறு கேட்டுள்ளார். அதற்கு குரோக்கும் சரியாக பதிலளித்துள்ளது. சிலவற்றை யூகங்களின் அடிப்படையில் பதில் அளித்துள்ளது.

பூக்கள் குறித்தும் கேள்வி கேட்க அதுபற்றியும் கூறியதுடன் 'நல்ல புகைப்படம்; என்றும் பாராட்டியுள்ளது.

ஓரளவு சரியாகச் சொல்வதாகவும் சிலவற்றை யூகங்களின் அடிப்படையில் சொல்வதாகவும் கூறிய அவர், குரோக் 4-யை 'பாக்கெட் பிஹெச்டி' என்று வர்ணித்தார். மேலும் தான் கேள்வி கேட்டதையும் குரோக் பதில் சொன்னதையும் விடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.

இந்த விடியோவைப் பகிர்ந்து எலான் மஸ்க்,

"உங்கள் கேமராவை எதை நோக்கியாவது காட்டும்போது குரோக் அதுபற்றிய தகவல்களை வழங்கும்.

என்னுடைய மருந்துச் சீட்டில் உள்ள மருத்துவரின் எழுத்தைக் கூடப் படிக்கக்கூடும்!" என்று பதிவிட்டுள்ளார்.

கூகுள் லென்ஸிலும் ஏதேனும் புகைப்படத்தையோ அல்லது எதன்மீது கேமராவை காட்டுகிறோமா அது பற்றி தகவல் கிடைக்கும். கூகுள் லென்ஸுக்குப் போட்டியாக தற்போது குரோக்கும் களமிறங்கியுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டு வருகிறது.

Elon musk says Grok 4 could even read the writing on my doctor’s prescription note

இந்த நூற்றாண்டின் நீண்ட சூரியகிரகணம் எப்போது? 6 நிமிடங்கள் உலகமே இருளில்!

இந்த நூற்றாண்டின் மிக நீண்ட நேர சூரியகிரகணமானது 2027ஆம் ஆண்டு ஆகஸ்ட் இரண்டாம் தேதி நிகழவிருப்பதாகவும், அப்போது ஐரோப்பா, வட ஆப்ரிக்க, மத்திய கிழக்கு நாடுகள் 6 நிமிடங்களுக்கு இருளில் மூழ்கலாம் என்றும் க... மேலும் பார்க்க

போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்ட தாய்லாந்து - கம்போடியா!

தாய்லாந்து - கம்போடியா நாடுகளுடனான பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து இரு நாடுகளும் உடனடி போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளன. தாய்லாந்து - கம்போடியா எல்லை தொடர்பான பிரச்சனையில் இரு நாடுகளுக்கு இடையே போர... மேலும் பார்க்க

தாய்லாந்து சந்தையில் துப்பாக்கிச் சூடு: 6 பேர் பலி!

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கின் உள்ள சந்தையில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் உயிரிழந்தார். சடுசக் பகுதியில் இயங்கிவரும் காய்கறி சந்தையில் மக்கள் வழக்கம்போல் பரபரப்பாகப் பொருள்களை வாங்கிக்கொ... மேலும் பார்க்க

சீனாவில் கடுமையான நிலச்சரவு! நான்கு பேர் பலி; 8 பேர் மாயம்

வடக்கு சீனாவின் ஹீபேய் மாகாணத்தில் பெய்து கனமழை காரணமாக ஏற்பட்ட மிக மோசமான நிலச்சரிவில் 4 பேர் பலியாகினர். 8 பேர் காணாமல் போயிருக்கிறார்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.லௌன்பிங் கௌண்டி கிராமத்தில் நே... மேலும் பார்க்க

ஜெர்மனியில் பயணிகள் ரயில் தடம்புரண்டதில் 3 பேர் பலி; பலர் காயம்

ஜெர்மனியில் பயணிகள் ரயில் தடம்புரண்ட விபத்தில் 3 பேர் பலியாகினர். தென்மேற்கு ஜெர்மனியில் ரிட்லிங்கன் மற்றும் முண்டர்கிஙன் நகரங்களுக்கு இடையே பயணிகள் ரயில் ஞாயிற்றுக்கிழமை திடீரென தடம்புரண்டது. இந்த வி... மேலும் பார்க்க

கிழக்கு காங்கோ தேவாலயத்தில் ஐஎஸ் ஆதரவு பயங்கரவாதிகள் தாக்குதல்: 21 போ் பலி!

கிழக்கு காங்கோவில் கத்தோலிக்க தேவாலய வளாகத்தில் இஸ்லாமிய தேசம் (ஐஎஸ்) பயங்கரவாத அமைப்பின் ஆதரவு பெற்ற ‘ஜனநாயகப் படை கூட்டணி (ஏடிஎஃப்)’ கிளா்ச்சிக் குழுவினா் சனிக்கிழமை நடத்திய தாக்குதலில் 21 போ் கொல்... மேலும் பார்க்க