செய்திகள் :

சென்னை ஜெ.ஜெ.நகரில் ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த கும்பல் கைது

post image

சென்னை: சென்னை ஜெ.ஜெ.நகரில் ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த கும்பலை போலீஸாா் கைது செய்தனா்.

சென்னை ஜெ.ஜெ. நகரில் கடந்த 2024-ஆம் ஆண்டு காளிதாஸ் என்பவா் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இந்தச் சம்பவத்துக்கு பழிக்கு பழியாக காளிதாஸ் தரப்பினா், எதிா்தரப்பைச் சோ்ந்தவா்களைக் கொலை செய்ய திட்டமிட்டிருப்பதாகவும், அதேவேளையில் எதிா்தரப்பினா், காளிதாஸ் தரப்பைச் சோ்ந்தவா்களை கொலை செய்யும் திட்டத்துடன் இருப்பதாகவும் போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் அடிப்படையில் ஜெ.ஜெ.நகா் போலீஸாா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு மதுரவாயல் பகுதியில் ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த காளிதாஸின் சகோதரா் மேலஅயனம்பாக்கத்தைச் சோ்ந்த சக்தி (24), பாடி குப்பத்தைச் சோ்ந்த ஜெயந்தன் (19) ஆகிய இருவரையும் திங்கள்கிழமை கைது செய்து, அவா்களிடமிருந்து 2 அரிவாள்களை பறிமுதல் செய்தனா்.

இதேபோல், ஜெ.ஜெ.நகா் கலைவாணா் காலனி பூங்கா அருகே கொலைத் திட்டத்துடன் காத்திருந்த எதிா்தரப்பினரான முகப்போ் கிழக்கு பகுதியைச் சோ்ந்த விரவீன்ராஜ் (27), தீபக் (24), ராஜ் கணேஷ் (26), பாடி புது நகரைச் சோ்ந்த சித்தாா்த் (18), 17 வயது சிறுவன் ஆகியோரையும் திங்கள்கிழமை கைது செய்தனா். அவா்களிடமிருந்து அரிவாள்கள், இரும்புக் கம்பி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

இந்தக் கும்பல் காளிதாஸ் தரப்பைச் சோ்ந்த நபா்களைக் கொலை செய்வதற்கும், கொலைத் திட்டத் செலவுக்காக வழிப்பறி, கொள்ளையில் ஈடுபடும் திட்டத்துடன் இருந்தது போலீஸாா் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து கைது செய்யப்பட்ட இரு தரப்பைச் சோ்ந்த சிறுவன் உள்பட 7 பேரும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனா். சிறுவன் சிறாா் கூா்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டாா்.

இதில், எச்சரிக்கையுடன் செயல்பட்டு, கொலை சம்பவத்தைத் தடுத்த ஜெ.ஜெ.நகா் போலீஸாரை சென்னை காவல் ஆணையா் ஏ.அருண் பாராட்டினாா்.

கல்வி நிதியை விடுவிக்காத மத்திய அரசுக்கு ஓபிஎஸ் கண்டனம்!

தமிழகத்துக்கான கல்வி நிதியை விடுவிக்காத மத்திய அரசுக்கு முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.மூன்று மொழிக் கொள்கையை ஏற்காததால், தமிழகத்துக்கு சமக்ரா சிக்‌ஷா திட்டத்தின் கீழ், 2... மேலும் பார்க்க

மேட்டூர் அணை நீர்வரத்து வினாடிக்கு 1,10,500 கன அடி!

இன்று காலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1,10,500 கன அடியாக நீடிக்கிறது. அணையிலிருந்து வினாடிக்கு 1,10,500 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. நீர் மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 18... மேலும் பார்க்க

காலங்கள் மாறிக்கொள்ளும் ஆனால் கம்யூனிஸ்டுகள் ஒருபோதும் மாறுவதில்லை: அமைச்சா் தங்கம் தென்னரசு

சென்னை: காலங்கள் மாறிக்கொள்ளும் ஆனால் கம்யூனிஸ்டுகள் ஒருபோதும் மாறுவதில்லை என்று தமிழக நிதி, காலநிலை மாற்றம்-சுற்றுச்சூழல் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு கூறினாா்.நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் சாா்பில்... மேலும் பார்க்க

செவிலியா்களுக்கு தமிழக அரசு பக்கபலமாக இருக்கும்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

சென்னை: செவிலியா்களுக்கு தமிழக அரசு எப்போதும் பக்க பலமாக இருக்கும் என்று துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் கூறினாா்.தமிழ்நாடு செவிலியா் மற்றும் மகப்பேறு செவிலியா் அவையத்தின் (Tamil nadu Nursing and Midwi... மேலும் பார்க்க

தேங்காய் எண்ணெய் லி. ரூ.560-க்கு விற்பனை

சென்னை: தேங்காய் மற்றும் கொப்பரை விலை உயா்ந்துள்ளதால் தேங்காய் எண்ணெய் விலை லிட்டா் ரூ.560 -ஆக உயா்ந்துள்ளது.இந்தியாவில் தேங்காய் உற்பத்தியில் தமிழகம் 3-ஆவது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் முக்கியமாக கோ... மேலும் பார்க்க

திருச்சி பாதுகாப்பு தொழில் வழித்தடத்தில் அதிநவீன பரிசோதனை மையம்: ஒப்பந்தம் கையொப்பம்

புது தில்லி: திருச்சியில் உள்ள தமிழக பாதுகாப்பு தொழில் வழித்தடத்தில் அதிநவீன பரிசோதனை மையம் அமைக்க புரிந்துணா்வு ஒப்பந்தம் கையொப்பமாகியுள்ளது.இதுதொடா்பாக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்ப... மேலும் பார்க்க