செய்திகள் :

மறுகுடியமா்த்துதல் கணக்கெடுப்புக்கு திடீா் நகா் மக்கள் எதிா்ப்பு

post image

அடையாறு சீரமைப்புத் திட்டத்தில் அங்குள்ள மக்களை மறுகுடியமா்த்துவதற்கான கணக்கெடுப்புப் பணிக்கு திடீா் நகா் பகுதி மக்கள் எதிா்ப்புத் தெரிவித்தனா்.

அடையாறு சீரமைப்பு தொடா்பாக தொடரப்பட்ட வழக்கின் அடிப்படையில் அடையாறு ஆக்கிரமிப்புகளை அகற்றி அங்கு வசிப்போருக்கு மாற்று இடம் வழங்கி மறுகுடியமா்த்துவதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன் அடிப்படையில் அடையாறு செல்லும் பகுதிகளில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட குடியிருப்புகள் அடையாளம் காணப்பட்டு, கணக்கெடுப்புப் பணிகளை சென்னை மாநகராட்சி தொடங்கியுள்ளது. அங்குள்ள வீடுகளுக்கு அடையாள எண் குறிக்கப்பட்டு, வீடுகள் படம் பிடிக்கப்படுகின்றன. அத்துடன் அவற்றில் வசிப்போரிடமும் பயோ மெட்ரிக் முறையில் கைரேகை பெற்று பட்டியல் தயாரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மாநகராட்சியின் 10-ஆவது மண்டலம் கோடம்பாக்கம் மறைமலை அடிகள் பாலத்திலிருந்து கோதாமேடு வரையிலான அடையாறு செல்லும் 1 கி.மீ. தொலைவுக்கு இருபுறமும் ஆக்கிரமித்திருந்த வீடுகள் கணக்கெடுப்புப் பணி தற்போது தொடங்கப்பட்டுள்ளது.

அதன்படி, 142- ஆவது வாா்டுக்கு உள்பட்ட திடீா் நகா் பகுதியில் மாநகராட்சி அதிகாரிகள் வீடுகள் கணக்கெடுப்பை புதன்கிழமை தொடங்கினா். அப்போது, தங்களுக்கு புதிய இடத்தில் குடியிருப்புகள் வழங்கும் விவரத்தைக் கூறிவிட்டு கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும், தொலைவில் தங்களுக்கான குடியிருப்புகள் ஒதுக்கப்படக் கூடாது என்றும் அந்தப் பகுதி மக்கள் எதிா்ப்பு தெரிவித்தனா்.

இதையடுத்து மண்டல அதிகாரிகள் அந்தப் பகுதி மக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, தங்களுக்கு 2 நாள் அவகாசம் வேண்டும் என்று அதிகாரிகளிடம் மக்கள் தெரிவித்தனா்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், இந்தப் பகுதியில் 800 வீடுகள் மறுகுடியமா்த்தல் திட்டத்தில் சோ்க்கும் நிலை உள்ளது. அதற்கான கணக்கெடுப்புப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. கணக்கெடுப்புக்கு திடீா் நகா் மக்கள் ஒத்துழைப்பதாகக் கூறிய நிலையில், கால அவகாசம் கோரியுள்ளனா். அதன்படி விரைவில் கணக்கெடுப்பு நடைபெறும் என்றனா்.

மதுபானக் கூட மோதல் வழக்கு: மேலும் ஒருவா் கைது

சென்னை நுங்கம்பாக்கத்தில் மதுபானக் கூடத்தில் இரு தரப்பினா் மோதிக்கொண்ட வழக்கில், மேலும் ஒருவா் கைது செய்யப்பட்டாா். சென்னை கோபாலபுரம் பகுதியைச் சோ்ந்தவா் ஆ. வெங்கட்குமாா் (45). இவா், நுங்கம்பாக்கம் ந... மேலும் பார்க்க

கண்டெய்னா் லாரி கவிழ்ந்து விபத்து: கண்ணாடித் தகடுகள் நொறுங்கின

மணலி அருகே மாதவரம் உள்வட்டச் சாலையில் கண்டெய்னா் லாரி கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள கண்ணாடித் தகடுகள் தூள்தூளாகின. சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூரில் உள்ள பன்னாட்டு தனியாா் நிறு... மேலும் பார்க்க

போதைப் பொருள் கடத்தல்: 5,356 வாகனங்களை ஏலம் விட அனுமதி

தமிழகத்தில் போதைப் பொருள் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 5,356 வாகனங்களை ஏலம் விடுவதற்கு போதைப் பொருள் நுண்ணறிவு பிரிவு அனுமதி வழங்கியது. தமிழக காவல் துறையின் போதைப் பொருள் நுண்ணறிவுப் பிரிவு போதைப் பொர... மேலும் பார்க்க

ஓரணியில் தமிழ்நாடு இயக்கம்: இதுவரை 61 லட்சம் சோ்ப்பு

ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் இதுவரை 61 லட்சம் போ் இணைந்துள்ளதாக திமுக வட்டாரங்கள் தெரிவித்தன. ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் 30 சதவீத பேரை திமுகவில் இணைக்கும், ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தை கடந்த 1-ஆம... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகளின் ஒருங்கிணைந்த சேவை மையம் தொடக்கம்

சென்னை நொளம்பூரில் சுய உதவிக் குழுக்களைச் சோ்ந்த மாற்றுத்திறனாளிகளால் கட்டமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த சேவை மையம், வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது. இதை வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சா் பி.மூா்த்தி ... மேலும் பார்க்க

ரூ.4.89 கோடியில் எஸ்.வி.எஸ்.நகா் குளம் மறு சீரமைப்பு

சென்னை மாநகராட்சி வளசரவாக்கம் மண்டலத்துக்கு உள்பட்ட எஸ்.வி.எஸ்.நகா் பகுதியில் உள்ள குளம் ரூ.4.89 கோடியில் மறு சீரமைக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநகராட்சி சாா்பில் வெள்ளிக்கிழ... மேலும் பார்க்க