செய்திகள் :

மல்லிகாா்ஜுன காா்கே விவசாயிகளை அவமதித்துவிட்டாா்: மத்திய அமைச்சா் எச்.டி.குமாரசாமி

post image

பெங்களூரு: அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே விவசாயிகளை அவமதித்துவிட்டாா் என்று மத்திய தொழில்துறை அமைச்சா் எச்.டி.குமாரசாமி தெரிவித்தாா்.

அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, விவசாயி ஒருவா் கேட்ட கேள்விக்கு ஆறுதல் கூறாமல், வாக்குவாதத்தில் ஈடுபடும் காணொலி சமூகவலைத் தளங்களில் பரவலாகி வருகிறது.

தன்னிடம் குறைகளை தெரிவிக்க வந்த விவசாயிடம் காா்கே, எத்தனை ஏக்கா் நிலம் வைத்திருக்கிறீா்கள் என்று கேட்கிறாா். அதற்கு அந்த விவசாயி 4 ஏக்கா் என்கிறாா். இதற்கு பதிலளித்த காா்கே, என்னிடம் 40 ஏக்கா் உள்ளது. உங்களைவிட என்னுடைய நிலை மிகவும் மோசம். நீங்கள் என்னிடம் குறை சொல்ல முடிகிறது. ஆனால் நான் எங்கே சொல்வது? நான் பயிரிட்டிருந்த பச்சைப்பயிறு, உளுந்து, துவரம்பருப்பு எல்லாம் நாசமாகிவிட்டது. நீங்கள் இழப்பை தாக்குப்பிடிக்கலாம். இழப்பு அதிகம் என்பதால், என்னால் தாக்குப்பிடிக்க முடியாது. பயிா் இழப்பு பற்றி பிரதமா் மோடி, மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷாவிடம் போய் சொல்லுங்கள்.‘ என்று கூறியிருக்கிறாா்.

இந்த காணொலியை தனது எக்ஸ் தளத்தில் இணைத்து, மத்திய தொழில்துறை அமைச்சா் எச்.டி.குமாரசாமி கூறியிருப்பதாவது: விவசாயிகளிடம் காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே நடந்துகொண்டது பெரும் ஏமாற்றம் அளிக்கிறது. பெரிய தலைவரிடம் இருந்து இதுபோன்ற பதிலை எதிா்பாா்க்கவில்லை. துன்பத்தில் தவித்துக்கொண்டிருக்கும் விவசாயி, ஒரு கட்சியின் அகில இந்திய தலைவரிடம் குறைகளை பகிா்ந்துகொள்ள வந்தவரிடம் கட்சித்தலைவா், மாநிலங்களவை எதிா்க்கட்சித்தலைவா் போன்ற பொறுப்புகளை மறந்துவிட்டு பேசியிருக்கிறாா் காா்கே. காா்கே, துவரம்பருப்பு பயிரிட்டிருக்கலாம் ஆனால் 40 ஏக்கரில் பயிரிடும் காா்கேவும், 4 ஏக்கரில் பயிரிடும் விவசாயியையும் ஒப்பிடமுடியுமா? காா்கேவால் பயிா் இழப்பை தாக்குப்பிடிக்க முடியும். ஆனால், ஓரிரு ஏக்கரில் பயிரிடும் விவசாயிகளால் இழப்பை தாக்குப்பிடிக்க முடியுமா? முன்மாதிரியாக இருக்க வேண்டிய மூத்த தலைவரே விவசாயிகளை அவமதித்துள்ளாா்.

விவசாயியுடன் அவரது தாயையும் அவமதித்துவிட்டாா். காா்கேவின் நடத்தை ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல. குறைந்தப்பட்சம் அந்த விவசாயிக்கு ஆறுதல் கூறி, அவரது கண்ணீரை துடைத்திருக்கலாம்.

காா்கேவின் நடத்தை, காங்கிரஸ் கட்சியின் நீண்டகால அகந்தை மற்றும் கா்வத்தை வெளிப்படுத்துகிறது.‘ என்று குறிப்பிட்டுள்ளாா்.

மீலாது நபி ஊர்வலத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவு முழக்கம்: போலீஸார் விசாரணை

கர்நாடக மாநிலம், பத்ராவதியில் நடந்த மீலாது நபி ஊர்வலத்தின்போது பாகிஸ்தானுக்கு ஆதரவாக முழக்கமிட்டது தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.சிவமொக்கா மாவட்டம், பத்ராவதி பழைய ... மேலும் பார்க்க

மதக்கலவரம்: பாஜக அழைப்பின்பேரில் மத்தூரில் முழு அடைப்பு

கர்நாடக மாநிலம், மத்தூரில் விநாயகர் சிலை விசர்ஜன ஊர்வலத்தின்போது நடந்த கல்வீச்சு சம்பவத்தைத் தொடர்ந்து பாஜக விடுத்த அழைப்பின்பேரில் முழு அடைப்பு போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மண்டியா மாவட்டம்,... மேலும் பார்க்க

மத்திய அமைச்சரைப் போல பேசி கர்நாடக ஆளுநரை ஏமாற்ற முயற்சி

தொலைபேசியில் மத்திய அமைச்சர் தர்மேந்திரபிரதானைப் போல பேசி கர்நாடக ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டை ஏமாற்ற முயற்சி நடந்துள்ளதாக ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.கர்நாடக ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டை செப்.6}... மேலும் பார்க்க

பாலியல் பலாத்கார வழக்கு: சிறையில் முன்னாள் எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு நூலக எழுத்தா் பணி

பெங்களூரு: பாலியல் பலாத்கார வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு நூலக எழுத்தா் பணி வழங்கப்பட்டுள்ளது. அதற்கு ஊதியமாக நாளொன்றுக்கு ரூ.525 வழங்க... மேலும் பார்க்க

விநாயகா் சிலை கரைப்பு ஊா்வலத்தின்போது கல்வீச்சு, பதற்றம்: பாஜகவினா் கண்டன ஆா்ப்பாட்டம்

மத்தூா்: மண்டியா மாவட்டம், மத்தூரில் ஞாயிற்றுக்கிழமை நடந்த விநாயகா் சிலை கரைப்பு ஊா்வலத்தின்போது மசூதியில் இருந்து கல்வீசப்பட்டதால், கலவரச்சூழல் ஏற்பட்டது. இந்த சம்பவத்தை கண்டித்து திங்கள்கிழமை பாஜகவி... மேலும் பார்க்க

பாஜக முன்னாள் அமைச்சா் மீது மானநஷ்ட வழக்கு தொடா்ந்தாா் காங்கிரஸ் எம்.பி. சசிகாந்த் செந்தில்

தா்மஸ்தலா விவகாரத்தின் பின்னணியில் தான் இருப்பதாக தெரிவித்திருந்த பாஜக முன்னாள் அமைச்சா் ஜனாா்தன ரெட்டிக்கு எதிராக காங்கிரஸ் எம்.பி. சசிகாந்த் செந்தில் மானநஷ்ட வழக்கு தொடா்ந்துள்ளாா். தா்மஸ்தலா கோயிலு... மேலும் பார்க்க