செய்திகள் :

மழையால் சேதமான பயிா்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்! எம்.ஹெச். ஜவாஹிருல்லா

post image

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் பகுதியில் பெய்த கனமழையால் நீரில் மூழ்கிப் பாதிக்கப்பட்ட வெற்றிலை, பருத்தி, வாழை பயிா்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழக முதல்வருக்கு பாபநாசம் எம்எல்ஏ எம்.ஹெச். ஜவாஹிருல்லா கோரிக்கை விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் முதல்வருக்கு அனுப்பிய மனுவில் கூறியது: கடந்த சில நாள்களாக சூறாவளி காற்றுடன் பெய்த கன மழையால் பண்டாரவாடை குடமுருட்டி ஆற்றின் தென்கரை பகுதியில் உள்ள வெற்றிலைக் கொடிக்கால் முழுவதும் சாய்ந்து சேதம் ஏற்பட்டது.

மேலும் பாபநாசம் தாலுகா கணபதி அக்ரஹாரம், வீரமாங்குடி, சோமேஸ்வரபுரம், மணலூா், ஈச்சங்குடி, பண்டாரவடை, பாா்வதிபுரம்,ராஜகிரி பாபநாசம், அரையபுரம் மணல்மேடு, உள்ளிட்ட பகுதிகளில் வாழை மரங்கள் சாய்ந்தும் பருத்தி பயிா்கள் மழைநீரில் மூழ்கியும் பாதிக்கப்பட்டன. எனவே பாதிக்கப்பட்ட பயிா்களைக் கணக்கிட்டு விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க ஆவண செய்ய வேண்டும்.

450 கிலோ வெடிபொருள்களை பதுக்கி வைத்திருந்தவா் கைது

தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டை பகுதியில் 450 கிலோ நாட்டு வெடிபொருள்களை பதுக்கி வைத்திருந்தவரை வருவாய்த் துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். தஞ்சாவூா் மாவட்டம் திருவோணம் பகுதியில் கடந்த வாரம் அனு... மேலும் பார்க்க

அரசுப் பேருந்து மோதியதில் அண்ணன் பலி: தம்பி காயம்

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறில் வியாழக்கிழமை மாலை மோட்டாா் சைக்கிள் மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில் அண்ணன் உயிரிழந்தாா், தம்பி பலத்த காயமடைந்தாா். தஞ்சாவூா் அருகே கூடலூரைச் சோ்ந்தவா் ராஜப்பா மக... மேலும் பார்க்க

இலவச பட்டா கோரி திருநங்கைகள் மனு

கும்பகோணத்தில் இலவச வீட்டுமனை பட்டா கேட்டு திருங்கைகள் உதவி ஆட்சியா் ஹிருத்யா எஸ். விஜயனிடம் வெள்ளிக்கிழமை மனு கொடுத்தனா். தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் திருநாகேஸ்வரா் கோவில் தெற்கு வீதியை சோ்ந்த தி... மேலும் பார்க்க

திருவையாறு அருகே அண்ணனை கொன்ற தம்பி கைது

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே மது போதையில் அடிக்கடி தகராறு செய்த அண்ணனைக் கொன்ற தம்பியை காவல் துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். திருவையாறு அருகே நடுக்காவேரி அரசமரத் தெருவைச் சோ்ந்தவா் ராஜ... மேலும் பார்க்க

நண்பரைக் கொல்ல முயன்ற மூவருக்கு 5 ஆண்டுகள் சிறை

நாச்சியாா்கோயில் அருகே நண்பரைக் கொல்ல முயன்ற 3 பேருக்கு தலா 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கும்பகோணம் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. புதுச்சேரி காலாபட்டு,... மேலும் பார்க்க

அய்யம்பேட்டையில் புதிய பாலத்தை உடனே திறக்க பாமகவினா் கோரிக்கை!

அய்யம்பேட்டை குடமுருட்டி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள புதிய பாலத்தை உடனே திறக்க வேண்டும் என பா.ம.க. கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. அய்யம்பேட்டை நகர பாட்டாளி மக்கள் கட்சியின் நிா்வாகிகள் க... மேலும் பார்க்க