செய்திகள் :

மழையால் தாமதமாகும் குவாலிஃபையர் 2; மும்பை இந்தியன்ஸுக்கு ஆபத்தா?

post image

பஞ்சாப் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான குவாலிஃபையர் 2 போட்டி மழையால் தாமதம் ஆகியுள்ளது.

ஐபிஎல் தொடரில் அகமதாபாதில் இன்று (ஜூன் 1) நடைபெறும் குவாலிஃபையர் 2 போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடுகின்றன.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார். இதனையடுத்து, மும்பை இந்தியன்ஸ் முதலில் பேட் செய்யவுள்ளது.

அகமதாபாதில் மழை பெய்து வருவதால் போட்டி தொடங்குவதில் தாமதமாகியுள்ளது. மழை நீடிக்கும் பட்சத்தில் ஓவர்கள் குறைக்கப்பட்டு போட்டி நடத்தப்படும்.

மழையின் காரணமாக போட்டியை நடத்த முடியாத சூழல் உருவானால், அது மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பாதகமாக அமையும். பஞ்சாப் கிங்ஸ் அணி இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றதாக அறிவிக்கப்படும்.

ஐபிஎல் போட்டியில் சாம்பியன்: விராட் கோலிக்கு எடப்பாடி பழனிசாமி பாராட்டு

ஐபிஎல் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரு அணி வீரா் விராட் கோலிக்கு, அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி பாராட்டு தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் ‘எக்ஸ்’ தளத்தில் பு... மேலும் பார்க்க

பெங்களூரு சின்னசாமி திடலில் அத்துமீறும் ஆர்சிபி ரசிகர்கள்: போலீஸ் தடியடி!

பெங்களூரு சின்னசாமி திடலில் அத்துமீறி நுழைய முயன்ற ஆர்சிபி ரசிகர்கள் மீது போலீஸார் லேசான தடியடி நடத்தினர்.குஜராத் மாநிலம் அகமதாபாத் நரேந்திர மோடி திடலில் ஐபிஎல் தொடர் 18-வது சீசனின் நேற்றிரவு நடைபெற்ற... மேலும் பார்க்க

ஆர்சிபியின் வெற்றி பேரணிக்கு அனுமதி! ரசிகர்களால் திணறும் பெங்களூரு!

ராயல் சேலஞ்சர் பெங்களூரு அணியின் வெற்றிப் பேரணிக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.குஜராத் மாநிலம் அகமதாபாத் நரேந்திர மோடி திடலில் ஐபிஎல் தொடர் 18-வது சீசனின் நேற்றிரவு நடைபெற்ற இறுதிப் போட்டியில் பஞ்சாப் க... மேலும் பார்க்க

14 வயது சூர்யவன்ஷிக்கு கார் பரிசு..! யார்தான் ஓட்டுவார்கள்?

ஐபிஎல் தொடரில் காரினை பரிசாகப் பெற்றுள்ள சூர்யவன்ஷிக்கு இன்னும் 18 வயது நிறைவடையாத்தால் அந்தக் காரை யார் ஓட்டுவார்கள் என்ற சிக்கல் எழுந்துள்ளது. 14 வயதான வைபவ் சூர்யன்ஷி ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக இந்... மேலும் பார்க்க

ஐபிஎல் 2025: அதிக ரன்கள், அதிக விக்கெட்டுகள், வளரும் வீரர் விருது யாருக்கு? முழு விவரம்!

ஐபிஎல் தொடரின் 18-ஆவது சீசன் நேற்றுடன் (ஜூன்.3) முடிவடைந்தது. இதில் ஆர்சிபி அணி முதல்முறையாக கோப்பையை வென்று அசத்தியது. 18 ஆண்டுகளாக போராடி வரும் பஞ்சாப் கிங்ஸ் தனது கோப்பை கனவை பூர்த்தி செய்யாமல் இரு... மேலும் பார்க்க

மிகவும் நொந்துவிட்டேன்..! தோல்விக்குப் பிறகு பஞ்சாப் கேப்டன்!

ஐபிஎல் இறுதிப் போட்டியில் தோல்வியுற்றது குறித்து பஞ்சாப் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் பேசும்போது, “பாதி வேலைதான் முடிந்துள்ளது. அடுத்த ஆண்டு நிச்சயமாக கோப்பையை வெல்ல வருவோம்” எனக் கூறியுள்ளார். ஐபிஎல் சீசனில... மேலும் பார்க்க