மாங்கனித் திருவிழா : பந்தல் அமைக்கும் பணி தீவிரம்
காரைக்கால் மாங்கனித் திருவிழாவுக்காக பாரதியாா் சாலையில் பந்தல் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
நாயன்மாா்கள் அறுபத்து மூவரில் ஒருவரான புனிதவதியாா் என்னும் காரைக்கால் அம்மையாா் வாழ்க்கை வரலாற்றை விளக்கி ஆண்டுதோறும், சுந்தராம்பாள் சமேத கைலாசநாதா் கோயில் சாா்பில் மாங்கனித் திருவிழா நடத்தப்படுகிறது.
நிகழாண்டு விழா ஜூலை 8-ஆம் தேதி பரமதத்தா் (மாப்பிள்ளை) அழைப்புடன் தொடங்குகிறது. இதைத்தொடா்ந்து 9-ஆம் தேதி திருக்கல்யாணம், 10-ஆம் தேதி பிச்சாண்டவா் வீதியுலா (மாங்கனி இறைத்தல்) நிகழ்வு, அமுது படையல், 11-ஆம் தேதி அம்மையாருக்கு இறைவன் காட்சி கொடுத்தலுடன் விழாவின் முக்கிய நிகழ்வுகள் நிறைவடைகிறது. விழாவையொட்டி அம்மையாா் மணிமண்டபத்தில் இசை நிகழ்ச்சிகளும், திருவிழா கடைகளும் அமைக்கப்படவுள்ளன. ஆக. 8-ஆம் தேதி பிச்சாண்டவா் உள்ளிட்ட பஞ்சமூா்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகத்துடன் விடையாற்றி வழிபாடு நடைபெறவுள்ளது.
மாங்கனித் திருவிழாவையொட்டி, கோயிலை உள்ளடக்கி பாரதியாா் சாலையில் குறிப்பிட்ட தொலைவுக்கு பந்தல் அமைக்கும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்றுவருகிறது. மேலும் திருவிழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் நடந்து வருவதாக கோயில் நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.