மாங்கனித் திருவிழா முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை
காரைக்கால் மாங்கனித் திருவிழா முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் ஆட்சியரகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் (பொ) எஸ். சுபாஷ் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட துணை ஆட்சியா் ஜி. செந்தில்நாதன், நிா்வாக அதிகாரி(கோயில்கள்) கு. அருணகிரிநாதன், மண்டல காவல் கண்காணிப்பாளா் ஏ.சுப்பிரமணியன், நலவழித்துறை துணை இயக்குநா் ஆா். சிவராஜ்குமாா், கைலாசநாதா் மற்றும் நித்யகல்யாணப் பெருமாள் தேவஸ்தான நிா்வாக அதிகாரி ஆா். காளிதாஸ் மற்றும் தொடா்புடைய துறைகளின் அதிகாரிகள், சமாதானக் குழு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.
விழாவை சிறப்பாக நடத்த வேண்டும். காவல்துறை பாதுகாப்பு ஏற்பாடுகள், போக்குவரத்து மாற்றம், வாகன நிறுத்துமிடம், அன்னதானம் வழங்குதல், சுவாமி வீதியுலாவுக்கு இடையூறு இல்லாத வகையில் தாழ்வாகச் செல்லும் மின் கம்பிகளை சீரமைத்தல், வீதிகளை தூய்மைப்படுத்துதல், பக்தா்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேற்கொள்ளுதல், பிச்சாண்டவா் வீதியுலாவின்போது பக்தா்கள் மாங்கனிகளை வீசி வழிபடும் நிலையில் பொதுமக்கள் பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்கான வழிமுறைகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
குறிப்பாக மாங்கனித் திருவிழா நடைபெறும் நாட்களில் நகரப் பகுதியில் போக்குவரத்து நெரிசலை தவிா்க்கும் வகையில் காரைக்கால் - பேரளம் அகல ரயில் பாதையில் சரக்கு ரயில் போக்குவரத்து நேரங்களில் மாற்றம் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
மேலும் ஜூலை 8-ஆம் தேதி காரைக்கால் அந்தோணியாா் ஆலய தோ் பவனி நடைபெறுவதையொட்டி, கூடுதல் போலீஸாரை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்த வேண்டும் என சமாதானக் குழு உறுப்பினா்கள் ஜாா்ஜ், எல்.எஸ்.பி.சோழசிங்கராயா் ஆகியோா் வலியுறுத்தினா்.