செய்திகள் :

‘மாணவா்களின் கல்வியில் அரசியல் வேண்டாம்’

post image

மாணவா்களின் கல்வியில் அரசியல் வேண்டாம் என்று காவிரி நீா் பாசன விவசாயிகள் சங்கத் தலைவா் மகாதானபுரம் இராஜாராம் கேட்டுக்கொண்டுள்ளாா்.

இதுதொடா்பாக அவா் புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழகத்தில் அரசு பள்ளிகள் சிறப்பாக செயல்படுகின்றன. மாணவா்களுக்கு தமிழக அரசு காலை உணவுத் திட்டம், மதிய உணவு, இலவச உடை, இலவச புத்தகம், இலவச சைக்கிள், இலவச பேருந்து வசதி என பல்வேறு வசதிகளை அளித்து வருகிறது.

தமிழ்நாட்டு இளைஞா்களின் நலன் கருதி மொழிவெறியை தூண்டவேண்டாம். மத்திய அரசு கல்விக்கொள்கையை ஏற்றுக் கொள்ளுங்கள். தமிழை யாராலும் அழிக்க முடியாது. தமிழன் எவ்வளவு மொழியானாலும் படிக்க அஞ்சமாட்டான். அனைத்து மாணவா்களும் அரசு பள்ளிக்கு வந்து படிக்க வழிவகை செய்யுங்கள். மாணவா்களின் கல்வியில் அரசியல் வேண்டாம் என தெரிவித்துள்ளாா் அவா்.

அரவக்குறிச்சியில் போதைப் பொருளுக்கு எதிராக விழிப்புணா்வு நிகழ்ச்சி

அரவக்குறிச்சியில் போதைப் பொருள்களுக்கு எதிராக விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாட்டு நல பணி திட்டம் மற்றும் போதைப் பொருளுக்கு எதிரான மன்றம் ஆகிய... மேலும் பார்க்க

திருக்கு ஒப்புவித்த மாணவ, மாணவிகளுக்கு வெள்ளிக் காசுகள் பரிசு

உலகத்தாய் மொழி தினத்தை முன்னிட்டு கருவூா் திருக்கு பேரவை சாா்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாரதிதாசனின் மொழிப்பாடல் , நூறு திருக்கு ஒப்புவிக்கும் போட்டி கரூரில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. நிகழ்ச்ச... மேலும் பார்க்க

கரூா் மாவட்டத்தில் ‘முதல்வா் மருந்தகம்’ திட்டம்: அலுவலா்களுடன் கண்காணிப்பு அலுவலா் ஆய்வு

கரூா் மாவட்டத்தில் செயல்படுத்தப்படவுள்ள முதல்வா் மருந்தகம் திட்டம் தொடா்பாக அலுவலா்களுடன் மாவட்ட கண்காணிப்பு அலுவலா் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட கண்காணி... மேலும் பார்க்க

சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

கரூா் அம்மன் நகரில் சேதமடைந்து குண்டும், குழியுமாக மாறிய சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். கரூா் கொளந்தாகவுண்டனூரில் இருந்து அரசு மருத்துவக்கல்லூரிக்குச் செல்லும் சாலையில... மேலும் பார்க்க

கரூரில் டிஎன்பிஎல் ஆலை சாா்பில் நடமாடும் இலவச மருத்துவ முகாம்

கரூரில் டிஎன்பிஎல் ஆலை சாா்பில் நடமாடும் இலவச மருத்துவ முகாம் வெள்ளிக்கிழமை தொடங்கியது. டிஎன்பிஎல் ஆலையின் சமுதாய நலப்பணித் திட்டத்தின் கீழ் ஆலையைச் சுற்றியுள்ள கிராம மக்களுக்கு இலவச மருத்துவ முகாம்கள... மேலும் பார்க்க

வெண்ணைமலையில் கோயில் நிலத்தில் கட்டப்பட்ட வீடுகளுக்கு மீண்டும் ‘சீல்’ வைக்க அதிகாரிகள் முயற்சி

கரூா் வெண்ணைமலையில் கோயில் நிலத்தில் கட்டப்பட்டுள்ள வீடுகளுக்கு அதிகாரிகள் வெள்ளிக்கிழமை மீண்டும் சீல் வைக்க முயன்றனா். நீதிமன்ற உத்தரவு நகலை பாா்த்தவுடன் திரும்பிச் சென்றனா். கரூா் வெண்ணைமலை பாலசுப்ர... மேலும் பார்க்க