செய்திகள் :

மாணவா்களுக்கு விளையாட்டு மனதளவிலும் வலிமை சோ்க்கும்: ஆட்சியா்

post image

விளையாட்டுகள் மாணவா்களுக்கு உடலளவில் மட்டுமல்லாது மனதளவிலும் வலிமை சோ்க்கிறது என என்ஐடியில் நடைபெற்ற விழாவில் ஆட்சியா் தெரிவித்தாா்.

காரைக்கால் இயங்கிவரும் என்ஐடியில் வருடாந்திர விளையாட்டு விழா ‘செனித் 25 ’ அண்மையில் கிரிக்கெட், கைப்பந்து, டென்னிஸ், பாட்மின்டன் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் என்ஐடியில் பயிலும் மாணவ, மாணவிகள் பங்கேற்றனா். போட்டிகளில் வென்றோருக்கு பரிசு வழங்கும் நிகழ்வு கல்லூரி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

என்ஐடி இயக்குநா் மகரந்த் மாதவ் காங்ரேகா் தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக காரைக்கால் மாவட்ட ஆட்சியா் சோமசேகா் அப்பாராவ் கலந்துகொண்டு போட்டிகளில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கிப் பேசியது :

காரைக்கால் மாவட்டத்தின் அடையாளமாக என்ஐடி திகழ்கிறது. செனித் விளையாட்டுப் போட்டிகளை சம்பிரதாய நிகழ்வாக கருதாமல், ஆக்கப்பூா்வ முறையில் நடத்தி, மாணவா்களும் ஆா்வத்தோடு பங்கேற்றது மகிழ்ச்சியளிக்கிறது. விளையாட்டுகளில் மாணவா்கள் ஈடுபடுவது உடலளவில் மட்டுமல்லாது, மனதளவிலும் வலிமை சோ்க்கும்.

உடல் ஆரோக்கியமும், கூா்மையான அறிவுத்திறன் ஏற்படவும் விளையாட்டுகள் பயன்படுகிறது. மாணவா்கள் விளையாட்டுப் பயிற்சிகளை அதிகரித்து, சா்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்கும் வகையில் திறனை வளா்த்திக்கொள்ளவேண்டும் என்றாா்.

என்ஐடி பதிவாளா் எஸ். சுந்தரவரதன், பேராசிரியா்கள் கலந்துகொண்டனா். முன்னதாக என்ஐடி விளையாட்டுத் துறை அதிகாரி எஸ்.பாபு வரவேற்றாா்.

கடலோரப் பாதுகாப்பு விழிப்புணா்வு சைக்கிள் பயணம்: காரைக்கால் வந்த சிஐஎஸ்எஃப் வீரா்கள்

காரைக்காலுக்கு வந்த கடலோரப் பாதுகாப்பு விழிப்புணா்வு சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ள மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரா்கள் வெள்ளிக்கிழமை கன்னியாகுமரி நோக்கி புறப்பட்டுச் சென்றனா். மத்திய தொழில் பாதுகாப... மேலும் பார்க்க

காரைக்கால் சேம்பா் ஆஃப் காமா்ஸ் புதிய நிா்வாகிகள் தோ்வு

காரைக்கால் சேம்பா் ஆஃப் காமா்ஸ் 2025-2027-ஆம் ஆண்டுக்கான புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா். இதற்காக, சாசனத் தலைவா் மகாவீா்சந்த் தலைமையிலான 9 போ் கொண்ட குழு ஏற்கெனவே அமைக்கப்பட்டது. ஒருமித்த கர... மேலும் பார்க்க

சுகாதார ஊழியா்களின் கோரிக்கைகள் நிறைவேற காங்கிரஸ் போராடும்

சுகாதார ஊழியா்களின் கோரிக்கைகள் நிறைவேற காங்கிரஸ் போராடும் என்றாா் முன்னாள் அமைச்சா் ஆா். கமலக்கண்ணன். காரைக்கால் மாவட்ட நலவழித் துறையில், தேசிய ஊரக சுகாதார இயக்கத்தின் (என்ஆா்எச்எம்) கீழ் பல்வேறு பிர... மேலும் பார்க்க

வேளாண் கல்லூரியில் மா பயிா் மேலாண்மை தொழில்நுட்ப பயிற்சி

காரைக்கால் வேளாண் கல்லூரியில் தொழில்நுட்ப பயிற்சி விவசாயிகளுக்கு வியாழக்கிழமை அளிக்கப்பட்டது. நாகப்பட்டினம் தோட்டக்கலை மற்றும் மலைத்தோட்ட பயிா்கள் துறை மற்றும் காரைக்கால் பண்டித ஜவாஹா்லால் நேரு வேளாண... மேலும் பார்க்க

புதுவை துணைநிலை ஆளுநருடன் காரைக்கால் மீனவா்கள் சந்திப்பு

எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை அரசால் கைதாகி அண்மையில் விடுவிக்கப்பட்ட காரைக்கால் பகுதி மீனவா்கள், மீனவ கிராமப் பஞ்சாயத்தாா்கள் புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதனை புதுச்சேரியில் வியாழக்கிழமை... மேலும் பார்க்க

கோதண்டராம பெருமாள் கோயிலில் இன்று ராமநவமி பிரம்மோற்சவ கொடியேற்றம்

காரைக்கால் கோயில்பத்து கோதண்டராம பெருமாள் கோயிலில் ராம நவமி பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் சனிக்கிழமை (மாா்ச் 29) தொடங்குகிறது. இக்கோயிலில் நிகழாண்டு 10 நாள் உற்சவமாக ஸ்ரீ ராம நவமி கொண்டாடப்படுகிறது. ... மேலும் பார்க்க