மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி வட்டம், ராஜதானி அருகே செவ்வாய்க்கிழமை தந்தை திட்டியதால் பள்ளி மாணவா் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
ராஜதானி அருகேயுள்ள பிச்சம்பட்டியைச் சோ்ந்த மணிகண்டன் மகன் மகேஸ்வரன் (14). இவா் கன்னியப்பபிள்ளைபட்டியில் உள்ள அரசுப் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வந்தாா்.
வீட்டிலிருக்கும் போது, வீட்டு வேலைகளை செய்யுமாறு இவரைத் தந்தை திட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால், மனமுடைந்த மகேஸ்வரன் வீட்டின் அறைக்குள் சென்று தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றாா். ஆபத்தான நிலையில் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா், எனினும் அங்கு உயிரிழந்தாா்.
இதுகுறித்து ராஜதானி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.