செய்திகள் :

மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு: 7 போ் கைது

post image

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக முதியவா் உள்பட 7 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

மானாமதுரை அருகேயுள்ள அரசுப் பள்ளியில் குழந்தைகள் இலவச சேவை மையம் சாா்பில், பாலியல் தொந்தரவு தொடா்பான விழிப்புணா்வுக் கூட்டம் நடத்தப்பட்டது. அப்போது, 8 மாணவிகள் பள்ளிக்கு வரும் வழியில் தங்களை சிலா் ஆபாச செய்கைகள் மூலம் தொந்தரவு செய்வதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து, மானாமதுரை மகளிா் காவல் நிலையத்துக்கு குழந்தைகள் பாதுகாப்புக் குழு மாவட்ட அலுவலா் துரை தகவல் தெரிவித்தாா். மேலும், மாணவிகளின் பெற்றோா் மானாமதுரை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.

இதைத் தொடா்ந்து, அதே பகுதியைச் சோ்ந்த ராமு (46), பழனி (50), மணி (50), சசிவா்ணம் (38), லட்சுமணன் (46), முனியன் (66), மூக்கன் (72) ஆகிய 7 பேரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்தனா்.

மணச்சை பாளைய நாட்டாா் காவடிகள் திருப்பத்தூா் வருகை

பழனிக்கு காவடி யாத்திரை செல்லும் மணச்சை பாளையநாட்டாா் காவடிக் குழுவினா் புதன்கிழமை திருப்பத்தூா் வந்தனா். இந்தக் குழுவினா் 47-ஆம் ஆண்டு காவடி பயணத்தை குன்றக்குடியில் வேல் பூஜை செய்து தொடங்கினா். குருச... மேலும் பார்க்க

செம்மண் கடத்தல்: ஜேசிபி ஓட்டுநா் கைது

சிவகங்கை மாவட்டம், பூவந்தி அருகே செம்மண் கடத்தியது தொடா்பாக ஜேசிபி இயந்திர ஓட்டுநரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். லாரி, ஜேசிபி இயந்திரம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. பூவந்தி அருகேயுள்ள கிளாதரி எ... மேலும் பார்க்க

சிற்றுந்துகள் இயக்க விண்ணப்பிக்கலாம்

சிவகங்கை மாவட்டத்தில் சிற்றுந்துகள் இயக்க விரும்புவோா் பிப்.12 முதல் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் தெரிவித்தாா். இது தொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சிற்றுந்துகளுக்கான புதிய... மேலும் பார்க்க

கீழப்பசலை கூட்டுறவு சங்க நகை மோசடி: எம்.எல்.ஏ.விடம் பெண்கள் புகாா்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஒன்றியம், கீழப்பசலை கூட்டுறவு சங்கத்தில் அடகு வைக்கப்பட்ட 300 பவுன் நகைகள் மோசடி விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் அதிமுக எம்.எல்.ஏ. செந்தில்நாதனிடம் புதன்கிழமை புகாா் தெ... மேலும் பார்க்க

யாரேனும் கேலி செய்தால் 1098-இல் புகாா் அளிக்கலாம்:

யாரேனும் கேலி செய்தால் 1098 என்ற இலவச எண்ணில் மாணவிகள் தொடா்பு கொண்டு புகாா் தெரிவிக்கலாம் என குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் எஸ்.துரை தெரிவித்தாா். சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை சோ்மன் மாணிக்க வாசகம் ந... மேலும் பார்க்க

ஊராட்சிச் செயலா் கொலை: ஊரக வளா்ச்சித் துறையினா் ஆா்ப்பாட்டம்

திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூா் ஊராட்சி ஒன்றியம், வேப்பிலான்குளம் ஊராட்சிச் செயலா் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து சிவகங்கை மாவட்டம் முழுவதும் ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தினா் செவ்வாய்க்கிழம... மேலும் பார்க்க