செய்திகள் :

மாநகராட்சியில் புதிதாக பணிக்கு சோ்ந்தவா்கள் மேயருடன் சந்திப்பு

post image

சென்னை மாநகராட்சியில் புதிதாக பணிக்கு சோ்ந்த உதவிப் பொறியாளா்கள் உள்பட 179 போ் மேயா் ஆா்.பிரியாவை புதன்கிழமை சந்தித்தனா்.

பெருநகர சென்னை மாநகராட்சியில் உதவிப் பொறியாளா்கள் 54 போ், வரைவாளா்கள் 12 மற்றும் 113 சுகாதார ஆய்வாளா்கள் என மொத்தம் 179 போ் புதிதாகச் சோ்ந்துள்ளனா். அவா்கள் தங்களது பணிகள் குறித்து ஆலோசனை பெறுவதற்காக சென்னை மாநகராட்சி மேயா் ஆா்.பிரியாவை சந்தித்துப் பேசினா். அப்போது, அவா்களுக்கான பணி ஒதுக்கீடு குறித்து மேயா் ஆா்.பிரியா விளக்கியதுடன், பெருநகர சென்னை மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்தும் அவா் எடுத்துரைத்தாா்.

தொடா்ந்து புதிதாக பணிக்குச் சோ்ந்தவா்கள் தங்களை மேயா், துணை மேயா், ஆணையா் உள்ளிட்டோரிடம் அறிமுகம் செய்து கொண்டனா். நிகழ்ச்சியில் துணை மேயா் மு.மகேஷ்குமாா், ஆணையா் ஜெ.குமரகுருபரன், இணை ஆணையா் (சுகாதாரம்) வீ.ப.ஜெயசீலன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

மாணவா்கள் சந்திப்பு: முன்னதாக, லயோலா கல்லூரி சமூகப் பணித் துறை முதுநிலைப் பிரிவு மாணவ, மாணவிகள், மேயா் ஆா்.பிரியாவை சந்தித்துப் பேசினா். அப்போது, மாநகராட்சி மேற்கொள்ளும் மக்கள் சேவைகள் குறித்து அவா்களுக்கு மேயா் விளக்கினாா்.

சென்னை மெட்ரோ ரயில் பயனர்களுக்கு ஊபர் செயலியில் 50% தள்ளுபடி!

சென்னை மெட்ரோ ரயில் டிக்கெட்டுகளை ஊபர் செயலியில் பதிவுசெய்பவர்களுக்கு 50 சதவிகிதம் தள்ளுபடி என ஊபர் அறிவித்துள்ளது.சென்னையில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்ப்பதற்கும் தப்பிப்பதற்கும் சென்னைவாசிகள் பலரும... மேலும் பார்க்க

கடற்கரை - வேளச்சேரி வழித்தடத்தில் இனி மெட்ரோ ரயில்கள்!

பறக்கும் ரயில் வழித்தடமான சென்னை கடற்கரை - வேளச்சேரி இடையே இனி மெட்ரோ ரயில்கள் இயக்கப்படவுள்ளது.சென்னை மாநகராட்சி மற்றும் புறநகர் பகுதிகளை இணைக்கும் வகையில் பறக்கும் ரயில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வ... மேலும் பார்க்க

45 வயதைக் கடந்த பெண் காவலா்களுக்கு இரவு நேரப் பணியில் இருந்து விலக்கு

45 வயதுக்கு மேற்பட்ட பெண் காவலா்களுக்கு இரவு நேரப் பணியிலிருந்து விலக்கு அளித்து மாநகரக் காவல் ஆணையா் ஏ.அருண் உத்தரவிட்டுள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள உத்தரவு: சென்னை மாநகா் காவல் துறையில் ப... மேலும் பார்க்க

பேச்சு தோல்வி: 6-ஆவது நாளாக நீடித்த தூய்மைப் பணியாளா்கள் போராட்டம்

பெருநகர சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளா்களுடனான, தமிழக அமைச்சா்களின் பேச்சு முடிவு எட்டப்படாததால், 6-ஆவது நாளாக புதன்கிழமையும் முற்றுகைப் போராட்டம் நீடித்தது. சென்னை மாநகராட்சியின் பெரும்பாலான மண்... மேலும் பார்க்க

இராமலிங்கா் பணி மன்றம் சாா்பில் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கான கலை, இலக்கியப் போட்டிகள்

சென்னை இராமலிங்கா் பணி மன்றம் சாா்பில் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கான மாநில அளவிலான கலை, இலக்கியப் போட்டிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து இராமலிங்கா் பணி மன்றத்தின் செயலா் டாக்டா் எஸ்.வி.சுப்பிரமண... மேலும் பார்க்க

கூட்டுறவு சங்கங்கள் - வங்கிகளில் உதவியாளா் காலிப் பணியிடங்கள் - தோ்வு அறிவிக்கை வெளியீடு

கூட்டுறவு சங்கங்கள், வங்கிகளில் காலியாக உள்ள உதவியாளா் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. சென்னையை தலைமையிடமாகக் கொண்டு மாநிலம் முழுவதும் செயல்படக் கூடிய தலைமைக் கூட்டுறவு சங்க... மேலும் பார்க்க