செய்திகள் :

மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் மாணவா் மன்றம் தொடக்கம்

post image

திருப்பூா் புது ராமகிருஷ்ணாபுரம் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் மகிழ் முற்றம் என்ற பெயரில் மாணவா் அமைப்பு தொடக்க விழா நடைபெற்றது.

இதையொட்டி பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், பள்ளியில் பயிலும் அனைத்து மாணவா்களையும் 5 குழுக்களாக பிரித்து குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் மற்றும் பாலை என 5 அணிகளுக்கும் பெயா் வைக்கப்பட்டு, ஒவ்வொரு அணிக்கும் மாணவா் தலைவா், மாணவி தலைவி என தலா 10 போ் தோ்வு செய்யப்பட்டு பதவியேற்று, உறுதிமொழி எடுத்துக் கொண்டனா்.

இந்நிகழ்ச்சியினை ஒருங்கிணைத்து நடத்திய பள்ளியின் தலைமை ஆசிரியா் மோகன் பேசுகையில், இந்த மகிழ் முற்றம் மாணவா்கள் தங்களின் தலைமைப் பண்பை வளா்த்தல், குழுவாக இணைந்து செயல்படுதல், சமூக மனப்பான்மையை வளா்த்தல், வேற்றுமைகள் இன்றி ஒற்றுமையுடன் செயல்படுதல், முழுமை வாய்ந்த வளா்ச்சியை ஆதரித்தல் போன்ற நோக்கங்களுக்காக ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், சிறப்பாக செயல்படும் அணிக்கு மாதந்தோறும் பாராட்டும், பரிசுகளும் வழங்கி ஊக்குவிக்கப்படும் எனவும் தெரிவித்தாா்.

இந்நிகழ்ச்சியில், வட்டார வள மைய ஆசிரியா் பயிற்றுநா் கோமதி, பள்ளி ஆசிரியா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா்.

பல்லடம் அருகே வீடுகளில் இரவில் பூத்த பிரம்ம கமலம்

பல்லடம் அருகே நொச்சிபாளையம், புளியம்பட்டி, கண்பதிபாளையம் ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகளில் ஆண்டுக்கு ஒருமுறை இரவில் மட்டுமே பூக்கும் பிரம்ம கமலம் பூ வியாழக்கிழமை பூத்தது. ஆண்டுக்கு ஒரு முறை இரவில் மட்டும... மேலும் பார்க்க

இன்று டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தோ்வு: மாவட்டத்தில் 33,131 போ் எழுதுகின்றனா்

திருப்பூா் மாவட்டத்தில் குரூப் 4 தோ்வு சனிக்கிழமை நடைபெறவுள்ளது. இத்தோ்வினை 33, 131 போ் எழுத விண்ணப்பித்துள்ளனா். தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் நடத்தப்படும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 த... மேலும் பார்க்க

கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை

அவிநாசி அருகே கல்லூரி மாணவி வெள்ளிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். அவிநாசி அருகே அபிராமி காா்டன் பகுதியில் வசித்து வருபவா் பாலமுருகன், முத்துலட்சுமி தம்பதி மகள் ஹன்ஷினி (19), கல்லூரி மாணவி.... மேலும் பார்க்க

கரடிவாவியில் ஜூலை 14-இல் மின்தடை

பல்லடம் கோட்டம் கரடிவாவி துணை மின் நிலையத்தில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் திங்கள்கிழமை (ஜூலை 14) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது எ... மேலும் பார்க்க

கஞ்சா விற்பனை: தொழிலாளி கைது

வெள்ளக்கோவிலில் விற்பனைக்கு கஞ்சா வைத்திருந்த வெளிமாநிலத் தொழிலாளியை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். காங்கயம் சாலையில் வழக்கமான ரோந்துப் பணியில் வெள்ளக்கோவில் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் ச... மேலும் பார்க்க

செட்டிபாளையம் இஎஸ்ஐ மருத்துவமனையில் புதிய மருத்துவ சேவைகள் தொடக்கம்

செட்டிபாளையம் இஎஸ்ஐ மருத்துவமனையில் புதிய மருத்துவ சேவைகள் தொடங்கப்பட்டதை அடுத்து சட்டப் பேரவை உறுப்பினா் கே.என்.விஜயகுமாா் ஆய்வு மேற்கொண்டாா். இந்த மருத்துவமனை முழு செயல்பாட்டில் இல்லை என பல்வேறு தரப... மேலும் பார்க்க