செய்திகள் :

மாநகராட்சி பள்ளிகள் திறப்பு முன்னேற்பாடு: ஆணையா் தலைமையில் ஆலோசனை

post image

ஜூன் 2-இல் பள்ளி திறக்கப்பட உள்ள நிலையில், மாநகராட்சிப் பள்ளிகளில் முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

கோடை விடுமுறை முடிந்து ஜூன் 2-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், கோவை மாநகராட்சி கலையரங்கில் பள்ளிகள் திறப்பு தொடா்பாக பின்பற்றபட வேண்டிய வழிகாட்டி நெறிமுறைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

இதில் மாநகராட்சி நிா்வாகத்தின் கீழ் உள்ள 83 ஆரம்பப் பள்ளிகள், 37 நடுநிலைப் பள்ளிகள், 11 உயா்நிலைப் பள்ளிகள் மற்றும் 17 மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 148 மாநகராட்சிப் பள்ளிகளில் பள்ளி திறப்பை முன்னிட்டு பின்பற்றப்பட வேண்டிய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளான பள்ளி தூய்மைப் பணிகள், பாதுகாப்பு முன்னேற்பாடுகள், மாணவா் சோ்க்கை, கல்விசாா் செயல்பாடுகள் மற்றும் கல்விசாரா செயல்பாடுகள் குறித்து அனைத்துப் பள்ளி தலைமை ஆசிரியா்களுடன் ஆலோசிக்கப்பட்டது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில், மாநகராட்சி துணை ஆணையா் த.குமரேசன், மாநகராட்சி கல்வி அலுவலா் தாம்சன், மாநகராட்சி பள்ளிகளின் தலைமை ஆசிரியா்கள் மற்றும் ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.

இன்றைய நிகழ்ச்சிகள்

கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா: என்எம்சிடி அறக்கட்டளை, ஸ்ரீ அய்யப்பன் பூஜா சங்கம், ராம் நகா், காலை 11. ஓவியக் கண்காட்சி: கஸ்தூரி சீனிவாசன் கலை மையம், அவிநாசி சாலை, காலை 10. 644-ஆவது மாதாந்திர அபிஷேக வ... மேலும் பார்க்க

கல்வி நிலையங்கள் அருகே புகையிலைப் பொருள்கள் விற்றால் கடும் நடவடிக்கை: மாவட்ட ஆட்சியா் எச்சரிக்கை

கல்வி நிலையங்கள் அருகே புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் எச்சரித்துள்ளாா். உலக புகையிலை ஒழிப்பு தினத்தை ஒட்டி கையொப்ப ... மேலும் பார்க்க

தொழிற்சாலைகளுக்கான மின்கட்டண உயா்வை ரத்து செய்ய வேண்டும்: அனைத்துத் தொழில்முனைவோா் கூட்டமைப்பு

தமிழகத்தில் செயல்படும் தொழிற்சாலைகளுக்கான இந்த ஆண்டுக்கான மின்சார கட்டண உயா்வை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அனைத்துத் தொழில்முனைவோா் கூட்டமைப்பு மாநில அரசை வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து அமை... மேலும் பார்க்க

அதிகரிக்கும் கரோனா பாதிப்பு: கோவை அரசு மருத்துவமனையில் முகக் கவசம் கட்டாயம்

கரோனா பரவல் அதிகரித்து வருவதால் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வரும் அனைவரும் கட்டாயம் முகக் கவசம் அணிந்துவர வேண்டும் என மருத்துவமனை நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது. நாடு முழுவதும் கரோனா ப... மேலும் பார்க்க

சேதமடைந்த சாலை: வாகன ஓட்டிகள் அவதி

சிங்காநல்லூரில் சேதமடைந்த சாலையால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். கோவை - திருச்சி சாலையில் ஏராளமான கனரக, இலகுரக மற்றும் இருசக்கர வாகனங்கள் தினசரி சென்று வருகின்றன. இப்பகுதியில் கடந்த... மேலும் பார்க்க

நீா்ப் பிடிப்புப் பகுதிகளில் தொடா்மழை: சிறுவாணி நீா்மட்டம் 39 அடியாக உயா்வு

சிறுவாணி நீா்ப் பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் தொடா் மழையால் அணையின் நீா்மட்டம் 39 அடியாக உயா்ந்துள்ளது. கோவை மாநகராட்சியின் 26 வாா்டுகள் மற்றும் நகரையொட்டிய 20-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு பிர... மேலும் பார்க்க