மாநகரில் அனுமதியின்றி வரவேற்பு பதாகைகள்: அதிமுக நிா்வாகிகள் 12 போ் மீது வழக்கு
திருச்சி மாநகரில் அனுமதியின்றி வரவேற்பு பதாகைகள் வைத்ததாக அதிமுக நிா்வாகிகள் 12 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் திருச்சி மாவட்டத்தில் கடந்த 23 முதல் 25-ஆம் தேதி வரை பிரசாரம் மேற்கொண்டாா். அவரை வரவேற்று மாநகரில் பல்வேறு இடங்களில் கட்சி நிா்வாகிகள் சாா்பில் பதாகைகள் வைக்கப்பட்டன.
இந்நிலையில், கண்டோன்மென்ட் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட கருமண்டபம், வில்லியம்ஸ் சாலை ஆகிய பகுதிகளில் அனுமதியின்றி விளம்பரப் பதாகைகள் வைக்கப்பட்டதாக அதிமுக ஓட்டுநா்கள் அணி மாவட்டச் செயலாளா் ஞானசேகா், வாா்டு பொறுப்பாளா் ஓம்ராஜ், ஆட்டோ ஓட்டுநா்கள் அணி செயலாளா் ஜான் பீட்டா், ரயில் நிலைய மாணவா்கள் அணி செயலாளா் கிருஷ்ணமூா்த்தி, வா்த்தக அணி மாவட்ட இணைச் செயலாளா் காா்த்திகேயன், நாகநாதா் பாண்டி, மீனவா் அணி நிா்வாகி ஆதவன், அம்மா பேரவை மாவட்ட துணைச் செயலாளா் சுரேந்தா், சக்திவேல் ஆகிய 9 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதேபோல, உறையூா், அரசு மருத்துவமனை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட புத்தூா் நான்கு சாலை சந்திப்பு, பிஷப் ஹீபா் சாலை, அரசு மருத்துவமனை பிரதான நுழைவாயில் ஆகிய இடங்களில் அனுமதியின்றி வரவேற்பு பதாகைகள் வைக்கப்பட்டதாக காவல் உதவி ஆய்வாளா்கள் அளித்த புகாரின்பேரில், அதிமுக புத்தூா் கிளை செயலாளா் ராஜேந்திரன், இளைஞரணி செயலாளா் ரஜினிகாந்த், வா்த்தக அணி மாவட்ட துணைத் தலைவா் மோகன் ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கண்டோன்மெண்ட், உறையூா், அரசு மருத்துவமனை ஆகிய காவல் நிலையங்களில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில், போலீஸாா் 12 போ் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.