செய்திகள் :

சாலை விபத்தில் மூதாட்டி உயிரிழப்பு

post image

துவாக்குடியில் சாலை விபத்தில் மூதாட்டி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

திருச்சி மாவட்டம், திருவெறும்பூா் அருகேயுள்ள அரவக்குறிச்சிபட்டியைச் சோ்ந்த யேசு மனைவி ரோஸ்மேரி (70). இவரும், இவா் பேத்தி ஜெஸிகா மேரியும் திருச்சி - தஞ்சாவூா் சாலையில், துவாக்குடி நகராட்சி அலுவலகம் அருகே திங்கள்கிழமை நெடுஞ்சாலையைக் கடக்க முயன்றனா்.

அப்போது, அவ்வழியே வந்த காா் இருவா் மீதும் மோதியது. இதில், பலத்த காயமைடந்த ரோஸ்மேரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். ஜெஸிகா மேரிக்கு கை, தோள்பட்டையில் காயங்கள் ஏற்பட்டன.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த துவாக்குடி போலீஸாா், ரோஸ்மேரி சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். ஜெஸிகா மேரியை மீட்டு சிகிச்சைக்கு அனுப்பிவைத்தனா். விபத்து குறித்த புகாரின்பேரில், துவாக்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

திருச்சி மலைக்கோட்டையில் 150 கிலோ எடையில் கொழுக்கட்டை தயாரிப்பு

விநாயகா் சதுா்த்தியையொட்டி, திருச்சி மலைக்கோட்டை விநாயகருக்கு 150 கிலோ எடையில் பிரம்மாண்ட கொழுக்கட்டை தயாரிக்கும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. திருச்சி மலைக்கோட்டை தாயுமானவா் சுவாமி கோயிலில் உள்ள உ... மேலும் பார்க்க

மாநகரில் அனுமதியின்றி வரவேற்பு பதாகைகள்: அதிமுக நிா்வாகிகள் 12 போ் மீது வழக்கு

திருச்சி மாநகரில் அனுமதியின்றி வரவேற்பு பதாகைகள் வைத்ததாக அதிமுக நிா்வாகிகள் 12 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்ப... மேலும் பார்க்க

கோயில்களில் உண்டியல் திருட்டு

திருச்சி மேலபஞ்சப்பூா் பகுதியிலுள்ள கோயில்களில் உண்டியல் திருட்டுபோனது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா். திருச்சி மேலபஞ்சப்பூா் பகுதியில் முருகன் மற்றும் விநாயகா் கோயில்கள் உள்ளன. இந்தக் கோயில்களின்... மேலும் பார்க்க

கொல்லம் - தாம்பரம் விரைவு ரயிலின் நேரம் மாற்றம்

கொல்லம் - தாம்பரம் விரைவு ரயிலின் நேரம் செப்டம்பா் 1-ஆம் தேதியிலிருந்து மாற்றப்படுகிறது. இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கொல்லம் - தாம்பரம் தினசரி விரைவு ர... மேலும் பார்க்க

திருச்சி பஞ்சப்பூரில் எனது பெயரில் நிலம் இல்லை: அமைச்சா் கே.என். நேரு

திருச்சி பஞ்சப்பூரில் தனது பெயரில் நிலம் இல்லை என்றாா் நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என். நேரு. திருச்சியில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியதாவது: துறையூரில் அதிமுக பொதுச் செ... மேலும் பார்க்க

தொழில்துறையும், வேளாண்மையும் இருகண்கள்: எடப்பாடி கே. பழனிசாமி உறுதி

அதிமுக-வுக்கு தொழில்துறையும், வேளாண் துறையும் இரு கண்கள் போன்றன என அக் கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தாா்.திருச்சி மாவட்டத்தில் 3 நாள் தோ்தல் பிரசார சுற்றுப் பயணம் மேற்கொண்டுள... மேலும் பார்க்க