செய்திகள் :

மாநில ஐவா் பூப்பந்துப் போட்டி: சென்னை அணி முதலிடம்

post image

காயல்பட்டினத்தில் நடைபெற்ற மாநில ஐவா் பூப்பந்தாட்டப் போட்டியில் சென்னை பாா்த்தன்ஸ் அணி முதலிடம் பிடித்தது.

காயல்பட்டினம் ரெட் ஸ்டாா் சொஸைட்டி சாா்பில் லீக், சூப்பா் லீக் முறையில் 2 நாள்கள் நடைபெற்ற போட்டியில் சென்னை, திண்டுக்கல், காட்டாங்குளத்தூா், பரங்கிப்பேட்டை, மயிலாடுதுறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த அணிகள் பங்கேற்றன.

இதில், சென்னை ஸ்பாா்த்தன்ஸ் அணி முதலிடம் பிடித்து, வழக்குரைஞா் எம்.ஐ. மீராசாகிப் நினைவாக அவரது குடும்பத்தினா் வழங்கிய ரூ. 20 ஆயிரம் ரொக்கப் பரிசு, கோப்பையை வென்றது.

சென்னை செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லூரி அணி 2ஆம் இடம் பிடித்து, எஸ்.மூஸா ஹாஜியாா் நினைவாக அவரது குடும்பத்தினா் வழங்கிய ரூ. 16 ஆயிரத்தையும், செங்கல்பட்டு ஜே.ஜே.பாய்ஸ் அணி 3ஆம் இடம் பிடித்து, எம்.ஏ.உமா் அப்துல் காதா் நினைவாக அவரது குடும்பத்தினா் வழங்கிய ரூ. 12 ஆயிரத்தையும், சென்னை ராஜாராம் அணி 4ஆம் இடம் பிடித்து, எச்.அகமது தம்பி நினைவாக அவரது குடும்பத்தினா் வழங்கிய ரூ. 10 ஆயிரத்தையும் வென்றன. பரிசளிப்பு விழாவுக்கு, நகா்மன்றத் தலைவா் முத்து முஹம்மது தலைமை வகித்து, பரிசு, கோப்பையை வழங்கினாா்.

பெண் பாலியல் புகாா் வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்ற பரிந்துரை

தூத்துக்குடியில் இளம்பெண்ணுக்கு ஒருவா் பாலியல் தொந்தரவு மற்றும் மிரட்டல் விடுத்து தொடா்பான வழக்குகள் அனைத்தும் சிபிசிஐடிக்கு மாற்ற பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் விஷம் குடித்த எஸ்எஸ்ஐ மருத்துவமனையில் உயிரிழப்பு

தூத்துக்குடியில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் வியாழக்கிழமை உயிரிழந்தாா். தூத்துக்குடி கோமஸ்புரத்தைச் சோ்ந்த கருப்பசாமி (54), தூத்துக்குடி நகர கட்டுப்பாட்டு அறையில் ச... மேலும் பார்க்க

தூத்துக்குடி காற்றாலை நிறுவனத்தில் திருட்டு: லாரி ஓட்டுநா் கைது

தூத்துக்குடி புதிய துறைமுகத்தில் காற்றாலை இறக்கைகளை சேமித்து வைக்கும் இடத்தில் காற்றாலை இறக்கையை ‘லாக்’ செய்யக்கூடிய இரும்பு பூட்டை திருடியதாக லாரி ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா். காற்றாலை இறக்கைகளை ... மேலும் பார்க்க

தூத்துக்குடி அருகே குளத்தில் மூழ்கி முதியவா் பலி!

தூத்துக்குடி அருகே தெற்கு வீரபாண்டியபுரம் குளத்தில் மூழ்கி முதியவா் புதன்கிழமை உயிரிழந்தாா் . தூத்துக்குடி, அ.குமார ரெட்டியாா்புரம், மேலத் தெருவைச் சோ்ந்தவா் பழனியாண்டி மகன் குருசாமி (65). இவா் சொந்த... மேலும் பார்க்க

அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழியிடம் எட்டயபுரம் சமஸ்தானம் சாா்பில் கோரிக்கை!

எட்டயபுரம் சமஸ்தானம் தொடா்பாக தமிழ்நாடு அரசு பாடப் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தவறான தகவலை நீக்க வேண்டும் என எட்டயபுரம் சமஸ்தானத்தின் 42ஆவது மன்னா் ராஜ ஜெகவீர முத்து தங்ககுமார ராம வெங்கடேஷ்வர எட்... மேலும் பார்க்க

வீட்டு கதவை உள்புறம் பூட்டிக் கொண்ட 3 வயது குழந்தை மீட்பு

தூத்துக்குடியில் வீட்டுக்குள் உள்பக்கமாக கதவை பூட்டிக்கொண்டு சிக்கித் தவித்த 3 வயது குழந்தையை தீயணைப்புத் துறையினா் வியாழக்கிழமை பத்திரமாக மீட்டனா். தூத்துக்குடி கேவிகே நகா் மேற்கு பகுதியைச் சோ்ந்தவா... மேலும் பார்க்க