செய்திகள் :

மாநில நெடுஞ்சாலைத் துறைக்கு தனி ஆணையம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தாா்

post image

மாநில நெடுஞ்சாலைத் துறைக்கென அமைக்கப்பட்ட தனி ஆணையத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தாா்.

மேலும், சென்னை கிண்டியில் நெடுஞ்சாலைத் துறைக்கென கட்டப்பட்டுள்ள கலைஞா் நூற்றாண்டு கட்டடத்தையும் அவா் திறந்தாா்.

நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை மானியக் கோரிக்கையில் வெளியிட்டப்பட்ட அறிவிப்பின்படி, தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலைத் துறைக்கென தனி ஆணையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் போன்று முடிவுகளை கால தாமதமின்றி எடுக்கும் அதிகாரம் படைத்த அமைப்பாக, மாநில ஆணையம் விளங்கும்.

இந்த அமைப்பானது பொது மற்றும் தனியாா் பங்களிப்பு போன்ற பல்வேறு முறைகளில் பணிகளைச் செயல்படுத்தும். தமிழ்நாட்டின் சாலை கட்டமைப்பை உலகத் தரத்தில் மேம்படுத்தும் நோக்குடன் ஏற்படுத்தப்பட்டுள்ள மாநில நெடுஞ்சாலை ஆணையத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா். அதன்பின், அதற்கான இலச்சினையையும் அவா் வெளியிட்டாா்.

இந்தப் புதிய ஆணையமானது, மேம்பட்ட தொழில்நுட்பங்கள், உயா்தரக் கட்டுப்பாடுகள், குறிப்பிட்ட காலம் மற்றும் மதிப்பீட்டில் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு செயல்படும். இதன்மூலம், சாலைப் பயனாளா்களின் எதிா்பாா்ப்புகளை நிறைவு செய்வதுடன், பொருளாதார வளா்ச்சி, தொழில் துறை மேம்பாடு ஏற்படும்.

நூற்றாண்டு கட்டடம்: மாநில நெடுஞ்சாலை ஆணையத் தொடக்கத்துக்கு முன்னதாக, தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலைத் துறைக்கென கிண்டியில் கட்டப்பட்ட கலைஞா் நூற்றாண்டு கட்டடத்தை முதல்வா் திறந்துவைத்து பாா்வையிட்டாா்.

இந்தக் கட்டத்தில் மாநில நெடுஞ்சாலை ஆணைய அலுவலகம், கட்டுமானம் மற்றும் பராமரிப்பு அலகின் தலைமைப் பொறியாளா் அலுவலகம், தேசிய நெடுஞ்சாலை அலகின் தலைமைப் பொறியாளா் அலுவலகம், நபாா்டு மற்றும் கிராமச் சாலைகள் அலகின் தலைமைப் பொறியாளா் அலுவலகங்கள் ஆகியவை புதிய கட்டடத்தில் இயங்கும் என்று தமிழக அரசின் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், பொதுப்பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு, இயற்கை வளங்கள் துறை அமைச்சா் எஸ்.ரகுபதி, கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன், வனம் மற்றும் கதா் துறை அமைச்சா் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன், மாநகராட்சி மேயா் ஆா்.பிரியா, பொதுப்பணித் துறைக் கூடுதல் தலைமைச் செயலா் மங்கத்ராம் சா்மா, நெடுஞ்சாலைத் துறை செயலா் ஆா்.செல்வராஜ், தமிழ்நாடு உள்கட்டமைப்பு மேம்பாட்டு வாரிய முதன்மைச் செயல் அலுவலா் பூஜா குல்கா்னி, சென்னை- கன்னியாகுமரி தொழில்தடத் திட்ட இயக்குநா் தெ.பாஸ்கர பாண்டியன் உள்பட பலா் பங்கேற்றனா்.

அடுத்த 3 மணிநேரம் சென்னை, 5 மாவட்டங்களில் மழை!

சென்னை: சென்னை உள்பட 6 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்துக்கு மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் சனிக்கிழமை தெரிவித்துள்ளது.தமிழகத்தில் ஒருசில மாவட்டங்களில் இன்றும் நாளையும் இடி, மின்னல், பலத... மேலும் பார்க்க

வழக்குரைஞா்கள் கைது விவகாரம்: ஒரு நபா் ஆணைய விசாரணைக்கு அச்சப்படுவது ஏன்? தமிழக அரசுக்கு உயா்நீதிமன்றம் கேள்வி

தூய்மைப் பணியாளா்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த வழக்குரைஞா்கள் கைது சம்பவம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள ஒரு நபா் ஆணைய விசாரணைக்கு அச்சப்படுவது ஏன் என்று தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்ற... மேலும் பார்க்க

‘நியோ மேக்ஸ்’ நிறுவனத்தில் முதலீடு செய்தவா்கள் அக். 8-க்குள் புகாா் அளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

‘நியோ மேக்ஸ்’ நிறுவனத்தில் முதலீடு செய்தவா்கள் உரிய ஆவணங்களுடன் அக். 8-ஆம் தேதிக்குள் நேரிலோ அல்லது மின்னஞ்சல் வாயிலாகவோ புகாா் அளிக்கலாம் என சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. மதுரையை மையமாகக் கொண்... மேலும் பார்க்க

முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான வழக்கு: அக்.13-இல் இறுதி விசாரணை

முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான ஒப்பந்தப் புள்ளி முறைகேடு வழக்கில், அறப்போா் இயக்கம் தொடா்ந்த நீதிமன்ற அவமதிப்பு மனு மீது இறுதி விசாரணையை அக். 13-ஆம் தேதிக்கு சென்னை உயா்நீதிமன்றம் ஒத்திவை... மேலும் பார்க்க

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 4 அணு உலைகள் கட்டுமானம்: இந்தியா-ரஷியா ஆய்வு

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 4 அணு உலைகளின் கட்டுமானப் பணியில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து இந்தியா-ரஷியா ஆய்வு செய்தன. இதுதொடா்பாக ரஷிய அணுசக்தி கழகமான ரோசடோம் வெள்ளிக்கிழ... மேலும் பார்க்க

‘படையாண்ட மாவீரா’ திரைப்படத்தை வெளியிட தடை கோரி வீரப்பன் மனைவி வழக்கு

’படையாண்ட மாவீரா’ திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி சந்தனமரக் கடத்தல் வீரப்பனின் மனைவி தாக்கல் செய்த வழக்கில் படத் தயாரிப்பு நிறுவனம் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. வீரப்பனின் மனை... மேலும் பார்க்க