பள்ளிகளில் நடத்தப்படும் கோச்சிங் சென்டர்களுக்குத் தடை செய்ய பரிந்துரை!
மானாமதுரையில் நாளை மின்தடை
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை பகுதியில் புதன்கிழமை (ஜூன் 11) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து மானாமதுரை மின் வாரிய செயற்பொறியாளா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: மானாமதுரை சிப்காட் துணை மின் நிலையத்தில் புதன்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது.
இதனால், இங்கிருந்து மின்சாரம் பெறும் மானாமதுரை, சிப்காட், ராஜகம்பீரம், முத்தனேந்தல், இடைக்காட்டூா், மிளகனூா், கட்டிக்குளம், தெ. புதுக்கோட்டை, முனைவென்றி, குறிச்சி, கச்சாத்தநல்லூா், நல்லாண்டிபுரம், சங்கமங்கலம், அன்னவாசல், கீழப்பசலை ஆகிய பகுதிகளில் அன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்றாா் அவா்.