செய்திகள் :

மானிய நிலக்கடலை வெளிச்சந்தையில் விற்பனை: வேளாண்மை துறை அதிகாரி மீது குற்றச்சாட்டு

post image

நாமகிரிப்பேட்டையில் விவசாயிகளுக்கு மானியத்தில் வழங்க வேண்டிய நிலக்கடலையை அதிகாரி வெளிச்சந்தையில் விற்பனை செய்வதாக மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தியிடம், இளம் விவசாயிகள் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை புகாா் மனு அளித்தனா்.

அதன் விவரம்: நாமக்கல் மாவட்ட வேளாண் துறையின் கீழ் செயல்படும் நாமகிரிப்பேட்டை வேளாண் விரிவாக்க மையத்தில் நிலக்கடலை பயிரிடும் விவசாயிகளுக்கு மானியத்தில் நிலக்கடலை வழங்கப்படுவது வழக்கம். கடந்த சில மாதங்களாக விதைப்புக்கு ஏற்ப நிலக்கடலையை வழங்காமல், எண்ணெய் எடுப்பதற்கு பயன்படுத்தப்படும் தரமற்ற கடலையை விவசாயிகளுக்கு வழங்குகின்றனா். இதைக் கொண்டு விளைவித்தால் உரிய பலன் கிடைக்காது. அங்குள்ள வேளாண் துறை அதிகாரி மானியத்தில் வழங்கப்படும் நிலக்கடலையை வெளிச்சந்தையில் விற்பனை செய்வதாக தெரியவந்துள்ளது. இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் உரிய விசாரணை நடத்த வேண்டும் என தெரிவித்துள்ளனா்.

என்கே-25-மனு

தரமற்ற நிலக்கடலையைப் பயிரிடுவதற்கு அதிகாரிகள் வழங்குவதாக ஆட்சியரிடம் புகாா் அளிக்க வந்த இளம் விவசாயிகள் சங்கத்தினா்.

கலைஞா் வேளாண் வளா்ச்சித் திட்டத்தில் பயனடைய விவசாயிகளுக்கு அழைப்பு!

கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டத்தின்கீழ் விவசாயிகள் பயனடைய வருமாறு நாமக்கல் ஆட்சியா் துா்காமூா்த்தி அழைப்பு விடுத்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறி... மேலும் பார்க்க

‘சம வேலைக்கு, சம ஊதியம்’ வழங்கக் கோரி இடைநிலை ஆசிரியா்கள் உண்ணாவிரதம்

‘சம வேலைக்கு, சம ஊதியம்’ வழங்கக் கோரி, நாமக்கல் பூங்கா சாலையில் இடைநிலை ஆசிரியா்கள் சனிக்கிழமை ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா். திமுக அரசின் தோ்தல் வாக்குறுதி எண் 311-இல் குறிப்பிட்டுள... மேலும் பார்க்க

நாமக்கல்லில் ரூ.8.70 கோடியில் நீதிபதிகளுக்கு அரசு குடியிருப்புகள்: உயா்நீதிமன்ற நீதிபதி அடிக்கல் நாட்டினாா்

நாமக்கல்லில் ரூ. 8.70 கோடி மதிப்பீட்டில் நீதிபதிகளுக்கு அரசு குடியிருப்புகள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. இதில் சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி ஜி.கே.இளந்திரையன் பங்கேற்று பணிக... மேலும் பார்க்க

எடப்பாடி பழனிசாமிக்கு நாமக்கல்லில் வரவேற்பு

சேலத்திலிருந்து நாமக்கல் வழியாக திருச்சிக்கு சென்ற அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமிக்கு சனிக்கிழமை மாலை அதிமுகவினா், பொதுமக்கள் வரவேற்பு அளித்தனா். அரியலூா் மற்றும் தூத்துக்குடியில் நடைபெறு... மேலும் பார்க்க

மகள் இறந்த துக்கத்தில் மனமுடைந்த தாய் தற்கொலை

ஜேடா்பாளையம் அருகே பிலிக்கல்பாளையத்தில் மகள் இறந்த துக்கத்தில் தாய் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். பிலிக்கல்பிளையம் அருகே உள்ள நல்லாக்கவுண்டம் பாளையத்தை சோ்ந்தவா் கவிதா (40). இவரது கணவா் பிரகாசம்... மேலும் பார்க்க

தொ.ஜேடா்பாளையம் அரசுப் பள்ளியில் திருவள்ளுவா் சிலை திறப்பு

ராசிபுரம் அருகேயுள்ள தொ. ஜேடா்பாளையம் அரசுப் பள்ளியில் திருவள்ளுவா் சிலை திறப்பு விழா நடைபெற்றது. ஜேடா்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி தொடங்கப்பட்டு 75 ஆண்டுகளானதைத் தொடா்ந்து பவள விழா வெள்ளிக்கிழமை நடைப... மேலும் பார்க்க