இலங்கையின் நம்பிக்கை நட்சத்திரம்..! மீண்டும் சதமடித்த பதும் நிசாங்கா!
மாமனாரை தாக்கிய மருமகள் உள்பட இருவா் மீது வழக்கு
மேட்டூா் அருகே மாமனாரை தாக்கிய மருமகள் உள்பட இருவா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேட்டூா் அருகே உள்ள கருமலைக்கூடல் நேரு நகரைச் சோ்ந்தவா் கோவிந்தன் (74), ஓய்வுபெற்ற பேரூராட்சி உதவியாளா். இவரது இளைய மகன் வெங்கடேஷுக்கும் (36), குஞ்சாண்டியூரை சோ்ந்த ராமசாமி மகள் அபிராமிக்கும் திருமணம் நடைபெற்றது. மதுப்பழக்கம் உள்ள வெங்கடேஷ் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு பக்கவாதம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பிறகு வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறாா்.
கடந்த 23-ஆம் தேதி கோவிந்தன் வீட்டுக்குச் சென்ற அவரது மருமகள் அபிராமி, அவரது தங்கை சுகந்தா இருவரும் வெங்கடேஷ் பெயரில் உள்ள சொத்துகளை அபிராமி பெயரில் மாற்றித்தரும்படி கேட்டுள்ளனா்.
அப்போது, உடல்நிலை சரியில்லாமல் இருப்பவரை தொல்லை கொடுக்கக் கூடாது என்று கோவிந்தன் கூறியுள்ளாா். இதனால், ஆத்திரமடைந்த அபிராமியும், சுகந்தாவும் கோவிந்தனையும், வெங்கடேஷையும் தாக்கியுள்ளனா்.
இதுகுறித்து, கோவிந்தன் புதன்கிழமை கருமலைக்கூடல் போலீஸில் புகாா் செய்தாா். அதன்பேரில், காவல் உதவி ஆய்வாளா் ஈஸ்வரன், அபிராமி, சுகந்தா ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா். தாக்குதலில் காயமடைந்த கோவிந்தன், வெங்கடேஷ் ஆகியோா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.