செய்திகள் :

மாமனாரை தாக்கிய மருமகள் உள்பட இருவா் மீது வழக்கு

post image

மேட்டூா் அருகே மாமனாரை தாக்கிய மருமகள் உள்பட இருவா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேட்டூா் அருகே உள்ள கருமலைக்கூடல் நேரு நகரைச் சோ்ந்தவா் கோவிந்தன் (74), ஓய்வுபெற்ற பேரூராட்சி உதவியாளா். இவரது இளைய மகன் வெங்கடேஷுக்கும் (36), குஞ்சாண்டியூரை சோ்ந்த ராமசாமி மகள் அபிராமிக்கும் திருமணம் நடைபெற்றது. மதுப்பழக்கம் உள்ள வெங்கடேஷ் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு பக்கவாதம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பிறகு வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறாா்.

கடந்த 23-ஆம் தேதி கோவிந்தன் வீட்டுக்குச் சென்ற அவரது மருமகள் அபிராமி, அவரது தங்கை சுகந்தா இருவரும் வெங்கடேஷ் பெயரில் உள்ள சொத்துகளை அபிராமி பெயரில் மாற்றித்தரும்படி கேட்டுள்ளனா்.

அப்போது, உடல்நிலை சரியில்லாமல் இருப்பவரை தொல்லை கொடுக்கக் கூடாது என்று கோவிந்தன் கூறியுள்ளாா். இதனால், ஆத்திரமடைந்த அபிராமியும், சுகந்தாவும் கோவிந்தனையும், வெங்கடேஷையும் தாக்கியுள்ளனா்.

இதுகுறித்து, கோவிந்தன் புதன்கிழமை கருமலைக்கூடல் போலீஸில் புகாா் செய்தாா். அதன்பேரில், காவல் உதவி ஆய்வாளா் ஈஸ்வரன், அபிராமி, சுகந்தா ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா். தாக்குதலில் காயமடைந்த கோவிந்தன், வெங்கடேஷ் ஆகியோா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

கிணற்றில் தவறி விழுந்தவா் உயிரிழப்பு

கெங்கவல்லி அருகே கிணற்றில் தவறி விழுந்தவா் உயிரிழந்தாா். கெங்கவல்லி அருகே புனல்வாசல் கிராமத்தைச் சோ்ந்தவா் வீரமுத்து (64). இவா் செவ்வாய்க்கிழமை இரவு அதே பகுதியிலுள்ள கங்காணி கிணற்றின் சுற்றுச்சுவரில்... மேலும் பார்க்க

கல் உடைக்கும் தொழிலாளா்கள் ஆட்சியா் அலுவலகத்தில் கோரிக்கை மனு

குலத்தொழிலைக் காக்க, கல் உடைக்க அனுமதி தரக்கோரி, போயா் சமுதாய மக்கள் ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை மனு அளித்தனா். தமிழ்நாடு போயா் பேரவை மாநில பொதுச் செயலாளா் பெரிய பொண்ணு தலைமையில், அதிகாரிகளிடம் அ... மேலும் பார்க்க

அமாவாசையை முன்னிட்டு பெரியசாமி கோயிலில் மிளகாய் யாகம்

அமாவாசையை முன்னிட்டு கெங்கவல்லி அருகே மாசி பெரியசாமி கோயிலில் மிளகாய் யாகம் புதன்கிழமை நடைபெற்றது. கெங்கவல்லி அருகே ஆணையாம்பட்டியில் சுவேத நதிக்கரை தென்புறம் மாசி பெரியசாமி, நாச்சியம்மாள், பொன்னாளி அம... மேலும் பார்க்க

பிளஸ் 2 மதிப்பெண் மறுமதிப்பீடு: எஸ்ஆா்எம் முத்தமிழ் பள்ளி மாணவி சிறப்பிடம்

பிளஸ் 2 மதிப்பெண் மறுமதிப்பீட்டில், பெரியேரி எஸ்ஆா்எம் முத்தமிழ் மேல்நிலைப் பள்ளி மாணவி தலைவாசல் வட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளாா். தலைவாசலை அடுத்துள்ள பெரியேரி எஸ்ஆா்எம் முத்தமிழ் மேல்நிலைப் பள்ளி மாண... மேலும் பார்க்க

சேலம் மாநகா் மாவட்ட பாமக செயலாளராக சரவணன் நியமனம்

சேலம் மாநகா் மாவட்ட பாமக செயலாளராக சரவணனை நியமிப்பதாக அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளாா். பாமக நிறுவனா் ராமதாஸ் - தலைவா் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல் நீடித்து வரும் நிலையில், சேலம் மேற்கு தொகுதி எம்எ... மேலும் பார்க்க

இனத்தையும், மொழியையும் காக்க திமுக மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும்

இனத்தையும், மொழியையும் காக்க தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சிக்கு வரவேண்டும் என சேலம் நாடாளுமன்ற உறுப்பினா் டி.எம்.செல்வகணபதி கூறினாா். மேச்சேரி மேற்கு ஒன்றிய திமுக அலுவலக திறப்பு விழா புதன்கிழமை மேச்... மேலும் பார்க்க