செய்திகள் :

``மாமியார் வீட்டில் மரியாதை இல்லை..'' - மனைவியை கொலை செய்த கணவர் பகீர் வாக்கு மூலம்

post image

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே உள்ள பாலப்பள்ளம் படுவூர் காட்டுவழி பகுதியைச் சேர்ந்தவர் டார்வின்(46). கூலி தொழிலாளி. இவரது மனைவி பபிதா நித்யசெல்வி(39). இவர்களுக்கு பென்குரூஸ்(9) என்ற மகனும், டிக்ஸ்மென்ரின்(7) என்ற மகளும் உள்ளனர். பென்குரூஸ் கழுவன்திட்டை பகுதியில் உள்ள மனவளர்ச்சி குன்றியோருக்கான பள்ளியில் படித்துவருகிறான்.

டிக்ஸ்மென்ரின் பாட்டி வீட்டில் தங்கியுள்ளார். டார்வினும், அவரது மனைவி பபிதா நித்யசெல்வி ஆகியோர் தங்கள் வீட்டில் இருந்துள்ளனர். நேற்று முன் தினம் பகல் முழுவதும் அவர்களது வீடு திறக்கப்படாமல் இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அப்பகுதியினர் இரவு நேரத்தில் வீட்டை திறந்து பார்த்துள்ளனர்.

கொலைச்செய்யப்பட்ட பபிதா நித்யசெல்வி, கணவர் டார்வின்

அங்கு பபிதா நித்யசெல்வி(39) பிணமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து கருங்கல் காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தனர். போலீஸார் அங்குசென்று பபிதா நித்யசெல்வியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளத்தில் உள்ள கன்னியாகுமரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் பபிதா நித்யசெல்வியின் கணவர் டார்வினிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். அதில் தனது மனைவியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார் டார்வின்.

இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறுகையில், "டார்வினின் மனைவி பபிதா நித்யசெல்வி தனது தாய் வீட்டில் தங்கியிருந்ததுடன், கணவரையும் தனது பெற்றோர் வீட்டில் தங்க வைத்துள்ளார். மாமியார் வீட்டில் தொடர்ந்து தங்கியிருந்ததால் தனக்கு முறையான மரியாதை எதுவும் கிடக்கவில்லை என டார்வின் அடிக்கடி மனைவியிடம் ஆதங்கப்பட்டு வந்தாராம். இது சம்பந்தமாக டார்வினுக்கும் மனைவி பபிதா நித்யசெல்விக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் நடந்து வந்திருக்கிறது.

மனைவியை கொலைசெய்த வழக்கில் கைதான டார்வின்

சம்பவ தினத்தில் அதிகாலையிலேயே கணவன், மனைவி இடையே வாக்குவாதம் நடந்திருக்கிறது. அப்போது ஆத்திரம் அடைந்த டார்வின் துணியால் மனைவியின் கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளார். மனைவியை கொலை செய்த பின்னர் வெளியே சென்றால் போலீஸ் கைதுசெய்துவிடும் என்ற பயத்தில் மனைவியின் பிணத்துடன் பகல் முழுவதும் இருந்துள்ளார்.

இரவு நேரத்தில் யாருக்கும் தெரியாமல் மனைவி உடலை விட்டுக்கு வெளியே கொண்டுசென்று மறைவான இடத்தில் வீசிவிடலாம் என திட்டமிட்டுள்ளார். இதற்கிடையே இரவு நேரத்தில் அப்பகுதி மக்கள் வீட்டை திறந்ததால் தகவல் வெளியே தெரிந்தது. டார்வினை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்திவருகிறோம்" என்றனர்.

Yash Dayal: "திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றிவிட்டார்" - RCB வீரர் யஷ் தயாள் மீது இளம்பெண் புகார்

இந்தாண்டு ஐபிஎல் சாம்பியன் பட்டம் வென்ற ஆர்.சி.பி அணியில் கடந்த இரண்டாண்டுகளாக முக்கிய பவுலராகத் திகழும் யஷ் தயாள், திருமணம் செய்வதாகக் கூறி தன்னை ஏமாற்றிவிட்டதாக உத்தரப்பிரதேச பெண் ஒருவர் புகாரளித்தி... மேலும் பார்க்க

`தலைமறைவான ஜெகன் மூர்த்தி?' - தனிப்படை அமைத்த சிபிசிஐடி! - உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு

திருவள்ளூர் மாவட்டம் திருவலங்காடு பகுதியில் காதல் திருமணம் செய்த வாலிபரை ஏடிஜிபி ஜெயராம் காரில் கடத்தி சென்று மிரட்டி தாக்கிய விவகாரம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது. இது தொடர்பாகப் புரட்சி பார... மேலும் பார்க்க

`கச்சத்தீவு மீட்பு மாநாடு' நடத்தி விட்டு மீன் பிடிக்க சென்ற மீனவர்கள்.. கடலில் சிறை பிடித்த இலங்கை

ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடி தடை காலம் முடிவடைந்த நிலையில், கடந்த 15-ம் தேதி முதல் மீன்பிடிக்க சென்று வருகின்றனர். மீன்பிடி தடை காலம் முடிந்து மீன்பிடிக்க சென்ற போதும் மீனவர்கள் எதிர்பார்த்த அளவிற்கு... மேலும் பார்க்க

Puri stampede: பூரி ஜெகன்நாதர் கோயில்: ரதயாத்திரை கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் பலி; 50 பேர் காயம்

ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் ஒடிசா பூரி ஜெகன்நாதர் கோயில் ரதயாத்திரை மிகவும் பிரபலம். இந்த ரதயாத்திரையைக் காண கோடிக்கணக்கான பக்தர்கள் நாடு முழுவதும் இருந்து வருவதுண்டு. இந்த ரதயாத்திரையின் போது பூரி நகரம... மேலும் பார்க்க

மரத்தில் தொங்கிய உடல்; கொலையா?தற்கொலையா? கேள்வி கேட்கும் அரசியல் கட்சிகள்; என்ன நடந்தது?

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த சென்னாக்கால்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் (42). கூலித் தொழிலாளியான முருகனுக்கு மணிமேகலை என்ற மனைவியும், கலாவதி, காவியா என்ற மகள்களும் உள்ளனர். இந்நிலையி... மேலும் பார்க்க

விசாரணைக்கு சென்ற இளைஞர் மரணம்; திருப்புவனம் காவல்நிலையத்தில் உறவினர்கள் போராட்டம்.. நடந்தது என்ன?

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரத்தில் பிரசித்தி பெற்ற பத்ரகாளியம்மன் கோயில் உள்ளது. இங்கு தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் தரிசனம் செய்ய வருகிறார்கள்.இக்கோயிலில் தனியார் நிறுவனம் மூலம் அப்பக... மேலும் பார்க்க