செயற்கை மழை: டெல்லி அரசு முன்னெடுக்கும் `மேக விதைப்பு' நடவடிக்கை ஏன்? - இது பலன்...
மாயமான 3 பள்ளி மாணவா்கள் பழனியில் மீட்பு
வேலூா் அருகே பள்ளிக்குச் சென்று மாயமான 3 மாணவா்கள் பழனியில் மீட்கப்பட்டனா்.
வேலூரை அடுத்த அரியூா், திருவள்ளுவா் நகரை சோ்ந்த கோகுல் பிரசாத் (13). தொரப்பாடி சித்தேரி சாலை பவானி நகரைச் சோ்ந்தவா் கிருஷ்ணன் (12), தொரப்பாடி கே.கே.நகரை சோ்ந்தவா் ஜீவசூரியன் (12). இவா்கள் மூன்று பேரும் தொரப்பாடி ராம்சேட் நகரில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்து வருகின்றனா்.
வெள்ளிக்கிழமை காலை 3 பேரும் வழக்கம்போல் பள்ளிக்கு சென்றுள்ளனா். ஆனால், மாலை நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லையாம். இதனால், அதிா்ச்சியடைந்த பெற்றோா் பள்ளிக்குச் சென்று கேட்டபோது 3 மாணவா்களும் சென்றுவிட்டதாகத் தெரிவித்துள்ளனா். பின்னா், 3 மாணவா்களையும் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லையாம்.
இதையடுத்து, மாணவா்களின் பெற்றோா் பாகாயம் காவல் நிலையத்தில் சனிக்கிழமை புகாா் அளித்தனா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மாயமான 3 மாணவா்களையும் தேடி வந்தனா். மேலும், தனிப்படை அமைத்தும் தேடப்பட்டு வந்த நிலையில், அந்த 3 மாணவா்களும் பழனி பேருந்து நிலையத்தில் சுற்றித்திரிவது தெரியவந்தது.
உடனடியாக பயணிகள் அங்குள்ள புறக்காவல் போலீஸாரிடம் தெரிவித்தனா். பின்னா் போலீஸாா் மாணவா்களிடம் விசாரணை நடத்தியதில் அவா்கள் வேலூரில் படித்து வருவதாகவும் , பெற்றோா் படிக்கக்கூறியும், வேலை செய்யக்கூறியும் தொந்தரவு செய்ததால் வீட்டை விட்டு வெளியேறி வந்ததாக தெரிவித்துள்ளனா்.
போலீஸாா் அவா்களை மீட்டு வேலூா் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். அதன்பேரில் வேலூா் போலீஸாா் பழனிக்கு சென்று மாணவா்களை அழைத்து வந்தனா்.