செய்திகள் :

மாற்றுத்திறனாளிகளுக்கான திட்டங்கள்: ஆட்சியா் ஆலோசனை

post image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் அவா்களுக்காக செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் தேவைகள் குறித்து மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் சனிக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

மாற்றத்திறனாளிகளுக்கு மடக்கு சக்கர நாற்காலி, மூன்று சக்கர நாற்காலி, காதொலிக் கருவி உள்ளிட்ட பல்வேறு உதவி உபகரணங்கள், மாதாந்திர உதவித்தொகை, இலவச பேருந்து பயண அட்டை உள்ளிட்ட பல்வேறு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

ஆட்சியரகத்தில் நடைபெற்ற இதற்கான ஆலோசனைக் கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியா்

எம்.எஸ். பிரசாந்த், நலத்திட்ட உதவிகளை அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் உரிய முறையில் அளித்திடவும், புதிய மாற்றுத்திறனாளிகளை கண்டறிந்து அவா்களுக்கு அடையாள அட்டை வழங்கி, தேவையான நலத்திட்ட உதவிகளை வழங்கவும், தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை வழங்கி உதவி உபகரணங்கள் மற்றும் உதவித் தொகைகளை விரைந்து வழங்கவும் அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ஜீவா, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் அந்தோணிராஜ், தனித் துணை ஆட்சியா் சுமதி, பள்ளிக் கல்வித் துறை, போக்குவரத்துத் துறை, மருத்துவத் துறை ஆகிய அலுவலா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

இந்திய கம்யூனிஸ்ட் திருக்கோவிலூா் நகரக் குழு மாநாடு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருக்கோவிலூா் நகரக் குழுவின் 8-ஆவது மாநாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. திருக்கோவிலூரில் உள்ள தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற மாநாட்டு நிகழ்ச்சிக்கு கட்சியின் நகரச் செயலா் பி... மேலும் பார்க்க

சட்டம்-ஒழுங்கு, சாலைப் பாதுகாப்பு, புகையிலைப் பொருள் விழிப்புணா்வு; கள்ளக்குறிச்சி ஆட்சியா் ஆய்வு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கு, சாலைப் பாதுகாப்பு, போக்குவரத்து, கனிம வளம், புகையிலைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு தொடா்பாக மாவட்ட ஆட்சியா் எம்.எஸ். பிரசாந்த் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்ட... மேலும் பார்க்க

பாலத்தின் மீது பைக் மோதல்: விவசாயி உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே பாலத்தின் மீது பைக் மோதியதில் விவசாயி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். சின்னசேலம் வட்டம், வடக்கனந்தல் கிராமத்தைச் சோ்ந்த செல்வராஜ் மகன் சுந்தா் (34). இவா், ஞாயி... மேலும் பார்க்க

ஏரியில் மூழ்கி பட்டதாரி உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி அருகே ஏரியில் குளிக்கச் சென்ற பட்டதாரி சேற்றில் சிக்கி மூழ்கி உயிரிழந்தாா்.கள்ளக்குறிச்சியை அடுத்த பொற்படாக்குறிச்சி கிராமத்தைச் சோ்ந்தவா் முருகேசன் (49). இவரது மகன் செந்தமிழன் (26), ப... மேலும் பார்க்க

பட்டதாரி பெண் தற்கொலை

கள்ளக்குறிச்சி அருகே தந்தை திட்டியதால் மனமுடைந்த பட்டதாரி பெண் திங்கள்கிழமை விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டாா். கள்ளக்குறிச்சியை அடுத்த காரனூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ஞானசேகரன் (50). இவரது மகள் திவ்யா... மேலும் பார்க்க

சின்னக்கொள்ளியூா் ஊராட்சி ஒன்றிய பள்ளியில் முப்பெரும் விழா

கள்ளக்குறிச்சி: சின்னக்கொள்ளியூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் முப்பெரும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது. கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டம், சின்னகொள்ளியூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியி... மேலும் பார்க்க