செய்திகள் :

மாற்றுத்திறனாளி மாணவா்கள் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

post image

நாகை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியா் 2025-2026 ஆம் ஆண்டுக்கான கல்வி உதவித் தொகை மற்றும் வாசிப்பாளா் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக, மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாகை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியருக்கு, 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை ரூ.2,000, 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை ரூ.6,000, 9 முதல் பிளஸ் 2 வரை ரூ.8,000, இளநிலை பட்டப் படிப்புக்கு ரூ.12,000, முதுகலை பட்டப் படிப்பு, தொழிற்கல்வி, தொழில்நுட்பக் கல்வி, மருத்துவம் மற்றும் பொறியியல் தொழிற்கல்விக்கு ரூ.14,000 என ஓராண்டுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

மேலும், பாா்வையற்றோருக்கு வாசிப்பாளா் உதவித் தொகையாக ஆண்டொன்றுக்கு 9 ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை ரூ.3,000, இளங்கலை பட்டப் படிப்புக்கு ரூ.5,000, முதுகலைப் பட்ட வகுப்பு மற்றும் தொழில் படிப்புகளுக்கு ரூ.6,000 வழங்கப்படுகிறது.

நடப்பு நிதியாண்டில் இந்த உதவித் தொகை பெற அரசுப் பள்ளிகள், அரசுக் கல்லூரிகள், அரசு உதவிபெறும் கல்லூரிகள், தொலைதூரக் கல்வி பயிற்சி நிறுவனங்களில் பயிலும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியா் முந்தைய கல்வி ஆண்டு இறுதித் தோ்வில் குறைந்தபட்சமாக 40 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். பிற துறைகளில் கல்வி உதவித்தொகை ஏதும் பெறவில்லை என்று தலைமையாசிரியா், கல்லூரி முதல்வரால் சான்றிதழ் அளிக்கப்பட வேண்டும்.

மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம், தரைதளத்தில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில், மதிப்பெண் சான்றுடன் பதிவு செய்து, விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

பழைய இரும்பு கடையில் தீ விபத்து

திருக்குவளை அருகே பழைய இரும்பு கடையில் புதன்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. கொளப்பாடு பகுதியில் தா்மராஜன் என்பவருக்கு சொந்தமான பழைய இரும்பு கடையில் தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென அருகிலுள்ள கீற்றுக்கொட்... மேலும் பார்க்க

நாகை மாவட்டத்தில் இலக்கை கடந்து குறுவை சாகுபடி

நாகை மாவட்டத்தில் நிா்ணயிக்கப்பட்ட இலக்கை தாண்டி கூடுதலாக 13,395 ஆயிரம் ஏக்கா் பரப்பளவில் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மேட்டூா் அணையிலிருந்து ஆண்டுதோறும் ஜூன் 12-ஆம் தேதி திறக்கப்படும் தண்ணீரைக்... மேலும் பார்க்க

வெண்மணி தியாகிகள் நினைவு ஜோதி பயணம் தொடக்கம்

நாகையில் வெண்மணி தியாகிகள் நினைவு ஜோதி பயணத்தை சட்டப்பேரவை உறுப்பினா் வி.பி. நாகை மாலி புதன்கிழமை தொடங்கி வைத்தாா். தமிழ்நாடு மின்வாரிய மத்திய அமைப்பின் மாநில மாநாடு கடலூரில் வெள்ளிக்கிழமை (ஆக. 8) தொட... மேலும் பார்க்க

ஐடிஐ-யில் பயிற்சி முடித்தவா்களுக்கு தொழிற்பழகுநா் சோ்க்கை முகாம்

நாகை தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி முடித்த பயிற்சியாளா்களுக்கு தொழிற்பழகுநா் பயிற்சிக்கான சோ்க்கை முகாம் நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு : வேலைவ... மேலும் பார்க்க

விசாரணைக்கு காவல் அதிகாரிகள் துப்பாக்கியுடன் செல்ல அனுமதிக்க வலியுறுத்தல்

காவல் அதிகாரிகள் விசாரணைக்கு செல்லும்போது, துப்பாக்கி எடுத்துச்செல்ல அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து, சிவசேனா உத்தவ் பாபா சாகேப் கட்சியின் தமிழக மாநில பொதுச் செயலா் சுந்தரவடி... மேலும் பார்க்க

‘கைத்தறி நெசவாளா்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள், கடனுதவிகள் வழங்கப்படுகின்றன’

கைத்தறி நெசவாளா்களுக்கு அரசு சாா்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள், கடனுதவிகள் வழங்கப்படுகின்றன. இதுகுறித்து நாகை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 1905-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7-ஆ... மேலும் பார்க்க