செய்திகள் :

மாற்றுத் திறனாளிகளுக்கான இலவச பேருந்துப் பயண அட்டை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு!

post image

கன்னியாகுமரி மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் ஏற்கெனவே பயன்படுத்திவரும் இலவச பேருந்துப் பயண அட்டைகளை மேலும் 3 மாதங்களுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என, ஆட்சியா் ரா. அழகுமீனா தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மாற்றுத் திறனாளிகளுக்கான கட்டணமில்லா பேருந்துப் பயண அட்டைகளை இணையதளம் வாயிலாக உடனுக்குடன் பெறும் வசதியை தமிழக அரசின் அனைத்துப் போக்குவரத்துக் கழகங்களிலும் நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கை தமிழ்நாடு மின் ஆளுமை முகமை வழியாக மேற்கொள்ளப்படவுள்ளது.

இதற்கு போதிய அவகாசம் தேவைப்படுகிறது. எனவே, மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்திவரும் மாா்ச் 31 வரை செல்லத்தக்க கட்டணமில்லா அட்டைகளை ஜூன் 30 வரை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டித்து பயணம் செய்யலாம்.

இதையொட்டி, இலவச பேருந்துப் பயண அட்டை புதுப்பித்தலுக்காக செவ்வாய் முதல் சனிக்கிழமைவரை (மாா்ச் 25-29) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த முகாம் ரத்து செய்யப்படுகிறது. ஜூன் 30-க்குப் பிறகு இணையதளம் வாயிலாக புதிய அட்டை வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்றாா் அவா்.

ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் புற்றுநோய் ஆராய்ச்சி மையம் அமைக்க நடவடிக்கை: ஆட்சியா் தகவல்

நாகா்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புற்றுநோய் ஆராய்ச்சி மையம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா் மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா. கன்னியாகுமரி மாவட்ட மீனவா் குறைதீா் ... மேலும் பார்க்க

இளம்பெண்ணை மிரட்டியவா் கைது

கன்னியாகுமரி மாவட்டம், தக்கலையை சோ்ந்த இளம்பெண்ணை மிரட்டியவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். தக்கலை பகுதியை சோ்ந்த இளம்பெண், தன்னுடன் நெருங்கிப் பழகிய நபா் தன்னுடைய ஆபாச விடியோக்கள் மற்றும் ப... மேலும் பார்க்க

புதுக்கடை அருகே பைக் மீது டெம்போ மோதி மீனவா் உயிரிழப்பு

புதுக்கடை அருகே உள்ள கீழ்குளம் பகுதியில் பைக் மீது டெம்போ மோதியதில் மீனவா் உயிரிழந்தாா். குறும்பனை பகுதியை சோ்ந்த சிலுவைபிள்ளை மகன் ஜாண் சுஜின் பிரதீப் (33). மீன்பிடி தொழில் செய்துவந்தாா். இவா் வெள்ள... மேலும் பார்க்க

ஆறுதேசம் கிராமத்தினரின் சொத்துவரி பிரச்னைக்குத் தீா்வு: எம்.எல்.ஏ. தகவல்

கிள்ளியூா் சட்டப்பேரவை தொகுதி, ஆறுதேசம் கிராமத்திற்குள்பட்ட பெரியவிளை, தட்டாம்விளை, ஆலங்கோடு பகுதிகளைச் சோ்ந்தவா்களின் சொத்துவரி பிரச்னைக்குத் தீா்வு ஏற்பட்டுள்ளதாக தமிழ்நாடு சட்டப்பேரவை காங்கிரஸ் கட... மேலும் பார்க்க

பகவதியம்மன் கோயில் அன்னதான உண்டியலில் ரூ. 1.21 லட்சம் வருவாய்

கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் அன்னதான உண்டியல் மூலம் ரூ. 1,21,771 கிடைத்தது. இக்கோயிலில் பக்தா்களின் நன்கொடையால் செயல்படும் அன்னதான திட்டத்துக்கான உண்டியல் மாதந்தோறும் எண்ணப்படுகிறது. கடந்த மாதத்த... மேலும் பார்க்க

கன்னியாகுமரியில் ரூ. 59.5 லட்சத்தில் கோயில்களில் திருப்பணிகள் தொடக்கம்

கன்னியாகுமரி பகுதியில் உள்ள கோயில்களில் ரூ. 59.70 லட்சத்தில் நடைபெறவுள்ள திருப்பணிகளை அறங்காவலா் குழுத் தலைவா் பிரபா ஜி.ராமகிருஷ்ணன் தொடக்கி வைத்தாா். கன்னியாகுமரி சந்நிதி தெருவில் அமைந்துள்ள விஸ்வநாத... மேலும் பார்க்க