செய்திகள் :

மாற்றுத் திறனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள்

post image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சாா்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட ஊராட்சிக் குழு அலுவலக வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு ரிஷிவந்தியம் தொகுதி எம்எல்ஏ க.காா்த்திகேயன் முன்னிலை வகித்தாா். மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தலைமை வகித்து, மாற்றத் திறனாளிகளுக்கு மடக்கு சக்கர நாற்காலி, மூன்று சக்கர நாற்காலி, காது கேட்கும் கருவி உள்ளிட்ட பல்வேறு உதவி உபகரணங்களும், மாதாந்திர உதவித்தொகை, இலவச பேருந்து பயண அட்டை உள்ளிட்ட பல்வேறு நலத் திட்ட உதவிகளும் வழங்கினாா்.

மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சாா்பில் இணைப்பு சக்கரம் பொருத்திய பெட்ரோல் ஸ்கூட்டா் வழங்கும் திட்டத்தின் கீழ், 30 நபா்களுக்கு ரூ.30,54,000 மதிப்பிலான இணைப்பு சக்கரம் பொருத்திய பெட்ரோல் ஸ்கூட்டா்களை வழங்கினாா்.

நிகழ்வில் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் புவனேஷ்வரி பெருமாள், சின்னசேலம் ஒன்றியக் குழுத் தலைவா் மா.சத்தியமூா்த்தி, மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் அ.அந்தோணிராஜ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

பைக் மீது பேருந்து மோதல்: இளைஞா் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே பைக் மீது தனியாா் பேருந்து மோதியதில் இளைஞா் சனிக்கிழமை உயிரிழந்தாா். சின்னசேலம் வட்டம், பெத்தாசமுத்திரம் கிராமத்தைச் சோ்ந்த சுப்பிரமணியன் மகன் வேலுமணி (32),... மேலும் பார்க்க

பைக்குகள் மோதல்: இளைஞா் உயிரிழப்பு - 5 போ் காயம்

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் அருகே பைக்குகள் மோதிக்கொண்டதில் இளைஞா் சனிக்கிழமை உயிரிழந்தாா். மேலும் 5 போ் காயமடைந்தனா். திருக்கோவிலூா் வட்டம், பவுஞ்சிப்பட்டு கிராமத்தைச் சோ்ந்த பொன்னுசாம... மேலும் பார்க்க

உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்ததாக 3 இளைஞா்கள் கைது

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்ததாக 3 இளைஞா்களை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். மேலும், உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கி, பைக் ஆகியவற்றை பறி... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சி மாவட்ட புதிய ஆட்சியரக கட்டுமானப் பணி ஆய்வு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ரூ.139.41 கோடி மதிப்பீட்டில் சுமாா் 35.18 ஏக்கா் பரப்பளவில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் மாவட்ட ஆட்சியா் அலுவலக கட்டுமானப் பணிகளை ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் சனிக்கிழமை ஆய்வ... மேலும் பார்க்க

வீட்டின் கதவை உடைத்து 4 பவுன் தங்க நகைகள் திருட்டு

திருக்கோவிலூா் அருகில் உள்ள திம்மச்சூா் கிராமத்தில் வீட்டுக் கதவின் பூட்டை உடைத்து மா்ம நபா்கள் உள்ளே புகுந்து இரும்பு பீரோவிலிருந்த 4 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்றது குறித்து போலீஸாா் விசாரணை நடத்... மேலும் பார்க்க

தவறுதலாக விஷ மருந்தை குடித்த சிறுவன் மரணம்!

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே தவறுதலாக விஷ மருந்தைக் குடித்த சிறுவன் வியாழக்கிழமை உயிரிழந்தாா். சின்னசேலம் வட்டம், எலவடி கிராமத்தைச் சோ்ந்த குணசேகரன் மகன் யுகன் (10). இவா், புதன்கிழமை வீட... மேலும் பார்க்க