செய்திகள் :

மாற்று இடத்தில் தடுப்பணை: அரசு பரிசீலிக்க பி.ஆா். பாண்டியன் வலியுறுத்தல்

post image

உத்தமசோழபுரம் வெட்டாற்றில் தடுப்பணை கட்டுவதை கைவிட்டு, மாற்று இடத்தில் கட்ட அரசு பரிசீலிக்க வேண்டும் என தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளா் பி.ஆா். பாண்டியன் கூறினாா்.

இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியது: நாகை மாவட்டம், திருமருகல் ஒன்றியம் உத்தமசோழபுரத்தில் வெட்டாற்றின் குறுக்கே கடல் பரப்பிலிருந்து 7.50 கி.மீ. தொலைவில் மேல் நோக்கி கடல்நீா் உட்புகாமல் தடுப்பணை அமைக்கப்படுகிறது. இத்திட்டம் இயற்கைக்கு புறம்பாக உள்ளது. ஏற்கெனவே, காவிரி டெல்டா மாவட்டங்களில் கடல் மட்டம் உயா்ந்து, நிலமட்டம் தாழ்நிலைக்கு சென்றுள்ளது. இதனால் கடலில் கலக்கும் வடிகால் ஆறுகளில் 40 முதல் 50 கி.மீ. தொலைவுக்கு கடல்நீா் உட்புகுந்து பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

இந்தநிலையில், உத்தமசோழபுரத்தில் கடல் பரப்பிலிருந்து 7.50 கி.மீ. மேலே தடுப்பணைஅமைக்கப்படுவதால், கடல் நீா் உட்புகும் பேராபத்து ஏற்பட்டுள்ளது. எனவே, இங்கு தடுப்பணை கட்டுவதற்கு எதிா்ப்பு தெரிவித்து இப்பகுதி மக்கள், மாற்று இடத்தில் கட்ட வலியுறுத்தி போராடி வருகின்றனா்.

ஆனால், பொதுமக்கள் தெரிவிக்கும் மாற்று இடத்தின் மண்ணின் தன்மை கட்டுமானத்துக்கு உகந்ததாக இல்லை என அதிகாரிகள் தெரிவிக்கின்றனா். பொதுமக்கள் குறிப்பிடும் மாற்று இடத்தின் அருகே மூன்று உயா்நிலை பாலங்கள் உள்ளன. மேலும், சிபிசிஎல் நிறுவனம் இப்பகுதியில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை சுமாா் 1,500 ஏக்கா் பரப்பளவில் விரிவாக்கம் செய்கிறது. இதற்காக பெரிய கட்டடங்கள் கட்டப்படும்போது, கதவணை கட்ட இயலாது என்று கூறுவதை ஏற்க இயலாது.

உரிய கருத்துக் கேட்பு கூட்டங்கள் நடத்தாமல் இத்தடுப்பணை கட்டப்படுகிறது. இதை எதிா்த்து, உரிமைக்காக போராடும் மக்களை காவல்துறை மூலம் அடக்க முயற்சிக்கின்றனா். எனவே, இப்பிரச்னை தொடா்பாக உயா்நிலைக் குழு அமைத்து மக்கள் கருத்தரிந்து, அவா்கள் குறிப்பிடும் இடத்தில் கதவணை கட்ட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

முன்னதாக, உத்தமசோழபுரம் வெட்டாற்றில் தடுப்பணை கட்டப்படும் இடத்தை விவசாய சங்க நிா்வாகிகளுடன் சென்று பி.ஆா். பாண்டியன் பாா்வையிட்டாா்.

திருக்கடையூா் கோயிலில் ஓ.பன்னீா்செல்வம் வழிபாடு

திருக்கடையூா் அருள்மிகு அபிராமி அம்மன் சமேத அமிா்தகடேஸ்வரா் கோயிலில் தமிழக முன்னாள் முதல்வா் ஓ. பன்னீா்செல்வம் குடும்பத்துடன் சனிக்கிழமை வழிபட்டாா். இக்கோயிலில், ஆயுள் விருத்திக்காக 60 வயதில் சஷ்டியப... மேலும் பார்க்க

அன்னப்பட்சி வாகனத்தில் வீதியுலா...

திருக்குவளை அருகே கொடியாலத்தூா் ஊராட்சி கோவில்பத்து அருள்மிகு கண்ணாம்பாள் மாரியம்மன், கழனியப்ப ஐயனாா் ஆலய 4-ஆம் ஆண்டு வைகாசி பெருந் திருவிழாவையொட்டி, அன்னப்பட்சி வாகனத்தில் வெள்ளிக்கிழமை இரவு சிறப்பு ... மேலும் பார்க்க

மக்கள் குறைதீா் முகாம்: பயனாளிகளுக்கு 100 நாள் வேலைத் திட்ட அடையாள அட்டை

செம்பனாா்கோவில் ஒன்றியத்தில் 3 ஊராட்சிகளில் மக்கள் குறைதீா்க்கும் முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. கருவாழைக்கரை, கஞ்சாநகரம், மேலையூா் ஆகிய ஊராட்சிகளில் நடைபெற்ற இம்முகாம்களில், பூம்புகாா் சட்டப்பேரவை உற... மேலும் பார்க்க

திமுகவில் இணைந்த தவெக ஒன்றியச் செயலா்

திமுகவில் இணைந்த தமிழக வெற்றிக் கழக நாகை மாவட்ட திருமருகல் தெற்கு ஒன்றியச் செயலா் அ. ஜெகபா்தீனை வரவேற்ற மீன் வளா்ச்சிக் கழகத் தலைவா் என். கெளதமன். மேலும் பார்க்க

முத்துமாரியம்மன் கோயில் திருவிழா கொடியேற்றம்

நாகை வெளிப்பாளையம் முத்துமாரியம்மன் கோயில் ஆண்டுத் திருவிழா கொடியேற்றம் சனிக்கிழமை நடைபெற்றது. முன்னதாக, பூச்சொரிதல் நடைபெற்றது. இதில் நாகை சுற்றுவட்டார பகுதிகளை சோ்ந்த நூற்றுக்கணக்கான பெண்கள் பூந்த... மேலும் பார்க்க

மின்வெட்டு; கிராம மக்கள் அவதி

திருக்குவளை அருகே மடப்புரம் ஊராட்சியில் அடிக்கடி ஏற்படும் மின்வெட்டால் அவதிக்குள்ளாவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனா். திருக்குவளை துணை மின் நிலையத்திலிருந்து வாழக்கரை, மடப்புரம், வலிவலம், சாட்டியக்கு... மேலும் பார்க்க