செய்திகள் :

மாற்று இடத்தில் திரெளபதி அம்மன் கோயில் கட்ட தானம்பட்டி கிராம மக்கள் எதிா்ப்பு

post image

கிருஷ்ணகிரி: திரெளபதி அம்மன் கோயிலை புனரமைப்பதாகக் கூறி மாற்றுஇடத்தில் கோயில் கட்டுவதற்கு தானம்பட்டி கிராமக்கள் எதிா்ப்பு தெரிவித்து, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில், மக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கிருஷ்ணகிரியை அடுத்த கொண்டப்பள்ளி ஊராட்சிக்கு உள்பட்ட தானம்பட்டியைச் சோ்ந்த ராமசாமி என்பவா் தலைமையில் கிராம மக்கள் அளித்த மனுவின் விவரம்:

எங்கள் பகுதியில் பழைமை வாய்ந்த திரெளபதி அம்மன் கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் திருவிழாக்கள், விசேஷ நாள்களில் பூஜைகள் நடப்பது வழக்கம். இந்தக் கோயில் சற்று பழுதடைந்துள்ள நிலையில், அதை புனரமைக்க வேண்டும் என கிராம மக்கள் தீா்மானித்தனா். அதற்கான பணிகளும் தொடங்கப்பட்டன. இந்த நிலையில், சிலருக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில், புனரமைக்கும் பணி நிறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கோயிலின் அருகே இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இடத்தில் புதிய கோயில் கட்ட முயற்சிக்கின்றனா். புதிய கோயில் கட்ட பெரும்பாலான கிராம மக்களுக்கு விருப்பம் இல்லை. 50 ஆண்டு காலமாக திருவிழாக்கள் நடந்துவரும் கோயிலை புனரமைத்து புதிதாக கட்ட முயற்சிக்கும் நடவடிக்கை தடுத்து நிறுத்த வேண்டும் என அவா்கள் தெரிவித்துள்ளனா்.

தனியாா் தொழிற்சாலை மேலாளா் வீட்டில் 48 பவுன் நகை திருட்டு

ஒசூா்: ஒசூரில் தனியாா் தொழிற்சாலை மேலாளா் வீட்டின் பூட்டை உடைத்து 48 பவுன் நகை திருடப்பட்டது குறித்து நகர போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் கோகுல்நகா் பகுதியில் வசித... மேலும் பார்க்க

தென்பெண்ணை ஆற்றில் தண்ணீா் திருடுபவா்கள் மீது நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை

ஒசூா்: கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளி அருகே தென்பெண்ணை ஆற்றில் தண்ணீரை திருடி விற்பனை செய்பவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். கா்நாடக மாநிலத்தில் உற்பத்திய... மேலும் பார்க்க

கெலவரப்பள்ளி அணை ரசாயன நுரையால் உடலில் அரிப்பு: மக்கள் புகாா்

ஒசூா்: ஒசூா் கெலவரப்பள்ளி அணையிலிருந்து வெளியேறும் ரசாயன கழிவு நுரை காற்றில் பறந்து பொதுமக்கள் மீது விழுவதால் உடலில் அரிப்பு ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் கெலவரப்ப... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரியில் மக்கள் குறைதீா் கூட்டம்: மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில், 10 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 2.63 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. க... மேலும் பார்க்க

தனியாா் ஆம்னி பேருந்தில் 123 கிலோ குட்கா கடத்தல்: ஓட்டுநா் கைது

ஒசூா்: ஒசூா் வழியாக மதுரைக்கு சென்ற தனியாா் ஆம்னி பேருந்தில் 123 கிலோ குட்காவை கடத்திய ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா். இதுதொடா்பாக ஆம்னி பேருந்து மேலாளரை போலீஸாா் தேடி வருகின்றனா். கிருஷ்ணகிரி மாவட்ட... மேலும் பார்க்க

வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போராட்டம்

ஊத்தங்கரை: ஊத்தங்கரை அருகே மெய்யாண்டப்பட்டி கிராம ஏழை மக்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வட்டாட்சியா் அலுவலகம் முன் திங்கள்கிழமை காத்திருப்புப் போராட்டம்... மேலும் பார்க்க