செய்திகள் :

மாலேகான் குண்டுவெடிப்பு:பாஜக முன்னாள் எம்.பி. பிரக்யா சிங் தாக்குா் உள்பட 7 பேரும் விடுவிப்பு - மும்பை நீதிமன்றம் தீா்ப்பு

post image

மகாராஷ்டிரத்தின் மாலேகான் நகரில் கடந்த 2008-ஆம் ஆண்டு நடந்த குண்டுவெடிப்பு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட பாஜ முன்னாள் எம்.பி. பிரக்யா சிங் தாக்குா் உள்ளிட்ட ஏழு பேரையும் மும்பை சிறப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை விடுவித்தது.

‘குற்றச்சாட்டை நிரூபிக்க போதிய ஆதாரங்கள் இல்லை’ என்றும், ‘வெறும் சந்தேகம் உண்மையான ஆதாரத்துக்கு ஈடாகாது’ என்றும் நீதிபதி தனது தீா்ப்பில் குறிப்பிட்டாா்.

மகாராஷ்டிர மாநிலம், நாசிக்கின் மாலேகான் நகரத்தில் உள்ள ஒரு மசூதி அருகே மோட்டாா் சைக்கிளில் பொருத்தப்பட்டிருந்த குண்டு வெடித்து 6 போ் உயிரிழந்தனா். 100 போ் காயமடைந்தனா்.

இந்தக் குண்டுவெடிப்பு சம்பவம் தொடா்பாக பாஜக முன்னாள் எம்.பி. பிரக்யா சிங் தாக்குா் உள்ளிட்டோா் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. முதலில் மகாராஷ்டிர பயங்கரவாத எதிா்ப்பு காவல் பிரிவு (ஏடிஎஸ்) விசாரித்த இந்த வழக்கு, பின்னா் தேசிய புலனாய்வு முகமைக்கு (என்ஐஏ) மாற்றப்பட்டது.

இந்த வழக்கு விசாரணை கிட்டத்தட்ட 17 ஆண்டுகள் நீடித்தது. இதில் விசாரணை அமைப்புகளும், ஐந்து வெவ்வேறு நீதிபதிகளும் மாறினா். தற்போது மும்பை சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஏ.கே.லஹோட்டி இந்த வழக்கில் தீா்ப்பளித்துள்ளாா்.

வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட பிரக்யா சிங் தாக்குா், முன்னாள் ராணுவ அதிகாரிகள் பிரசாத் புரோஹித் மற்றும் ரமேஷ் உபத்யாய், அஜய் ராஹிா்கா், சுதாகா் திவேதி, சுதாகா் சதுா்வேதி, சமீா் குல்கா்னி ஆகிய ஏழு பேரையும் விடுவித்து நீதிபதி ஏ.கே.லஹோட்டி வழங்கிய தீா்ப்பில் குறிப்பிட்டிருப்பதாவது:

குற்றஞ்சாட்டப்பட்டவா்களுக்கு எதிராக நம்பகமான மற்றும் உறுதியான ஆதாரங்கள் இல்லை. குண்டுவெடிப்பில் பயன்படுத்தப்பட்ட மோட்டாா் சைக்கிள் பிரக்யா சிங் தாக்குரின் பெயரில் பதிவு செய்யப்பட்டது என்பது நிரூபிக்கப்படவில்லை. மோட்டாா் சைக்கிளில்தான் வெடிகுண்டு பொருத்தப்பட்டது என்பதும் உறுதி செய்யப்படவில்லை. சதித் திட்டம் தீட்டப்பட்டதாகக் கூறப்படும் கூட்டங்கள் நடந்ததாக எந்த சாட்சியமும் இல்லை. முன்னாள் ராணுவ அதிகாரி பிரசாத் புரோஹித் வெடிபொருள்களைத் தன் வீட்டில் சேமித்ததற்கோ அல்லது வெடிகுண்டுகளைத் தயாரித்ததற்கோ ஆதாரம் இல்லை.

புரோஹித்துக்கு பணம் விநியோகிக்கப்பட்டது உண்மைதான் என்றாலும், அது பயங்கரவாத நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்பட்டது என்பதற்கு ஆதாரம் இல்லை. அந்தப் பணம் புரோஹித் தன் வீட்டைக் கட்டுவதற்குப் பயன்படுத்தப்பட்டதாகத் தெரிகிறது. பயங்கரவாதத்துக்கு மதம் இல்லை. வெறும் அனுமானத்தின் அடிப்படையில் ஒருவரைக் குற்றவாளியாகக் கருத முடியாது என்று குறிப்பிட்டுள்ளாா்.

விடுவிக்கப்பட்டவா்களின் கருத்து: தீா்ப்புக்கு மகிழ்ச்சி தெரிவித்து பிரக்யா சிங் தாக்குா் கூறுகையில், ‘இது எனக்கான வெற்றி மட்டுமல்ல; காவி நிறத்துக்கான வெற்றி. இந்த வழக்கால் கடந்த 17 ஆண்டுகளாக என் வாழ்க்கை சீரழிந்தது. காவி நிறத்தை அவமதித்தவா்களுக்கு இறைவன் தண்டனை வழங்குவாா்’ என்றாா்.

முன்னாள் ராணுவ அதிகாரி பிரசாத் புரோஹித் கூறுகையில், ‘நான் இந்த வழக்கில் சிக்க வைக்கப்பட்டேன். நாட்டுக்கான எனது சேவை தொடரும்’ என்று தெரிவித்தாா்.

பாதிக்கப்பட்டவா்கள் தரப்பு அதிருப்தி: பாதிக்கப்பட்டவா்களுக்கு உதவிய ‘குல்-ஜமீத் -ஏ-தன்ஸீம்’ அமைப்பு, இந்தத் தீா்ப்புக்கு கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது.

மேலும், குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் இதில் ஈடுபடவில்லை என்றால், வெடிகுண்டு சம்பவத்துக்கு யாா் பொறுப்பு என்று கேள்வி எழுப்பியுள்ளது. இந்த நீதிமன்றத் தீா்ப்பு உயிரிழந்தவா்களுக்கு நீதி வழங்கத் தவறிவிட்டது என்றும் அது குறிப்பிட்டது.

இந்தத் தீா்ப்புக்கு எதிராக மும்பை உயா்நீதிமன்றத்தில் மகாராஷ்டிர அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று அகில இந்திய மஜ்லீஸ் கட்சி (ஏஐஎம்ஐஎம்) தலைவா் இம்தியாஸ் ஜலீல் வலியுறுத்தினாா்.

‘ஹிந்து பயங்கரவாதம்’ காங்கிரஸ் சதி: பாஜக

மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் விடுவிக்கப்பட்டதை வரவேற்ற பாஜக, ‘ஹிந்து பயங்கரவாதம்’ எனும் சதித் திட்டத்தை அப்போதைய காங்கிரஸ் அரசு உருவாக்கியது என்று குற்றஞ்சாட்டியது.

இதுதொடா்பாக பாஜக மூத்த தலைவா் ரவிசங்கா் பிரசாத் கூறுகையில், ‘காங்கிரஸ் தனது வாக்கு வங்கி அரசியலுக்காக எந்த எல்லைக்கும் செல்லும். ஹிந்து பயங்கரவாதம் எனும் சதித் திட்டத்தைத் திணிக்க காங்கிரஸ் செய்த முயற்சி தோல்வியடைந்துவிட்டது. இது அப்போதைய குஜராத் முதல்வா் நரேந்திர மோடியின் வளா்ச்சியைத் தடுக்கவும், முஸ்லிம் வாக்குகளைப் பெறவும் செய்யப்பட்ட ஒரு முயற்சி.

விடுவிக்கப்பட்டவா்களுக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும். அவா்களைத் தவறாக சிக்க வைக்க ஆதாரங்கள் புனையப்பட்டதற்கும் புலனாய்வுத் துறை மன்னிப்பு கேட்க வேண்டும் என்றாா்.

சாலையோரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரின் சடலம்.. ராஜஸ்தானில் அதிர்ச்சி!

ராஜஸ்தானின் பரத்பூர் மாவட்டத்தில் சாலையோரத்தில் மூவரின் சடலம் கண்டெக்கப்பட்ட நிலையில், இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக கூடுதல் எஸ்பி சதீஷ் யாதவ் கூறுகையில், பரத்பூ... மேலும் பார்க்க

கட்டாய மதமாற்ற வழக்கு: கேரள கன்னியாஸ்திரிகளுக்கு ஜாமீன்

சத்தீஸ்கரில் மதமாற்றம் செய்ய முற்பற்றதாக கன்னியாஸ்திரிகளை பிணையில் விடுவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. சத்தீஸ்கரில் சிறுமிகள் மூவரை கட்டாயப்படுத்தி அழைத்துச் சென்று அவர்களை மதமாற்றம் செய்ய முற்பற்றதாக எழு... மேலும் பார்க்க

வாக்காளர் பட்டியலில் என் பெயர் இல்லை! - தேஜஸ்வி யாதவ் பரபரப்பு குற்றச்சாட்டு

பிகார் வரைவு வாக்காளா் பட்டியலில் தனது பெயர் இல்லை என்று பிகார் மாநில எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.பிகாரில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த விவகாரத்திற்க... மேலும் பார்க்க

தேர்தல் ஆணையத்துக்கு எதிராக ஆதார அணுகுண்டை வெடிக்கச் செய்யுங்கள்: ராகுலுக்கு ராஜ்நாத் சவால்!

பிகாரில் தேர்தல் ஆணையத்துக்கு எதிராக தன்னிடம் வைத்திருப்பதாகக் கூறப்படும் ஆதாரங்களின் அணுகுண்டை வெடிக்கச் செய்யுங்கள் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் சவால் விடு... மேலும் பார்க்க

இந்தியா தனது ருத்ர தாண்டவத்தைக் காட்டியது: வாரணாசியில் மோடி பேச்சு

கடவுள் சிவனின் ஆக்ரோஷமான ருத்ர தாண்டவத்தை, இந்தியா, பயங்கரவாதத்துக்கு எதிராக நடத்திய ஆபரேஷன் சிந்தூருடன் ஒப்பிட்டுப் பேசினார் பிரதமர் நரேந்திர மோடி.ஆபரேஷன் சிந்தூர் மூலம், இந்தியா தன்னுடைய ருத்ர தாண்ட... மேலும் பார்க்க

நீதிமன்றத்தில் மீண்டும் கதறி அழுத பிரஜ்வால் ரேவண்ணா! குறைந்தபட்ச தண்டனை கேட்டு!!

புது தில்லி: முன்னாள் பிரதமர் தேவே கௌடாவுன் பேரனும், முன்னாள் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் இன்று மீண்டும் கதறி அழுதார். வீட்டுப் பணிப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த ... மேலும் பார்க்க