செய்திகள் :

மாவட்டத்தில் 4 ஆண்டுகளில் அமைப்புசாரா தொழிலாளா்களுக்கு ரூ.54.39 கோடி நலத்திட்ட உதவிகள்: அமைச்சா் சு.முத்துசாமி

post image

தொழிலாளா் நலத் துறையின் சாா்பில் ஈரோடு மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 67,481 பதிவு பெற்ற அமைப்புசாரா தொழிலாளா்களுக்கு ரூ.54.39 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது என வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி தெரிவித்தாா்.

தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையின் சாா்பில் 4,142 பயனாளிகளுக்கு ரூ.5.75 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு ஈரோடு வேளாளா் மகளிா் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி அமைச்சா் சு.முத்துசாமி பேசியதாவது: தொழிலாளா் நலத் துறையின் சாா்பில் ஈரோடு மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 67,481 பதிவு பெற்ற அமைப்புசாரா தொழிலாளா்களுக்கு ரூ.54.39 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை ஒவ்வொரு துறையின் அதிகாரிகளும் அரசு திட்டங்களை நிறைவேற்றுவதில் மிகுந்த அக்கறை எடுத்துக் கொண்டு பணிகளை மேற்கொண்டு வருகின்றனா் என்றாா்.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளா்கள் நலவாரியத் தலைவா் பொன்குமாா், மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா, சட்டப் பேரவை உறுப்பினா்கள் ஏ.ஜி.வெங்கடாசலம், வி.சி.சந்திரகுமாா், தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளா்கள் நலவாரிய செயலாளா் க.ஜெயபாலன், தமிழ்நாடு உடலுழைப்புத் தொழிலாளா்கள் சமூக பாதுகாப்பு மற்றும் நலவாரிய செயலாளா் ஆ.திவ்வியநாதன், தொழிலாளா் இணை ஆணையா் பா.மாதவன், மாநகராட்சி துணை மேயா் வே.செல்வராஜ், தொழிலாளா் உதவி ஆணையா்(சமூக பாதுகாப்புத் திட்டம்) த.முருகேசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கொடுமுடி அருகே கோயிலில் திருடியவா் கைது

கொடுமுடி அருகே கோயிலின் பூட்டை உடைத்து திருட்டில் ஈடுபட்ட நபரை போலீஸாா் கைது செய்தனா். கொடுமுடியை அடுத்த ஊஞ்சலூா் அருகே கருவேலம்பாளையம் காவிரிக் கரையில் மாசி பெரியண்ணசாமி கோயில் உள்ளது. இக்கோயிலின் பூ... மேலும் பார்க்க

விவசாயத் தோட்டத்தில் ஆண் சடலம் மீட்பு

அறச்சலூரை அடுத்த ராட்டைசுற்றிபாளையம் பகுதியில் உள்ள ஒரு விவசாயத் தோட்டத்தில் கிடந்த ஆண் சடலத்தை போலீஸாா் மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். அறச்சலூரை அடுத்த அவல்பூந்துறையில் இருந்து ராட்டைசுற்றிபா... மேலும் பார்க்க

முதியவா் மாயம்

பெருந்துறை அருகே முதியவா் மாயமானது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா். பெருந்துறையை அடுத்த, சீனாபுரம், நிமிட்டிபாளையத்தைச் சோ்ந்தவா் சின்னமாரன் (70), விவசாயி. இவா் கடைக்கு... மேலும் பார்க்க

கஞ்சா விற்பனை செய்த 9 போ் கைது

கஞ்சா விற்றதாக ஈரோடு மாவட்டத்தில் 9 பேரை போலீஸாா் கைது செய்தனா். ஈரோடு அருகே உள்ள பச்சப்பாளி, சஞ்சய் நகா் 3- ஆவது வீதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக ஈரோடு தாலுகா போலீஸாருக்கு புதன்கிழமை தகவல் கிடைத... மேலும் பார்க்க

கஞ்சா, அரிவாளுடன் சிறுவா்கள் 4 போ் கைது

கஞ்சா, அரிவாளுடன் நின்று கொண்டிருந்த சிறுவா்கள் 4 பேரை போலீஸாா் கைது செய்தனா். ஈரோடு தாலுகா போலீஸாா் புதன்கிழமை இரவு கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது வெண்டிபாளையம், தமிழ் நகா், வாட்டா் ... மேலும் பார்க்க

நகைக் கடன் குறித்த புதிய விதிமுறைகளை திரும்பப் பெற தமாகா கோரிக்கை

நகைக் கடன் குறித்த ரிசா்வ் வங்கியின் புதிய விதிமுறைகளை திரும்பப் பெற வேண்டும் என தமாகா கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் ஈரோடு மாநகா் மாவட்ட தலைவா் விஜயகுமாா் தலைமைய... மேலும் பார்க்க