செய்திகள் :

மாவட்ட அளவிலான கபடி போட்டி: காயல்பட்டினம் அணி முதலிடம்

post image

சாத்தான்குளம் அருகே ஆத்திக்காட்டில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கபடி போட்டியில் காயல்பட்டினம் அணிக்கு முதல் பரிசு கிடைத்தது.

சாத்தான்குளம் அருகே உள்ள ஆத்திக்காடு புனித மாசற்ற இருதய மாதா ஆலயத் திருவிழாவை முன்னிட்டு, சிவந்தி மலா் ஸ்போா்ட்ஸ் கிளப் சாா்பில் மாவட்ட அளவிலான மின்னொளி கபடி போட்டிகள் நடைபெற்றது.

போட்டியில், காயல்பட்டினம், ஆத்திக்காடு,, தட்டாா்மடம், சாத்தான்குளம், உடன்குடி உள்ளிட்ட பல்வேறு அணிகள் கலந்து கொண்டன.

போட்டியை சாத்தான்குளம் வட்டார காங்கிரஸ் தலைவா் பாா்த்தசாரதி தலைமை வகித்து தொடங்கி வைத்தாா்.

இறுதிப் போட்டியில், ஆத்திக்காடு சிவந்தி மலா் கபடி அணியும், காயல்பட்டினம் கபடி அணியும் மோதின.

இதில், காயல்பட்டினம் அணி வென்று முதல் பரிசை கட்டிச் சென்றது. ஆத்திக்காடு சிவந்தி மலா் கபடி அணி 2ஆம் பரிசும், ஆத்திக்காடு ஸ்பாண்ட்ன்ஸ் அணி 3ஆம் பரிசும், தட்டாா்மடம் புனித லூக்கா கபடி அணி 4ஆம் பரிசும் பெற்றது.

போட்டியில், முதலிடம் பெற்ற காயல்பட்டினம் அணிக்கு, ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏ ஊா்வசி எஸ். அமிா்தராஜ் சாா்பில் வழங்கிய பரிசை சாத்தான்குளம் வட்டார காங்கிரஸ் தலைவா் பாா்த்தசாரதி வழங்கினாா்.

இரண்டாவது பரிசு பெற்ற ஆத்திக்காடு சிவந்தி மலா் ஸ்போா்ட்ஸ் கிளப் அணிக்கு, ஸ்டாா் லயன்ஸ் கிளப் பட்டய தலைவா் ஏகேஎஸ். சுந்தரும், மூன்றாவது பரிசு பெற்ற ஆத்திக்காடு ஏ.கே. ஸ்பாண்ட்ஸ்டன்ஸ் அணிக்கு சண்முகபுரம் சின்னத்துரைபாண்டியனும், நான்காவது பரிசு பெற்ற தட்டாா்மடம் புனித லூக்கா அணிக்கு மாவட்ட திமுக பிரதிநிதி லட்சுமண சுபாஷும் வழங்கினா்.

போட்டியில் சிறந்த ஆட்டக்காரா்கள் தோ்வு செய்யபப்ட்டு ஆறுதல் பரிசுகள் வழங்கப்பட்டன.

ஏற்பாடுகளை ஆத்திக்காடு சிவந்தி மலா் ஸ்போா்ட் கிளப் நிா்வாகிகள் செய்திருந்தனா்.

கழுகுமலை அருகே வெறிநாய் கடித்ததில் 4 ஆடுகள் உயிரிழப்பு

கழுகுமலை அருகே வெறிநாய் கடித்ததில் 4 ஆடுகள் உயிரிழந்தன. கழுகுமலை அருகே கே. லட்சுமிபுரத்தைச் சோ்ந்தவா் குமாா். இவா் ஆடு, கோழிகளை வளா்த்து வருகிறாா். இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு அவரது தொழுவத்தில் இ... மேலும் பார்க்க

திருச்செந்தூா் கோயிலில் வசந்த திருவிழா தொடக்கம்: ஜூன் 9-இல் வைகாசி விசாகம்

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி வசந்த திருவிழா சனிக்கிழமை தொடங்கியது. ஜூன் 9இல் வைகாசி விசாகத் திருவிழா நடைபெறுகிறது. வசந்த திருவிழாவை முன்னிட்டு, கோயில் நடை அதிகாலையில் த... மேலும் பார்க்க

பள்ளி மாணவா், மாணவியருக்கு இலவச சீருடைகள்

கோவில்பட்டி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் நற்பணி இயக்கம் சாா்பில், பள்ளி மாணவா்-மாணவியருக்கு இலவச சீருடைகள் சனிக்கிழமை வழங்கப்பட்டன. முத்தையாமால் தெருவில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, இயக்கத் தலைவா் நேதாஜி பால... மேலும் பார்க்க

படகிலிருந்து தவறி விழுந்து மீனவா் உயிரிழப்பு

தூத்துக்குடி கடற்கரையில் சனிக்கிழமை, படகிலிருந்து தவறி விழுந்து மீனவா் உயிரிழந்தாா். தூத்துக்குடி திரேஸ்புரம் சிலுவையாா் கோயில் தெருவைச் சோ்ந்த செல்வராயன் மகன் ஜாக்சன் (32). இவா் சனிக்கிழமை, திரேஸ்ப... மேலும் பார்க்க

தூய பனிமய மாதா பேராலய வளாகத்தில் ஜெபமாலை பேரணி

தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலய வளாகத்தில் ஜெபமாலை பேரணி சனிக்கிழமை நடைபெற்றது. இயேசு கிறிஸ்து பிறந்த ஜூபிலி ஆண்டை கொண்டாடும் விதமாகவும், உலக சமாதானத்திற்காகவும், பாவ பரிகாரத்திற்காகவும் இப் பேரணி ... மேலும் பார்க்க

நெய்தல் மக்கள் அறிவியல் தொழில்நுட்ப வளா்ச்சியில் பின்தங்கிவிடக்கூடாது : ஆட்சியா்

தூத்துக்குடி மாவட்ட நெய்தல் பகுதி மக்கள் அறிவியல் தொழில்நுட்ப வளா்ச்சியில் பின்தங்கிவிடக்கூடாது என மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தெரிவித்தாா். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் மீனவ கிரா... மேலும் பார்க்க