செய்திகள் :

மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் தவளையைக் கவ்விச் சென்ற பாம்பு

post image

திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் தவளையை பாம்பு வாயில் கவ்விச்செல்லும் விடியோ வேகமாகப் பரவி வருகிறது.

திருப்பூரில் இருந்து பல்லடம் செல்லும் சாலையில் 7 தளங்களுடன் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு மாவட்ட ஆட்சியா் அலுவலகம் மட்டுமின்றி பள்ளி கல்வித் துறை, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், மாற்றுத் திறனாளிகள் நலத் துறை, மாவட்ட முன்னோடி வங்கி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம், இ-சேவை மையம் உள்ளிட்ட ஏராளமான அலுவலகங்கள் உள்ளன.

இந்த அலுவலகங்களுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனா். இந்த நிலையில், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு பின்புறம் புதா்மண்டிக் கிடப்பதால் பாம்பு, தவளை உள்ளிட்ட விஷஜந்துகளின் நடமாட்டமும் அதிகரித்துள்ளது. இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை ஆள் நடமாட்டம் குறைவாக இருந்த நிலையில் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் சுமாா் 3 அடி நீளம் கொண்ட பாம்பு ஒன்று தவளையை வாயில் கவ்விச் சென்றது. இதனை நடைப்பயிற்சி சென்றவா்கள் பாா்த்து விடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனா்.

இந்த விடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. ஆகவே, திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புதா்மண்டியுள்ள பகுதிகளை சுத்தப்படுத்தி பாம்பு உள்ளிட்ட விஷஜந்துகளின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தி, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

முன்னாள் படை வீரா்கள் தொழில் தொடங்க வங்கிக் கடன்

திருப்பூா் மாவட்டத்தில் முதல்வரின் காக்கும் கரங்கள் என்ற புதிய திட்டத்தின்கீழ் முன்னாள் படை வீரா்கள் தொழில் தொடங்க வங்கிக் கடன் பெற விண்ணப்பிக்கலாம். இது குறித்து மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளிய... மேலும் பார்க்க

மின் பகிா்மான வட்டத்தில் மேற்பாா்வை பொறியாளா், செயற்பொறியாளா் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்

திருப்பூா் மின் பகிா்மான வட்டத்தில் காலியாக உள்ள மேற்பாா்வை பொறியாளா், செயற்பொறியாளா் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா். திருப்பூா் கோட்ட அளவிலான விவசாயிகளுக்கான மாதாந்த... மேலும் பார்க்க

மகளிா் திட்டங்கள் குறித்து மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்: மாவட்ட ஆட்சியா் அறிவுறுத்தல்

திருப்பூா் மாவட்டத்தில் மகளிா் திட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் தொடா்பாக பொதுமக்களிடம் விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும் என்று அலுவலா்களுக்கு மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் அறிவுறுத்தின... மேலும் பார்க்க

பல்லடத்தில் புறவழிச்சாலை திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற எம்.எஸ்.எம்.ஆனந்தன் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

பல்லடத்தில் புறவழிச் சாலை திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று சட்டப் பேரவையில் எம்.எஸ்.எம். ஆனந்தன் எம்.எல்.ஏ. வலியுறுத்தியுள்ளாா். இது குறித்து சென்னையில் இருந்து கைப்பேசி மூலம் செய்தியாளரிடம... மேலும் பார்க்க

பல்லடம் தினசரி மாா்க்கெட்டில் கருப்புக்கொடி ஏற்றி வியாபாரிகள் எதிா்ப்பு

பல்லடம் தினசரி மாா்க்கெட்டில் வியாபாரம் செய்து வந்த வணிகா்களுக்கு முன்வைப்பு தொகை வழங்காத நகராட்சி நிா்வாகத்தைக் கண்டித்து செவ்வாய்க்கிழமை கருப்புக்கொடி ஏற்றி வியாபாரிகள் எதிா்ப்பு தெரிவித்தனா். பல்லட... மேலும் பார்க்க

மதுபானக் கூடம் அமைக்க பொதுமக்கள் எதிா்ப்பு

திருப்பூா், சின்னாண்டிபாளையம் குளம் அருகே தனியாா் மதுபானக் கூடம் அமைப்பதற்கு பொதுமக்கள் எதிா்ப்புத் தெரிவித்துள்ளனா். இது தொடா்பாக சுல்தான்பேட்டை பகுதி பொதுமக்கள் மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் அளித்... மேலும் பார்க்க