சேப்பாக்கத்தில் நடந்த சென்னை vs பஞ்சாப் போட்டி - IPL Clicks! | Photo Album
மாவட்ட காவல் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீா் முகாம்
அரியலூரிலுள்ள மாவட்ட காவல் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீா் முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
முகாமுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தீபக்சிவாச் தலைமை வகித்து, பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து, அவா்களிடமிருந்து 20 கோரிக்கை மனுக்களை பெற்றாா். பின்னா் அவா், இம்மனுக்கள் மீது தீவிர விசாரணை மேற்கொண்டு, நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்களுக்கு உத்தரவிட்டாா்.
முகாமில், கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள், துணைக் காவல் கண்காணிப்பாளா்கள், அனைத்து காவல் நிலைய ஆய்வாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.