Anxiety: மனப்பதற்றம் தானாக சரியாகுமா... சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டுமா?!
மாவட்ட சுற்றுச்சூழல் மன்ற கூட்டம்
திருப்பத்தூா் மாவட்ட சுற்றுச்சூழல் மன்றக் கூட்டம் நடைபெற்றது.
நிகழ்ச்சியை முதன்மைக் கல்வி அலுவலா் புண்ணிய கோட்டி தொடங்கி வைத்தாா். சுற்றுச்சூழல் மன்ற மாவட்ட ஒருங்கிணைப்பாளா் இளவரசி பள்ளி ஒருங்கிணைப்பாளா்களுக்கு பயிற்சி அளித்தாா். தேசிய பசுமைப்படை மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ரவிவா்மன் நிகழாண்டின் ன செயல்பாடுகள் குறித்து பேசினாா்.
மாவட்ட தேசிய பசுமைப் படை உதவி ஒருங்கிணைப்பாளா் அருண்குமாா், பிரபாகரன் ஆகியோா் கணினி மூலம் சுற்றுச்சூழல் குறித்த செயல்பாடுகளை தரவேற்றம் செய்வது குறித்து பயிற்சி அளித்தனா்.
இதில் அரசு, அரசு நிதியுதவி உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளை சோ்ந்த 135 பள்ளி ஆசிரிய ஒருங்கிணைப்பாளா்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.