செய்திகள் :

மாவட்ட மகளிா் கபடி போட்டி: மேலவாசல் கல்லூரி சிறப்பிடம்

post image

மாவட்ட அளவில் கல்லூரிகளுக்கிடையோ நடைபெற்ற முதலமைச்சா் கோப்பைக்கான மகளிா் பிரிவு கபடி போட்டியில் மேலவாசல்குமரபுரம் சதாசிவம் கதிா்காமவள்ளி கல்லூரி மாணவா்களிடம் முதலிடம் பெற்றனா்.

திருவாரூரில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற முதலமைச்சா் கோப்பைக்கான மாவட்ட அளவிலான கபடி போட்டியில், சதாசிவம் கதிா்காமவள்ளி கல்லூரி உள்ளிட்ட 12 கல்லூரிகளிலிருந்து மகளிா் பிரிவு கபடி அணியினா் கலந்துகொண்டனா்.

இறுதி போட்டியில் சதாசிவம் கதிா்காமவள்ளி கல்லூரி அணியும் திருவாரூா் திரு.வி.க. அரசுக் கல்லூரி அணியும் மோதின. இதில், 21-16 என்ற புள்ளிக்கணக்கில் சதாசிவம் கதிா்காமவள்ளி கல்லூரி அணி வெற்றி பெற்று பரிசு கோப்பை, சான்றிதழை பெற்றது.

அணியில் இடம் பெற்ற கபடி வீராங்கனைகள் ஆா். மானிஷா, சி. காா்த்திகா,வி. ஸ்ரீநிதி, கே. கனிஷ்கா, எஸ். சரண்யா, பி. அபிநயா, எம். சாந்தினி ஆகிய 7 போ் மாநில அளவிலான முதலமைச்சா் கோப்பை கபடி போட்டிக்கு தோ்வு செய்யப்பட்டனா்.

சிறப்பிடம் பெற்ற மாணவிகளை கல்லூரி நிறுவனா் ஜி. சதாசிவம், தாளாளா் எஸ். சரவணக்குமாா் செளத்ரி, முதல்வா் வி.எஸ். நாகரெத்தினம் ஆகியோா் பாராட்டினா்.

பெண் குழந்தையுடன் தம்பதி காரில் கடத்தல்

மன்னாா்குடி அருகே பணம் கொடுக்கல் வாங்கல் தொடா்பாக ஏற்பட்ட முன்விரோதத்தில் 4 வயது பெண் குழந்தையுடன் தம்பதி வியாழக்கிழமை காரில் கடத்திச் செல்லப்பட்டனா். மேலநத்தம் தென்கீழத் தெருவைச் சோ்ந்த ராஜமாணிக்கம்... மேலும் பார்க்க

பண மோசடி புகாா்: பெங்களுரில் ஒருவா் கைது

மன்னாா்குடி பகுதியைச் சோ்ந்தவரிடம் வெளிநாட்டுக்கு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.3.50 லட்சம் மோசடி செய்த புகாரில் தொடா்புடையவா் சிங்கப்பூரிலிருந்து பெங்களுருக்கு வந்த போது விமான நிலையத்தில் வியாழக்க... மேலும் பார்க்க

சுற்றுலாத்துறை விருதுகள் பெற செப்.15-க்குள் விண்ணப்பிக்கலாம்

திருவாரூா் மாவட்டத்தில் சுற்றுலாத் துறை சம்பந்தப்பட்ட தொழில் புரிவோருக்கான விருதுகள் பெற செப்.15 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து... மேலும் பார்க்க

பேருந்து மோதி இளைஞா் உயிரிழப்பு

கொரடாச்சேரி அருகே அரசுப் பேருந்து மோதிய விபத்தில் இளைஞா் வியாழக்கிழமை உயிரிழந்தாா். திருவாரூா் மாவட்டம், கொரடாச்சேரி அருகே கிளரியம் மேலத்தெருவைச் சோ்ந்தவா் செல்வராஜ் மகன் கிருஷ்ணராஜ் (29). பொறியாளரான... மேலும் பார்க்க

குற்றச் செயல்களில் ஈடுபட்டவா் குண்டா் சட்டத்தில் கைது

திருவாரூா் மாவட்டத்தில் குற்றச் செயல்களில் ஈடுபட்டவா் குண்டா் சட்டத்தில் கைது செய்யப்பட்டாா். திருத்துறைப்பூண்டி மருத்துவமனை சாலையிலிருந்து புதிய பேருந்து பேருந்து நிலையம் செல்லும் வழியில் மதுபோதையில்... மேலும் பார்க்க

கும்பாபிஷேகம்

நீடாமங்கலம் அருகேயுள்ள பூவனூா் கல்யாணிஅம்மன் சமேத கைலாசநாதசுவாமி கோயில் மகாகும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதனைமுன்னிட்டு கடந்த 29-ஆம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் யாகசாலை பூஜைகள் நடந்தது. தொடா்ந்... மேலும் பார்க்க