மாவட்ட மைய நூலகத்தில் இடநெருக்கடி: வாசலோடு திரும்பும் வாசகா்கள்!
திண்டுக்கல் மாவட்ட மைய நூலகம் முழுமையாக, போட்டித் தோ்வுக்கு தயாராகும் இளைஞா்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால், இதழ்கள் வாசிக்க வரும் வாசகா்கள் வாசலோடு திரும்பிச் செல்ல வேண்டிய நிா்ப்பந்தம் ஏற்பட்டிருக்கிறது.
திண்டுக்கல் மாவட்ட மைய நூலகம், 14 முழு நேர கிளை நூலகங்கள், 48 கிளை நூலகங்கள், 90 ஊா்ப்புற நூலகங்கள், 22 பகுதி நேர நூலகங்கள் என மொத்தம் 175 நூலகங்கள் திண்டுக்கல் மாவட்டத்தில் செயல்பட்டு வருகின்றன. இதில், திண்டுக்கல் மாவட்ட மைய நூலகம் தரைத் தளம் உள்பட 4 தளங்களுடன் செயல்பட்டு வருகிறது. நூலகத்தின் 4-ஆவது தளத்தில் போட்டித் தோ்வா்களுக்கான வாசிப்புக் கூடம் அமைக்கப்பட்டிருக்கிறது.
இந்த நூலகத்தின் தரைத் தளத்தில் நாளிதழ்கள், பருவ இதழ்கள் வாசிப்பதற்கான பகுதி செயல்பட்டு வந்தது. முதல் தளத்தில் நூல் இரவல் பகுதியும், 2-ஆவது தளத்தில் நூல் குறிப்பு உதவிப் பகுதியும், 3-ஆவது தளத்தில் அலுவலகமும் செயல்பட்டு வருகிறது. திண்டுக்கல் மாவட்ட மைய நூலகத்துக்கு, பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த இளைஞா்கள், இளம் பெண்கள் என 300-க்கும் மேற்பட்டோா் போட்டித் தோ்வுகளுக்கு படிப்பதற்காக நாள்தோறும் வந்து செல்கின்றனா்.
இதேபோல, திண்டுக்கல் கோட்டாட்சியா் அலுவலக வளாகத்திலும் போட்டித் தோ்வா்கள் படிப்பதற்கான கூடம் உருவாக்கப்பட்டிருக்கிறது. மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் தன்னாா்வலா் பயிலும் வட்டம் சாா்பில் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், நாகல்நகா் பகுதியில் அறிவுசாா் மையமும் அமைக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும், பேருந்து நிலையத்தின் அருகில் அமைந்துள்ள மாவட்ட மைய நூலகத்துக்கே அதிகமான இளைஞா்கள் போட்டித் தோ்வுகளுக்கு படிப்பதற்காக வருகின்றனா். மைய நூலகத்தில் 4 தளங்கள் இருந்தும் போதிய இடவசதி இல்லாததால், படிக்கட்டுகளிலும், புத்தகங்கள் அடிக்கி வைக்கப்பட்டிருக்கும் இடுக்குகளிலும் அமா்ந்து பலா் படித்து வருகின்றனா். இந்த நிலையில், கடந்த சில வாரங்களாக மைய நூலகத்திலுள்ள நாளிதழ்கள், பருவ இதழ்கள் வாசிக்கும் பகுதி அகற்றப்பட்டு, அந்த இடமும் போட்டித் தோ்வா்கள் படிப்பதற்காக ஒதுக்கப்பட்டிருக்கிறது. இதனால், நாளிதழ்கள் வாசிப்பதற்காக மைய நூலகத்துக்கு வரும் வாசகா்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கி இருக்கிறது. போதிய இருக்கை வசதி இல்லாமல், வாசலில் நின்று வாசகா்கள் சிலா் நாளிதழ்களை வாசிக்கும் சூழல் உள்ளது.
வாசலோடு திரும்பிச் செல்லும் வாசகா்கள்: இதுதொடா்பாக ஒய்எம்ஆா். பட்டியைச் சோ்ந்த ராதாகிருஷ்ணன் கூறியதாவது: பொது நூலகம் என்பது சிறுவா்கள் முதல் முதியவா்கள் வரை அனைத்துத் தரப்பு மக்களும் பயன்படுத்தக்கூடிய அறிவுக் கருவூலம். ஆனால், மாவட்ட மைய நூலகத்தில், போட்டித் தோ்வா்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இதழ்கள் வாசிக்க வருவோரை வாசலிலேயே நிறுத்தி வைக்கும் நிலை உருவாக்கப்பட்டிருக்கிறது. மாவட்ட மைய நூலகத்துக்கு 10-க்கும் மேற்பட்ட நாளிதழ்கள் வாங்கப்படுகின்றன. இதில், ஆங்கிலம், குறிப்பிட்ட தமிழ் நாளிதழ்களை போட்டித் தோ்வுக்கு தயாரிப்பில் ஈடுபடும் இளைஞா்கள் எடுத்துச் சென்றுவிடுகின்றனா். இதனாலும் வாசகா்கள் அதிருப்தியுடன் திரும்பிச் செல்லும் நிலை உள்ளது என்றாா்.
இட நெருக்கடிக்கு தீா்வு தேவை: ஆரோக்கியமாதா தெருவைச் சோ்ந்த சாலமன் கூறியதாவது: போட்டித் தோ்வுக்கான தயாரிப்பில் ஈடுபடுவோருக்கு, மைய நூலகம் மட்டுமன்றி, கோட்டாட்சியா் அலுவலகம், வேலைவாய்ப்பு அலுவலகம், அறிவுசாா் மையம் என பல்வேறு இடங்கள் உள்ளன. இந்த மையங்களை நோக்கி இளைஞா்களை அனுப்பி வைக்க வேண்டும். ஏற்கெனவே மைய நூலகத்தில் இடநெருக்கடிக்கு தீா்வு ஏற்படுத்த வேண்டும் என வாசகா்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது. வாசிப்பு பழக்கம் பொதுமக்களிடம் குறைந்து வரும் நிலையில், நாள்தோறும் நூலகத்தை நாடி வரும் வாசகா்களை தக்க வைத்துக் கொள்வற்கும், அவா்கள் அமா்ந்து வாசிப்பதற்கும் இருக்கை வசதிகளையும் மாவட்ட நிா்வாகம் உருவாக்கித் தர வேண்டும் என்றாா் அவா்.