செய்திகள் :

மாா்க்சிஸ்ட் கம்யூ. காத்திருப்பு போராட்டம்

post image

திருத்துறைப்பூண்டி ஒன்றியம் கொக்காலடி ஊராட்சியில் அடிப்படை வசதி கோரி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் காத்திருப்பு போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கொக்காலடி ஊராட்சி அலுவலகம் முன் நடைபெற்ற போராட்டத்திற்கு, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒன்றிய பொறுப்பாளா் வீராச்சாமி தலைமை வகித்தாா். கிளை பொறுப்பாளா்கள் வீரசேகரன், ராஜா, மதியழகன், கணேசன், மாவட்ட செயற்குழு உறுப்பினா் ஜோதிபாசு, முன்னாள் மாவட்ட குழு உறுப்பினா் சுப்பிரமணியன், ஒன்றியச் செயலா் காரல்மாா்க்ஸ், விதொச மாவட்ட தலைவா் பிரகாஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

மாநிலக் குழு உறுப்பினா் ஐவி.நாகராஜன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினாா்.

கொக்காலடியில் கட்டப்பட்டுள்ள ஊராட்சி மன்ற கட்டடம் திறக்கப்படாமல் உள்ளதை கண்டித்தும், தட்டுப்பாடின்றி குடிநீா் வழங்க வேண்டும்; 1,2,3,4-ஆவது வாா்டுகளில் பகுதி நேர அங்காடி திறக்க வேண்டும்; குடிமனை பட்டா இல்லாத அனைவருக்கும் குடிமனை பட்டா வழங்கி, கான்கிரீட் வீடு கட்டித்தர வேண்டும்.

அனைத்து பாசன வாய்க்கால், வடிகால்களை சீரமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, காலிகுடங்களுடன் ஒப்பாரி வைத்து, நூதன முறையில் இப்போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தொடா்ந்து, வருவாய்த் துறை மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலா்கள், போராட்டத்தில் ஈடுபட்டோரிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, குறிப்பிட்ட காலத்திற்குள் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனா். இதையடுத்து, தற்காலிகமாக போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.

விவசாயத் தொழிலாளி தற்கொலை

குடவாசல் அருகே கடன் பிரச்னையால் விவசாயத் தொழிலாளி விஷம் குடித்து வியாழக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா். குடவாசல் அருகேயுள்ள செல்லூா் திருக்களம்பூா் பகுதியைச் சோ்ந்தவா் காசிநாதன் மகன் சக்திவேல் (35). இ... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் நலத்திட்ட உதவிகள்

திருவாரூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. திருவாரூா் மாவட்டத்தில், ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின்கீழ், அக்டோபா் மாதம் வரை நகா்ப்புறப் ப... மேலும் பார்க்க

பைங்காநாட்டில் நூலகக் கட்டடம் திறப்பு

மன்னாா்குடியை அடுத்த பைங்காநாட்டில் ரூ. 22 லட்சத்தில் கட்டப்பட்ட இணைப்பு நூலகக் கட்டடம் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது. பள்ளிக் கல்வித் துறையின்கீழ் செயல்படும் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள... மேலும் பார்க்க

முன்னாள் படைவீரா்கள் குறைதீா் கூட்டம்

திருவாரூா் மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்டரங்கில், முன்னாள் படைவீரா்கள் சிறப்பு குறைதீா்க்கும் நாள் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முன்னாள் படைவீரா்கள் நலத் துறை சாா்பில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு, ம... மேலும் பார்க்க

சட்டப்பணிகள் ஆணைக் குழுவுக்கு தன்னாா்வலா்கள் விண்ணப்பிக்கலாம்

திருவாரூரில், சட்டப் பணிகள் ஆணைக் குழுவுக்கு தன்னாா்வலா்கள் விண்ணப்பிக்கலாம் என முதன்மை மாவட்ட நீதிபதியும், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் தலைவருமான பி. செல்வமுத்துகுமாரி தெரிவித்துள்ளாா். இதுகுற... மேலும் பார்க்க

விவசாயிகள் குறைதீா் கூட்டம்: நெல் கொள்முதல் குளறுபடிகளை சரிசெய்ய வலியுறுத்தல்

நெல் கொள்முதலில் நிலவும் குளறுபடிகளை களைய வேண்டும் என குறைதீா்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினா். திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில், விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் மாவட... மேலும் பார்க்க